46. திருமூலநாயனார்
கயிலைவாழ் சித்தர்களில் நந்திதேவரருள் பெற்ற மாணாக்கர் சுந்தரநாதன். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சிறந்த சிவயோகி. அவரின் நண்பர் அகத்தியர். அவர் பொதிய மலையில் எழுந்தருளியுள்ளதால் அவரோடு சில நாள் தங்கியிருக்க எண்ணம் கொண்டு கயிலையிலிருந்து புறப்பட்டார். திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி(அவிமுத்தம்) விந்தியமலை, ஆகிய தலங்களில் வழிபாடு செய்து திருப்பருப்பதம், திருக்காளத்திநாதர், காஞ்சி ஏகாம்பரநாதர் ஆகிய தலங்களிலும் முப்புரமெறிந்த திருவதிகை நாதரை வழிபட்டு திருபெரும்பற்றப்புலியூரில் சிவானந்த திருக்கூத்தினை கண்டு களித்து காவிரியில் நீராடி தென்கரையில் உள்ள திருவாவடுதுறை அடைந்தார்.
அங்கு காவிரிக்கரையில் இடையர்குல மூலன் விடம் தீண்டி உயிர் துறக்க பசுமாடுகள் அவன்மேல் கொண்ட அன்பால் அவனைச் சுற்றிவந்து அழுது கொண்டிருந்ததை பார்த்தவர் தன் மேனியை ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் மூலம் மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தார். பசுக்கள் சந்தோஷமடைந்தன. மாலை வந்ததும் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூர் நோக்கி செல்ல மூலரும் பின் தொடர்ந்தார். பசுக்கள் யாவும் அதனதன் வீட்டிற்கு சென்றன. வீதியில் நின்ற அவரை பசுக்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் மூலன் வரவில்லை என்பதால் அவனைத் தேடிவந்த அவன் மனைவி அவன் வீதியில் நின்றிருப்பதைக் கண்டு அவன் அருகில் வர விலகி நின்றார். அவளை நோக்கி நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக்கூறி வீட்டிற்கும் செல்லாமல் மண்டபத்தில் யோகத்தில் இருந்தார். அவர் மனைவி அவர் வீட்டிற்கு வரமறுப்பதை ஊர் பெரியவர்களிடம் கூற யோகியரைக் கண்டு வந்தவர்கள் உண்மையறிந்து அப்பெண்ணைக் கூட்டிச் சென்றனர். அடுத்த நாள் காலை யோகி பசுக்கள் வந்தவழி சென்று தாம் மறைத்துவைத்த இடத்தில் தன் உடம்பு இல்லாதது கண்டு சிவபெருமான் உடலை மறைத்தது கண்டு அவர் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருளை எல்லாம் தமிழ் ஆக்க எம்பெருமான் இவ்வுடல் தந்துள்ளார் என்பதை முற்றுணர்வினால் உணர்ந்தார். பின் தொடர்ந்த ஆயர் குலத்திற்கும் தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என உணர்த்தினார்.
திருவாவடுதுறையை அடைந்து பெருமானை வணங்கி கோவிலின் மேற்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் அமர்ந்து சிவயோகத்தில் இறையுடன் ஒன்றினார். இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையாக விரிந்து மலரும் நல்ல திருமந்திரமாலை என்ற நூலை ஆண்டுக்கு ஒருமுறை ஒருபாடல் வீதம் 3000 பாடல்கள் அருளினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சொற்தொடரை தந்தவர் திருமூலரே. சைவ சித்தாந்தங்களுக்கு முன்னோடி திருமந்திரம்.
திருவாவடுதுறை- கோமுக்தீஸ்வரர்- திருமூலர் பசுக்களுக்கு உதவி செய்ததைக் குறிப்பிட பெயர் பெற்றது.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******