gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-1.ஓய்வு!

Written by

ஓய்வு!                                                                                                                              

நீங்கள் ஓர் சீரிய நோக்குடன் செயலாற்றினீர்கள். மேன்மை அடைந்தீர்கள். வேறொருவர் வேறொரு நோக்குடன் செயலாற்றி மேன்மைபெற்றுள்ளார். அதில் திறமையும் செயலும்தான் முன்னேற உதவியுள்ளது. இதில் அந்தஸ்து என்பது என்ன! எங்கிருந்து வந்தது! சமூகத்தில் ஓர் குறிப்பிட்ட உயர்விற்குப்பின் அதற்கு அந்தஸ்து எனக்காரணம் கொண்டு வீண்மனப் போராட்டத்தில் குழம்பிவிடாதீர்.
உங்கள் நண்பர்கள், உற்றார்- உறவினர்கள் தனித்தனி நோக்கங்களுக்காக உழைத்து தீவிர செயல்பாட்டினால் இன்றைய நிலைக்கு வந்திருக்கலாம். வேறு பாதைகளில் வென்றிருக்கலாம். அந்த வேறுபாடுகளை அப்படியே பாருங்கள். அன்பு கொண்டு பழகுங்கள்.
அவ்வாறில்லாமல் அவர்களின் அந்தஸ்து எனவேறுபடுத்துவது உங்களிடையே உள்ள அகங்காரத் தன்மைதனைக் காண்பிப்பதாகும். இந்த அகங்காரம் போட்டி, பொறாமை, பொய், ஏமாற்றுதல் என மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
உங்களிடம் உள்ள அகங்காரத்தைப் பற்றி கேள்வி கேட்காதவர்களே உங்களிடம் உறவு கொண்டிருக்க முடியும். உங்கள் குறைபாடுகளை ஆதரிப்பவரே உங்கள் நண்பராகமுடியும், என்றால் உங்களின் செயல்களை குறைகூறி சுட்டிக்காட்டுபவர் உங்களின் எதிரியல்ல. அவ்வாறு குறைகள் சொல்வதினால் உங்கள் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாகலாம். உண்மைதனை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குறைபாடுகளை கவனித்துச் சொல்லி உங்கள் வாழ்வுப் பயணத்தில் நீங்கள் அவைகளை வெற்றிகரமாகக் கடந்து செல்ல உதவுவதே அவர்களின் நோக்கம். அவர் உங்களுக்கு குருவாவர். மற்றவர்கள் போல் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக நட்பு பாராட்டி பேசமாட்டார். உங்களை மேன்மை நிலைக்கு கொண்டு செல்ல அவர் ஆலோசனைகள் உதவும்.
எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும், அதுதான் அந்தஸ்து என நீங்கள் நினைத்திருந்தாலும், மேலும் மேலும் உயரச் சென்றாலும் ஓர் நிலையில் ஓர்நாள் ஒய்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவீர்கள். உங்கள் பதவி, அந்தஸ்து மறைந்து சாதாரணமான மனிதனாக மாற்றம் வரும். இதுகாரும் கொண்டிருந்த அதிகாரம், பதவி, வசதிகள் எல்லாம் பறிபோகும்.
ஒய்வுக்குப்பின் எதுவும் நிரந்தரம் அன்று. 20, 30, 40 வருடங்கள் என்று செயல்பட்டிருந்தாலும் ஓய்வு நிச்சயம் என்ற நிலையில் மனிதா உன் வாழ்வின் பயணத்தின் முடிவு பற்றியும் தெரிந்து கொள். முயற்சி செய். அப்போது உனக்கு எது சந்தோஷம் அளிக்கும், நன்மை பயக்கும் எனயோசி. தெளிவு கொள். தேர்வு செய். நல்லது நினை. செயல்படு. இப்பூஉலக வாழ்வில் உன் இயக்கம் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க, வாழ செயல்படு.
ஒய்வு என்பது வேலை ஒன்றுமே இல்லாதவருக்கானதல்ல. ஓவ்வொரு செயலையும் உண்மையாக செய்பவருக்குத்தான் அதன் அர்த்தம் புரியும். ஓய்வு எடுக்க விரும்பும் ஆன்மாக்களே, நீங்கள் முழுமையாக செயல்களில் ஈடுபட்டிருந்தால்தான் அதன் பலன் தெரியும். விதைப்படிதான் செடி, கொடி, மரங்கள் எல்லாம் தோன்றுகின்றன்.
