gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

திருநாவுக்கரசர்

Written by

திருநாவுக்கரசுநாயனார் (அப்பரடிகள்)
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார்.
வேளான் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தனர். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.
கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.
தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கிய காலம். நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமணசமயம் சார்ந்தார். சமண சமய வேத நூல்களைக் கற்று ‘தருமசேனர்’ என்றபெயரோடு மடாதிபதியானார். தலையிடமான கடலூர் சென்று கொள்கை விளக்கி மக்களை சமண சமயத்தின் பால் ஈர்த்தார். இதைக் கண்ட திலகவதியார் மணம் நொந்தார். அதிகை வீரட்டானம் சென்று தினமும் அலகிட்டு, மெழுக்குமிட்டு, பூமாலை புனைந்து ஏத்தி அப்பெருமானைப் புகழ்ந்து பாடினார். பெருமானே’ ‘நீ என்னை ஆட்கொள்வதானால் அது உண்மையானால் என் தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும். தாங்கள் கருணை புரிய வேண்டும்' என வழிபட்டார்.
ஒருநாள் தருமசேனருக்கு வயிற்றில் சிறு வலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் மருந்து கொடுத்தும், மந்திரங்கள் ஓதியும் ஒன்றும் குணமாகவில்லை. வலி அதிகரித்தது. அப்போது தமக்கையாரின் நினைவு வந்தது. நம்பிக்கைக்குரிய சமையல் காரர் ஒருவரை தமக்கையிடம் அனுப்பிவத்தார். அவர் சமண மதம் சார்ந்த தம்பியை பார்க்க மறுத்துவிட்டதை கூற, இந்த சூலை நோயை நீக்க முடியாத சமணத்தால் பயன் இல்லை. தன் தமக்கை திருவடியே சரணம் என உறுதி பூண்டார்.
சமண சமயத்தின் சொத்தாக இருந்தன எல்லாம் விட்டு வெள்ளாடை தரித்து வேண்டிய ஒருவரின் கைபிடித்து திருவதிகை அடைந்தார். தமக்கையின் பாதங்களில் வீழ்ந்தார். மருள் நீக்கியே இச்சூலைநோய் இறைவனின் திரு அருளே, நீ இறைபணி செய்வாய் என கூறினார். தமக்கை முன் செல்ல பின் தொடர்ந்து திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவிலை நோக்கி சென்றார். கோவிலை வலம் வந்து பதிகம் பாடினார். அருள் பெற்று சூலை நோய் ஒழிந்தது. வானில் ஓர் ஒலி ‘செந்தமிழ் சொல் மலர்களால் ஆன பாமாலை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக’ என்று எழுந்தது.
ஆலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்தது. கோவில்களில் புல்லும் பூண்டும் முள்செடியும் வளர்ந்து மக்கள் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டது. திருநாவுக்கரசு அவர்கள் உழவாரம் என்ற கருவிகொண்டு திருஅதிகை வீரட்டானப் பெருமான் கோவில் ஆலயத் திருப்பணிகளைச் செய்தார். அதைக் கண்டு வெகுண்ட சமண துறவிகள் பல்லவ மன்னனிடம் தரும சேனர் பற்றி கூறி கோபமூட்ட மன்னர் தருமசேனரை கைது செய்ய சொன்னார்.
திருஅதிகை சென்ற வீரர்களிடம் நான் பல்லவ நாட்டுக் குடிமகன் அல்லன். நாம் யார்க்கும் குடி அல்லோம். சிவனைத் தவிர யாருக்கும் பணிய மாட்டோம் என்றார். அமைச்சர்களும் மற்றவரும் நீங்கள் மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும் எம் பொருட்டு வரவேண்டும். உம்மை விட்டுச் சென்றால் எம்மைத் தண்டிப்பான். என்றதை ஏற்று பல்லவன் அரண்மனை சென்றார். தருமசேனர் வருவது கண்ட மன்னன் அவரை சந்தியாமலே ‘அவரை நீற்றரை- சுண்ணாம்பு கொதிக்கவைக்கும் அறையில் இடுங்கள்’ என ஆணையிட்டார். உள்ளே சென்றவர் தில்லை கூத்தபெருமான் திருவடி நினைத்து வழிபாடு செய்தார். சுண்ணாம்பு கொதிக்கும்போது உண்டகும் ஓசை வீணையின் நாதமாகவும், வீசும் துர்நாற்றம் மனம் வீசும் தென்றலாகவும், கொதிக்கும் நீர் தாமரைக்குளம்போன்று குளிர்ந்தும் இருக்க திருநாவுக்கரசர் எட்டு நாள் கழிந்து இன்பமுடன் வருவதைக்கண்டோர் அவருக்கு நஞ்சு கலந்த பால் சோறு தர அது அமுதமானது.
