4. அரிவாட்டாயநாயனார்
கணமங்கலம் என்ற புள்ள மங்கலம் ஊரில் தாயர் தோன்றினார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள். அவர்களின் பணி செம்மையாக நடைபெற்று வந்தது.
தாயரின் தொண்டின் சிறப்பு உலகறியவும் அவரை ஆட்கொள்ளவும் கருதினார் சிவபெருமான். அதன் விளைவாக தாயரின் செல்வம் நாளுக்கு நாள் குறந்தது. செல்வம் இல்லா நிலை ஏற்பட்டபோது தாயர் நெல் அறிந்து தரும் கூலி வேளைக்குச் சென்றார். கூலியாகப் பெற்ற நெல்லில் செந்நெல்லை பெருமான் வழிபாட்டிற்கும் கார்நெல்லைத் தனக்கும் பயன்படுத்தினார். ஊரில் எங்கும் செந்நெல்லே விளந்தது. கார் நெல்லே இல்லை. கார் நெல் கிடைக்காமையால் உணவுக்கு தட்டுப்பாடு வந்தது. கிடைக்கும் கீரைகளை சமைத்து சாப்பிட்டனர். எப்படியிருப்பினும் இறை வழிபாட்டிற்கு செந்நெல் கிடைக்க மகிழ்வுடன் தொடர்ந்து அமுது படைத்து வழிபட்டார்.
நாட்கள் கடந்தன. கீரையும் கிடைக்கா நிலை. கணவன் மனைவி இருவரும் தண்ணீரையே அருந்தி வாழ்ந்தனர். பலநாள் உணவு இல்லாமையால் உடல் சேர்ந்தது. உள்ளம் தளராமல் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக் கொண்டு கோவில் நோக்கி சென்றனர். வயல்வெளி குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி தாயர் கீழே சாய்ந்தார். வயல் வெளியில் ஆண்டவனுக்கு வைத்திருந்த செந்நெல்லும் செங்கீரையும் சிதறிக்கிடந்தது.
இனி கோவிலுக்குப்போய் என்ன செய்யப் போகின்றோம் என் வழிபாடும் திருத்தொண்டும் இன்றோடு முற்றுப் பெற்றது. இனி வாழ்ந்து என்ன பயன் எனக் கருதிய தாயர் அரிவாளைக் எடுத்து தன் கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது ஒருகரம் தாயரின் கையைத் தடுத்தது. பெருமான் விடைமேல் தோன்றி “நீ புரிந்த செயலால் நாம் மகிழ்வுற்றோம், நீயும் உன் மனைவியுடன் என்றும் நம் உலகில் வாழ்வாயாக” என அருள் செய்து அருளினார். அரிவாளால் தன் ஊட்டியை அரிந்ததால் அரிவாட்தாயர் என்ற பெயர் உண்டாயிற்று.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரிய நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******