28. கோட்புலிநாயனார்
திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளான் குடியில் கோட்புலியார் பிறந்தார். சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று வெற்றி பெற்று புகழடைந்தவர். மன்னன் தரும் நிதிக் குவியலை சிவபெருமானுக்கு திருஅமுதுக்குரிய செந்நெல் கொடுத்து மகிந்தார். நெல்லைக் குவித்து திருக்கோவில்களில் உள்ளபெருமான் அமுது படிக்கு அளித்து மகிழ்வார்.
ஒரு சமயம் மன்னன் ஆணைபடி போர்முனைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிவபெருமான் அமுது படிக்காக தாம் திரும்பி வரும் அளவும் போதுமான நெல் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது குடும்பத்தினரை அழைத்து இது சிவனுக்குரியது நான் திரும்பும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டினார்.
ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றத்தார்கள் அமுதுபடிக்காண நெல்லை இறைவனுக்கு படைக்காமலேயே எடுத்து உண்டனர். போர்முனையில் வெற்றி பெற்று மன்னன் கொடுத்த பொற்குவியலுடன் ஊருக்கு வந்தவர் சிவனுக்குரியதை எடுத்து சுற்றத்தார் நைவேத்தியம் செய்யாமல் உண்டதையறிந்து சினம் கொண்டு உறவினர்களை அழைத்து ஒவ்வொருவராய் வெட்டிக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையையும் வெட்ட வாளை ஓங்க காவலன் ஐயா இச்சிறுகுழந்தை என்ன செய்தது. கொல்லாதீர் என்றதற்கு இது உணவு உண்ணவில்லை. உணவு உண்ட அதன் தாயின் பாலை அருந்தியதுதான் குற்றம் எனக்கூறி வாளினால் வெட்டினார்.
சிவபெருமான் தோன்றி உன்வாளினால் வெட்டுண்ட சுற்றத்தினர் பாவத்தினின்றும் விடுபெற்று பொன்னுலகில் இன்புறுவர். நீயும் சிவபதம் அடைவாயாக என்றார்.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******