நஞ்சுண்டும் இன்பமாய் இருந்தவரைக்கண்ட சமணர்கள் பட்டத்து யாணையை கொண்டு மிதிக்க ஏற்பாடு செய்தனர். யானை தன்னை நோக்கி வருவது கண்ட திருநாவுக்கரசர் சிவனை நோக்கி அச்சம் தவிர்க்கும் பாடலைப் பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கியது. நெஞ்சம் கலங்கிய சமணர்கள் ‘கல்லிலே கட்டி கடலிலே போட’ ஆணையிட்டார். நாவுக்கரசர் பாட்டால் கல்லும் கரைந்து மிதந்து கரையேறவிட்ட குப்பம் அடைந்தார். உண்மையறிந்த பல்லவ மன்னன் சமணம் விட்டு சைவம் சார்ந்தான். திருஞான சம்பந்தர் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
அதிகை வீர்ட்டாதினத்தில் சிலகாலம் தொண்டு புரிந்து சிவத்திருத்தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சீர்கெட்ட நிலைகளை மாற்றப் புறப்பட்டு வெண்ணெய்நல்லூர், திருவாமத்தூர், திருக்கோவலூர், வழிபட்டு பெண்ணாகடம் வந்தார். அப்போது அவர் மனத்தினுள் தான் சமணராய் இருந்து அவர்தம் சோற்றைப் புசித்ததால் உடல் மாசு பட்டது என்றும் அதை நீரால், நெருப்பால் போக்கவேண்டும் என நினைத்தார். அதிகாலை எழுந்து திருக்கெடில நதியில் குளித்து மகிழ்ந்தார். எஞ்சிய மாசும் பாவமும் சுட்டெரிக்க வேண்டுமென என்னினார்
தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர் கொழுந்தீசரைப்பார்த்து, என் உயிர் உடம்பில் இருக்க வேண்டுமானால் எனது தோளில் இடபச் சூலக்குறி- முத்திரை பொறிக்க வேண்டும் என்றார். வேண்டுகோள் ஏற்கப்பட்டு சிவகணம் அதை பொறித்தது. திருநாவுக்கரசர் அகம் குளிர்ந்தார். தில்லைசென்று கருநட்ட கண்டனை, பத்தனாய்ப் பாடமாட்டேன், அன்னம் பாலிக்கும் தில்லை, அரியாணை அந்தணர் தம் சிந்தையானை முதலிய பல பதிகங்கள் பாடி களிப்புற்றார்.
தில்லையிலிருந்து ஞானசம்பந்தப் பெருமானின் பெருமை கேட்டு சீர்காழி நோக்கிச் சென்றார். நாவுக்கரசர் பெருமை அறிந்த சம்பந்தர் அவர் வருவதை அறிந்து அவரை எதிர்கொண்டழைத்து ‘’அப்பரே வாருங்கள்‘’ என்றார். அதுமுதல் அப்பரடிகள் எனப்பட்டார். சில நாட்களுக்குப்பின் சோழநாட்டுத்தலங்களை வழிபட விரும்பி ஞானசம்பந்தரிடம் விடைபெற்று பலதலங்கள் வழியாக திருச்சக்தி முற்றம் வந்தடைந்தார். அங்கு சிவக்கொழுந்தீசரிடம் ‘உன் அழகிய பொன் போலும் திருவடியை என் தலைமேல் சூட்டியருள வேண்டும் என்று தன் ஆசையைச் சொல்ல பெருமான் நல்லூருக்கு வரப்பணித்தார்.