எந்த ஒன்றும் தான்தான் பெரியது என போட்டிகொண்டு நிரூபிக்க முயலுவதாகத் தெரியவில்லை. மற்ற உயிரினங்களுக்குள் மட்டும்தான் இந்த போட்டாபோட்டி செயல்கள். எந்த மரமும், செடிகளும், கொடிகளும் ஒன்றை ஒத்ததாக இருக்கமுடியாது. இந்த உண்மை ஆத்மாவின் உடம்பிற்கும் பொருந்தும்.
மனிதனை மனிதன் அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை, ஆசைகளை அவர்மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படுதல் இயல்பான ஒன்றாகத் தெரிகின்றது. இந்த மனப்போக்கு குடும்பத்திற்குள்ளேயும், சமூகத்திற்குள்ளேயும் காணப்படுகின்றது. இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபட நம்செயல்களில் மாற்றம் வேண்டும்.
வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இயற்கையான ஒன்று. போட்டிகள் வேண்டியதில்லை. முன்னேற முயற்சி வேண்டும். மனிதனை மனிதன் அடிமையாகக் கருதக்கூடாது. எல்லாவற்றிலும் உயர்ந்தவரில்லை! எல்லா நிலையிலும் தாழ்ந்தவரும் இல்லை! அனைவரும் இந்த தெளிவு கொண்டிருக்கவேண்டும். தெளிவில்லாதவர்களுக்கு அன்புடன் புரியவைத்தல் சிறப்பு.
ஒருவன் ஓய்வின்றி உழைத்தலில் அவன் முன்னேறலாம். வாழ்வு மேம்பாடு அடையும். அதே சமயம் அவன் உழைப்பில், நிழலில் மற்றவர்கள் உழைக்காமல் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வளர்ச்சி ஏதுமிருக்காது.
சோம்பேறியாய் இருந்து கொண்டு அவரின் வளர்ச்சியில் மகிழ்ந்து, அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்க திட்ட மிடுபவர்களாகி விடுகின்றனர். அந்நிலையில் உழைப்பவரின் நலம், ஓய்வு, தேவைகள் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எப்படியும் அவர்களுக்கு வேண்டியது அவர் நிழலில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்பதே.
பொதுவாக வேலை செய்பவரிடம்தான் நாம் ஒரு வேலையை ஒப்படைப்போம். இது ஓர் சரியில்லா மனப்பான்மை. இது போன்று வேலை செய்யும் ஒரே நபரிடம் அனைவரும் வேலை எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் செயல்களை செய்யும் வண்ணம் நம் செயல் இருக்க வேண்டும்.
ஒருவரின் நிழலில் ஒருவர் இருக்கலாம். ஆனால் அவரைச் சுரண்டும் விதத்தில் இருக்கக்கூடாது. உபயோகமுள்ள வேலைகளை எல்லோரின் நலன் கருதி செய்பவரின் நலம் எல்லாவகைகளிலும் காப்பற்றப்படவேண்டும்.
நீங்கள் ஒய்வாக இருக்கின்றீர்கள். இளைப்பாற நினைகின்றீர்கள் என்றால் நீங்கள் அன்புடன் இருப்பதாக அர்த்தம். அன்புதான் உங்களை அமைதிபடுத்தி ஒய்வு கொள்ளச்செய்யும்.
நீங்கள் நிம்மதியாக உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்றால், அனைத்து செயல்களிலிருந்தும் விலகி இருக்கின்றீர்கள் என்பதாகும். ஒய்வு என்றால் அன்புடன் அமைதியாய் அற்புதமாக இருங்கள் என அர்த்தம் கொள்ளுங்கள்-குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26942059
All
26942059
Your IP: 3.91.176.3
2024-03-29 11:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்