நல்லூரில் பெருமான் பாதம் பணிந்த அப்பரடிகளுக்கு உம்முடைய நினைப்பை முடித்து வைக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசை பாதமலர் சூட்டினான். நல்லூரிலிருந்து புறப்பட்டு திருப்பழன நாதரை வழிபட நினைத்து திங்களூர் வந்தார். அந்த ஊரில் அப்பூதியார் திருநாவுக்கரசு என்றபெயரால் தண்ணீர்பந்தல், சோலைகள், குளங்கள், சாலைகள் முதலிய அறங்களைச் செய்து வந்தார். அவர்தம் இல்லத்தில் உணவு அருந்த இசைந்தார். இலை அறுக்கச் சென்ற அவர் மூத்தமகன் பாம்பு கடித்து இறந்தார். ‘ஒன்று கொலாம்’ என்ற பதிகம் பாடி உயிர்பித்து பயணம் தொடர்ந்தார்.
திருப்பழனத்திலிருந்து திருவீழிமிழலை சென்றார். அங்கு அப்பரடியாருடன் சம்பந்தரும் சேர்ந்து தங்கியிருந்த சமயம் மழையின்மையால் ஏற்படும் சோகங்கள் ஏற்பட்ட. மக்கள் துன்பம் மிகுந்தனர். அடியவர் இருவரும் இந்நிலை நினைந்து பெருமானை நினைந்து கண்ணயர்ந்திருந்தனர். ‘உம்பால் நிலவும் சிவநெறி சார்ந்தோர் வாட்டம் அடையாவாண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மேற்குமாக அமைந்த பலிபீடத்துத் தருவோம்’ என அருளினார். அவ்வண்ணம் கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு மடம் அமைத்து அடியவர்களுக்கு தொண்டாற்றினர்.
நாவுக்கரசர் மடத்தில் எல்லோரும் உணவு உண்டபின்தான் சம்பந்தர் மடத்தில் தொடங்கும். காலதாமதத்திற்கு காரணம் காசு மாற்று குறைவாக இருப்பதால் என்பதை அறிந்த சம்பந்தர் மாசில்லாப் பெருமானே நீவழங்கும் காசு மாசுடையதாக இருக்கலாமோ, நான் கைத்தொண்டு செய்ய வில்லை என்றாலும் நீ வழங்கும் காசில் குறையிருக்கக் கூடாதல்லவா, உன்னையாரும் ஏச மட்டார்கள், வேதத்தினைக்கொண்ட இறைவனே கறையுடைய காசினை நீக்கி நல்ல காசினை தருவாயாக எனப் பாடி பெற்றார். நாடு செழித்து வளாம் பெற்றபின் இருவரும் திருமறைக்காடு சென்றனர்.
முன்னொரு காலத்தில் வேதம் மறைக்காடரை வணங்கிக் கதவினை மூடியதாம். அக்கதவு திறக்கப்படாமலேயே இருக்க மக்கள் மாற்று வழியில் சென்று வழிபடு வந்தனர். அங்கு சென்றவுடன் ஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து தாங்கள் தீந்தமிழில் பாடி கதவைத்திறங்கள் என வேண்டினார். அப்பர் ‘பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரே’ எனத் தொடங்கி 9 பாடல்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. வேதனைபட்டு ‘அரக்கனை விரலாற் கொன்ற பெருமானே, இரக்க மென்றிலீர்’ எனப் பத்தாவது பாடல் பாடியவுடன் கதவு திறந்தது.
வழிபாடு முடிந்து இருவரும் வாயிலை அடைந்தனர். அப்பரடிகள் சம்பந்தரைப்பார்த்து இக்கதவு மூடவும் பின்னர் திறக்கவும் பாடுங்கள் என்றார். ‘சதுரம் மறைதான் துதிசெய்து’ என்ற பாடல் பாடியதும் கதவு மூடியது. இருவறும் மகிழ்வுடன் மடம் வந்தனர்.
அப்பரடிகள் தான் 10 வது பாடல் பாடியதும்தான் கதவு திறந்தது, சம்பந்தர் முதல் பாட்டு பாடியவுடன் கதவு மூடியதே, இறைவன் உளக்குறிப்பை அறியாமல் யாதேனும் தவறு செய்தோமா என வருத்துடன் படுத்தார். அப்போது சிவ பெருமான் சைவ வேடத்துடன் தோன்றி வாய்மூரில் இருப்போம் என்னை பின் தொடர்ந்து வருக எனப் பணிக்க நாவுக்கரசர் அவர் பின் சென்றார். அண்மையில் இருப்பதுபோல் இருந்து மறைந்தார்.
சம்பந்தர் எழுந்து அப்பரடிகள் எங்கே என்றார். வாய்மூர் சென்றார் என்பதை அறிந்து வாய்மூர் வந்தார். சம்பந்தரைக் கண்ட அப்பர் வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டமெல்லாம் என்னிடம்தான் செல்லும். மறைக்கதவம் திறக்கப் பாடிய என்னை விடவும் உறுதிப் பொருள் பாடி அடைப்பித்த அருட்செல்வர் எதிரே நிற்கிறார் இப்போது உம்மை மறைத்துக் கொள்ளும் வல்லமை உண்டோ. உன் அருட் காட்சியைக் காட்டு என்றார். திருவாய்மூர் பெருமான் ஞானப் பிள்ளயார் திருமுன் தோன்றி ஆடல் காட்டியருளினான். தாம் கண்ட காட்சியை அப்பரடிகளுக்கு காட்டி மகிழ்ந்தார் சம்பந்தர், திருவாய்மூரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிப்பட்டு திருவாரூர் சென்றடைந்தார்.
திருவாருக்கு அருகில் ஏமாப்பூர் என்ற ஊரில் நமிநந்தி அடிகள் எனும் அந்தணர் வாழ்ந்துவந்தார். தினமும் ஆரூர் சென்று புற்றிடங்கொண்டானை வழிபட்டு வருவார். ஓர்நாள் ஆருரில் உள்ள அரநெறி தலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய விரும்பினார். மாலைப் பொழுதாகையால் ஊர் சென்று நெய் கொண்டு வரமுடியாது. அருகில் உள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் கிண்டலாக உன் சிவன் கையில் நெருப்பு வைத்திருக்கின்றானே பின் ஏன் விளக்குக்கு நெய் தேடுகிறீர்கள். தேவையானல் குளத்து நீரில் விளக்கு வைக்கலாமே என்றனர். வேதனையோடு ஆண்டவனிடம் முறையிட விண்ணொலி, அன்பனே, இக்குளத்து நீரைக் கொண்டே விளக்கேற்று’ என எழுந்தது. நமிநந்தியடிகள் குளத்தின் நடுவே சென்று நீரில் மூழ்கி நீர் கொணர்ந்து விளக்கில் ஊற்றி விடியும் வரை எரித்தார். அனுதினமும் நீரால் விளக்கேற்றி வழிபட்டார். இச்செய்தி எங்கும் பரவியது. இதை நாவுக்கரசர் ‘தொண்டர் ஆணி; எனக் குறிபிட்டார். பின் நாவுக்கரசர் ஆருரிலிருந்து புறப்பட்டு பலதலங்களை வழிபடு பழையாறை வந்தார்.
அங்கிருந்து தூரத்தே தெரிந்த கோபுரத்தை கையைமேலே தூக்கி வணங்கினார். அருகிலிருந்தோர் அவரைப் பார்த்து நகைத்து அங்குள்ள சிவன் கோவிலை சமணர்கள் ஆக்கிரமித்து சிவனை மறைத்துள்ளார்கள் என்றனர். நாவுக்கரசர் அங்கேயே அமர்ந்து பெருமானே, சமணர் வஞ்சனையால் மறைக்கப்பட்ட உன் திருமேனி காணாமல் இவ்விடம் அகலமாட்டேன் என உண்ணாமலும் இருந்தார். சிவபெருமான் பழையாறை மன்னன் கனவில் தோன்றி சமணர்களால் நாம் வடதளியில் மறைக்கப் பட்டிருக்கின்றோம், உண்ணாமை பூண்டிருக்கும் நாவுக்கரசர் வெளிப்படையாக வழிபடும் வகையாக ஆவன செய் எனகூறி மறைந்தார்,
மன்னன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி தடைகளை நீக்கி பெருமானை வெளிக் கொணர்ந்தான். அப்பரடிகள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவருடன் சென்று வடதளிநாதனை வணங்கி கோவிலுக்கு புதிய கோபுரம் எழுப்பினான். நாவுக்கரசர் இங்கிருந்து கிழம்பி திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவெறும்பூர், திருப்பராய்த்துறை தலங்களை வழிபட்டு திருப்பைஞ்ஞீலியை நோக்கி சென்றார். வழியில் தாகத்தினாலும் களைப்பினாலும் இளைப்புற்றார். அவர் வரும் வழியில் ஓர் அந்தணர் வடிவுடன் பெருமான், பசியால் மிகவும் களைத்துள்ளீர், இப்பொது சோற்றை உண்டு இனிய நீரும் பருகிச் சோலையில் ஓய்வு எடுத்து செல்லுங்கள் என்றார். நாவுக்கரசருடன் திருப்பைஞ்ஞீலிவரை வந்தவர் மறைந்தார். இறைவன் கருணையை நினைத்து பதிகம் பாடினார்.
திருப்பைஞ்ஞீலியிலிருந்து புறப்பட்டு பலதலங்களைக் கடந்து அண்ணாமலை தலம் வணங்கி திருவோத்தூர் சென்று அங்கிருந்து காஞ்சி சென்றார். காஞ்சி ஏகம்பத்துறைப் பெருமானை வணங்கி மகிழ்ந்தார். கச்சிப்பெருமானை வழிபட்டு திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவாலங்காடு, திருக்காரித்துறை, மயிலாப்பூர் முதலிய தலங்களை வழிபட்டு பொன்முகலி ஆற்றில் மூழ்கி திருக்காளத்தி குடுமித்தேவரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது கயிலைநாதரை வணங்க ஆவல் கொண்டார். கயிலை நோக்கி புறப்பட்டார்.
காடு, மலை கடந்து ஆந்திராவின் திருப்பருப்பதத்தை- ஸ்ரீசைலம் அடைந்தார். அங்கிருந்து ஆறு, மலைகளைக் கடந்து காசி சென்று விசுவநாதரை வணங்கினார். அங்கிருந்து புறப்பட்டு மலைகளைக் கடந்தார் நதிகளைக் கடந்தார். காய் கனி கிழங்கு முதலியன உன்பதையும் தவிர்த்து இரவு பகல் பாராது சென்றார். கையும் காலும் தேய்ந்து சதை பிய்ந்து உதிரம் பெருகியது. அதனுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அயர்ச்சியில் மயங்கினார்.
பெருமான் நாவுக்கரசர் முன் அடியவராகத் தோன்றி, பெரியவரே, சதையெழிய, எழும்பு நொறுங்க இப்பனிக்காட்டில் தாங்கல் செல்லும் காரணம் என்ன என்றார். நவுக்கரசர் எம்பெருமான் கயிலைநாதனை தரிசிக்க செல்கின்றேன் என்றதற்கு அடியவர், அங்கு மானுடர் செல்வது கடினம் உம்முயற்சி வீண், திரும்பிப்போவதே மேல் என்றார். நாவுக்கரசர் என்றைக்கிருந்தாலும் ஒர்நாள் அழியும் இவ்வுடல். இதைகொண்டு அழியாத நாதனைக் காண்பேன் என்றார்.
அப்பரடிகளின் நெஞ்சத்துணிவினை அறிந்த அண்ட நாயகன் விண்ணிடை மறைந்து நின்று ஓ, நாவுக்கரசரே எழுந்திரு என உறைத்து அருளினார். உடலில் வீழ்ந்த சதையெலாம் ஒட்டியது. உறுப்புகளெல்லாம் முன்போல் ஆனது. நாவரசர் வானத்தில் மறைந்து குரல் கொடுத்த பெருமானை நோக்கிப் பணிந்தார். இங்குள்ள பொய்கையில் மூழ்கி நாம் கையிலையில் இருக்கும் காட்சியினை திருஐயாற்றில் கண்டு மகிழ்வாயாக என அருளினான்.
நாவரசர் திருத்தாண்டகம் பாடி திருஐந்தெழுத்தை ஓதி அவ்வாவியில் மூழ்கி திருஐயாற்றில் உள்ள ஒரு தடாகத்தில் தோன்றிக் கரையேறினார். பெருமான் கருணையை நினைந்து உருகிக் கண்ணில் நீர் சொரிய இறைவனை வணங்கச் செல்ல அங்கு இருப்பதெல்லாம் கயிலையில் இருப்பது போன்று உணர்ந்தார். நந்தியைக் கண்டார் சிவபெருமான் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டார். ஆனந்தத்தில் திளைத்தார். சிறிது நேரத்தில் அக்கயிலை காட்சி மறைந்து திருவையாறு அமர்ந்த பழைய நிலையினை உணர்ந்தார். திருப்பதிகம் பாடியருளினார். ‘முன்னே கண்டேன் அவர் திருப்பாதம், அதன்பின் கண்டறியாதன் கண்டேன்’ என்றார்.
அப்பரடிகள் சைவம் தழைக்கத் தொண்டர்களை உருவாக்க தாமே திருப்பூந்துருத்தி எனும் ஊரில் மடம் அமைத்தார். அங்கு தங்கி பல பதிகங்கள் பாடினார். ஞானசம்பந்தர் பாண்டிநாடு சென்று சோழநாடு வந்தார். அப்பரடிகளைத்தேடி திருப்பூந்துருத்தி சென்றார். சம்பந்தர் வருவதை அறிந்த அப்பரடிகள் எதிர்சென்று கூட்டத்தில் கலந்து சம்பந்தர் பல்லக்கை தாங்கினார். அப்பரடிகள் எங்கே என்று கேட்டபொழுது அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பேறு பெற்று இங்குள்ளேன் என்றதைக்கேட்ட சம்பந்தர் பதறி பல்லக்கில் இருந்து கீழே குதித்து அப்பரடிகளை வணங்கினார்.
சிலநாட்கள் கழித்து சம்பந்தரிடம் விடைபெற்று பாண்டிநாடு சென்றார். நெடுமாறான் மங்கையர்கரசி, குலச்சிறையார் ஆகியோர் விருந்தினராகத் தங்கி தல யாத்திரை மேற்கொண்டார். திருப்புகலூர் வந்து உழவாரப்பணி செய்து தங்கினார். அங்கு நின்ற தாண்டவம், வாழ்த்துத் திருத்தாண்டகம், திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆரூயிர் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசத் திருப்பதிகம், அறைகூவும் திருப்பதிகம் முதலிய பாமாலைகளைப் பாடினார். அங்கு உழவாரப்பணி செய்தபோது பொன்னும் நவமணியும் வந்தது. ஓடும் செம்பொன்னும் ஒன்றாக கருதிய அப்பரடிகள் அவைகளை தூர எறிந்தார்.
புகலூர் இறைவன் தன்னை திருவடியில் இருத்திக் கொள்வான் என முன்னுணர்வு காரணமாக, ‘புண்ணியத்தின் வடிவமாக விளங்கும் பெருமானே, உன் திருவடிக்கு வர நான் விரும்பினேன்'என பதிகம் பாடினார், கருவறையில் சோதி எழ அதிற் கலந்து பேறு பெற்றார். 81 ஆண்டுகள் வாழ்ந்த அப்பரடிகள் இறைவன் திருவடியை பணிவதுதான் அவரை அடிய முக்கிய வழியேயன்றி சாதியும் சாத்திரமுமல்ல என்றார். 

                                            

அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/3.சுந்தரர்/4.மாணிக்கவாசகர்

                                            ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27043297
All
27043297
Your IP: 18.117.152.251
2024-04-19 22:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg