gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

4-3.அன்புப் பூக்கள்!

Written by

அன்புப் பூக்கள்!                                                                                                              

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” என்கிறார் திருமூலர். அன்பை கனிவு, கருணை, நட்பு, மரியாதை மூலம் உணரலாம். அன்பு நமக்கு தொடர்பு உடையவர்களிடம் நாம் காட்டும் மன நெகிழ்சியாகும். நம்மோடு யாதொரு தொடர்பும் இல்லாத அயலாரிடமும் ஜீவ ஜந்துக்களிடமும் அன்பைக் காட்டும் போது அது அருளாக மாறுகிறது. இதையே ’அருள் என்னும் அன்பின் குழலி” என்றார் பொய்யா மொழியார்.
அன்பை பெருக்குவதே வாழ்க்கை. அன்புகொள்வீர்! அனைவரிடமும் அன்பு கொள்வீர்! எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்வீர்! தோன்றிய, பிறந்த எல்லா உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது, ஆகவே  வாழ்விற்கு தேவையானவற்றைத் தேடும் உரிமையும், அடையும் உரிமையும் உள்ளது. இதைத் தடுப்பதும், மறுப்பதும் பாவமாகும். தடுத்து பாவச் செயல்களை செய்ய எந்த ஒர் ஆன்மாவும் விழையக்கூடாது.
அதற்கு எல்லோரும் எல்லாவற்றின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். மற்ற மனிதர்களையும் நம்மைப்போலவே நேசிப்போம். மனிதர்கள் மட்டுமின்றி உலக ஜீவராசிகள் எல்லாமும் நம்மைப்போன்ற ஆன்மாக்களே என நினையுங்கள். அன்பு பிற உயிர்கள் மீது ஓர் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். அந்த உயிர்கள் மேல் வெறுப்பு தோன்றாது. அந்த வெறுப்பின்மை என்ற தன்மை, மற்ற உயிர்களின் செயல் பாடுகளில் நமது இடையூறு இல்லாமல் இருக்க உதவும்.
கன்று கொல்லப்பட்டது என நீதிகேட்ட பசுவின் நியாயத்திற்காக தன்மகன் வீதிவிடங்கனை தேரேற்றி கொன்ற மனுநீதிச்சோழனின் உணர்ச்சிகள் போற்றத்தக்கவை. எல்லா உயிர்களுக்கும் அன்பும் பாசமும் உணர்ச்சிகளும் உண்டு. எல்லாம் ஆன்மாக்களே என்ற அவரது நியாய உணர்வு இன்றும் பேசப்பட்டு வருகின்றது.
நிறம் கண்டு அன்பு வருவதில்லை. அழகு கண்டும் அன்பு வரக்கூடாது. சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்நிறத்தையுடையதாக இருந்தாலும், அழகாயிருந்தாலும், அழகின்றி இருந்தாலும் அது ஓர் உயிர். ஓர் ஆன்மா வாழும் உடம்பு. அதற்கு உரிய காலத்திற்கு வாழும் உரிமை உள்ளது அதில் தலையிட மற்ற ஆன்மாக்களுக்கு உரிமையில்லை. அதை அதன் போக்கில் செயல் படவிடுங்கள். அதன்மீது அன்பைக் காட்டுங்கள்.
பிற உயிர்கள் மீதுள்ள வெறுப்புகளை அறவே நீக்கி அன்பு கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் காட்டும் அன்பு உங்களின் இந்த ஆன்மாவிற்கு அல்லது வாரிசுகளின் ஆன்மாவிற்கு பயனளிக்கும் தன்மை கொண்டது. ஒருவரைப் பற்றி எண்ணங்களால் எடைபோட்டுக் கொண்டிருந்தீர்களானால் அவரை நீங்கள் நேசிக்கமுடியாது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி நேசியுங்கள். அன்புகொள்ளுங்கள். அவ்வாறு எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு செலுத்தும் நேரமே மிகவும் அமைதியான நேரங்களாகும்.
ஓர் பஞ்சதந்திரக் கதையில் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பிற்கு இலைகளைப் பறித்து போட்ட பறவைதனை வேடன் தன் அம்பால் குறிவைக்கும்போது, கரைக்கு வந்த அந்த எறும்பு வேடன் காலைக் கடித்ததால் குறிதப்ப பறவை பறந்ததாக் கூறப்பட்டுள்ளது. எறும்பு எதேச்சையாகக் கடித்தது என்றாலும், எறும்பு பெற்ற இலை என்ற அன்பிற்கு உதவி என்ற இந்தக்கதை, அந்த பறவையின் எந்த பிறவி அன்பின் கர்மபலனோ! அது வேடனின் கணையிலிருந்து தப்ப உதவியது.
இந்தக் கதையினால் நமது உள்ளத்திற்குள் ஓர் எண்ணம் உறுவாகி பதிவாக வேண்டும். நாம் துயரப்படும்போது நம்மை, நம்மிடம் அன்பு காட்ட ஆளில்லை, நாம் தனி மனிதன், ஆதரவற்ற ஓர் அநாதை என்று வருத்த முறும் நிலையில், என்றோ, எங்கோ, எப்படியோ, யாருக்கோ, எந்தவடிவிலோ காட்டிய அன்பின் அடையாளம், உதவிக்கு வருமானால், மனம் எவ்வளவு ஆறுதல் அடையும் என்பது அனுபவம்தான் கூறும்.
அன்பு காட்ட ஆளில்லா நிலையில் ஆறுதல் வார்த்தை கேட்க முடியா நிலையில் மனம் வேதனை கண்டுள்ளபோது, இது போன்ற அன்பு எவ்வளவு ஆறுதலை தந்து மனநிம்மதி அடைந்து தன்னைத்தானே தேற்றிக்கொள்ள மிக்கஉதவி புரியும். எனவே எப்போதும் அன்பு செலுத்துங்கள் எல்லோரிடத்திலும்.
அன்பு, உடலின் உயிர் ஆன்மாவோடு ஒன்றாகக் கலந்தது. அதை பலர் மறந்துவிட்டு உலகின் இன்பமில்லா வாழ்க்கை வாழ்கின்றனர். நம்மிடையே உள்ள அன்பை வெளிப்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். நம்மிடையே இதுகாறும் இருந்த ஒருவரை பிரியும் வேளைவரும் போதுதான் அவர்மீது நாம்கொண்ட அன்பின் ஆழம் நமக்குத் தெரியவரும்.
இராமாயண காவியத்தில், கானகத்தில் ராமரின் நண்பனான குகன், ராமணைவிட்டுப் பிரியமனமில்லாமல், ராமா! நீ எங்களுடனே தங்கிவிடு, அல்லது என்னையும் உன்னுடன் அழைத்துபோ, என மன்றாட ராமர், “பிரிவுதான் அன்பை அதிகமாக்கும். நாம் மீண்டும் சந்திக்கும் நேரம் வரும், அப்போது இதை நீ உணர்வாய்” என்றார்.
கோபியர்களுடன் குரவைக்கூத்து ஆடும் கண்ணன் விளையாட்டாக திடீரென்று மறைந்து விடுவாராம். அப்போது அந்த கோபியர்களுக்கு கண்ணன்மேல் இதுகாறும் இருந்த அன்பு பலமடங்கு அதிகமாகி விட்டதாக ஸ்ரீமத்பகவதம் கூறுகிறது.
அன்பு எல்லா உயிர்களிடமும் விருப்பத்துடன், நட்புடன் வாழும் தன்மைதனை தரும். இந்த தன்மை அளவில்லாதச் சிறப்புகளைத் தரும். இந்த அன்புதான் நம் உள்ளே தோன்றும் வீரத்திற்கு வித்திடும். வாழ்வில் நீங்கள் யாரிடமும் அன்பு செலுத்தலாம். ஆனால் உங்கள்மேல் அன்பு கொண்டவரின் அன்பை நிராகரிக்காதீர்கள். அதுதான் உண்மையான அன்பு. அந்த அன்பே உங்களுக்கு ஆபத்து காலங்களில் தேவைப்படும்போது மிக மிக உதவும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து, இன்புற்றார் எய்துஞ் சிறப்பு’- அன்புடன் இயைந்த வாழ்க்கையினால் மட்டுமே, உலக வாழ்வில் இன்பம் என்ற சிறப்பை அடையமுடியும்.
வாழ்வில் அன்பு என்பது நம்மிடம் இல்லை எனில் நமக்கு மற்றவரிடமிருந்து வரும் அன்பு கிட்டாது. சூன்யமயமான வாழ்க்கையாக மாறிவிடும். வாழ்க்கையில் அன்பு குடி கொண்டிருந்தால் புண்ணியச் செயல்கள் நடக்கும். தன்னலமில்லா செயல்பாடுகளே அன்பின் அடிப்படை. முழுமையான அன்பினைச் செலுத்துவீர்களானால் உங்கள் உள்ளே ஓர் ஒளிதோன்றும். அருள் நிறைந்தவராக நீங்களிருப்பீர்.
ஆன்மா அன்புடன் செயல்பட்டால் ஐம்புலன்களும் அதன்வழி சிறப்பாக செயல்பட்டு மிகுந்த ஆனந்தத்தை ஆரோக்கியத்தை அளிக்கும். சந்தோஷம், என்றும் சந்தோஷம் என வாழ்வில் வளமாகும். அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்களின் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் பயனற்றதாகி விடும் என்கிறது வள்ளுவம்.
அன்புகொண்ட ஆன்மாக்களே, உடலின் உயிர் இருக்கும் வரைதான் உலகில் ஆதரவற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள் என்ற நிலைப்பாடு, எனவே மற்ற ஆன்மாக்களின்மேல் உங்களால் முடிந்த அளவு அன்பு செலுத்துங்கள். உங்கள் அன்பு நான் தனிமையானவன் இல்லை என்ற நினைவை அதற்குத் தரட்டும். இறுதிவரை அந்த அன்பு ஆறுதலையும், நம்பிக்கையும் தரும்.
ஆதரவற்ற ஓர் ஆன்மாவின் வேண்டுகோள் என்னவாயிருந்தது என்றால், “என்மீது அன்பு கொண்டு நேசித்த ஆன்மாக்களே, என்னைப்போல் எல்லா உயிர்களிடத்தும், உயிரின் ஆன்மாக்களிடமும் அன்பு செலுத்துங்கள், எல்லா உயிர்களும் சமம், அவை அன்பிற்காக ஏங்குபவை, அன்பு காட்ட தகுதியுள்ள உயிர்களே” என்பதாகும்.
 உங்கள் அன்பு அவர்களுக்கு சிறிதேனும் நம்பிக்கை உற்சாகத்தை ஏற்படுத்துமானால் அதுவே உங்கள் அன்பின் வெற்றிக்கு வெளிப்பாடு.
அவர்களின் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நலமுடன் வாழு. அந்த நலத்திற்காக வாழு. இவ்வாறு எல்லோரும் எல்லாரிடமும் அன்பு கொண்டால், அன்பைச் செலுத்தினால் உலகில் பல சிக்கல்கள் தீரும். பாவம், குற்றம் செய்ய தூண்டுதல் இருக்காது. அது போன்ற எண்ணங்களும் தோன்றாது. தீயவழிகளில் செல்லும் ஒருவனை அடிப்பதாலோ, திட்டுவதாலோ, மிரட்டுவதாலோ மாறுவான் என்று நினைப்பதை விட்டுவிடுங்கள். அவனிடம் அன்பு காட்டுங்கள். அவன் செயல்களில் மாறுதல் ஏற்படும்.
இதுதான் ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்விலும் செம்மைப்படுத்தும் ஆதாரம். அந்த அன்பு செலுத்தும் பண்பு ஓர் அளவிடமுடியாத பொக்கிஷம். நீங்கள் பார்த்து, பழகிய உங்களைப் பற்றி தெரிந்த, அனைவரின் அன்புக்கு நீங்கள் உடையவராவீர் என்றால், அதை நினைத்துப் பாருங்கள். மனதில் எவ்வளவு ஆனந்தம், மகிழ்வு ஏற்பட்டு உங்கள் செயலில் அதன் வெளிப்பாடு தெரிந்து, நீங்கள் வாழ்வில் பிரகாசித்து, வெற்றிப்பாதையில் நடக்க உதவும். அன்பை உணர்ந்தால், துக்கம் இருக்காது. எதையும் வெறுக்கமாட்டீர்கள். நல்ல எண்ணங்கள் பதிந்த மனதில் அன்பு தானாகவே, வற்றாத உற்று போல தோன்றிக் கொண்டேயிருக்கும்.
உங்களைப்பற்றி, உங்களின் செயல்கள்பற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் அன்புடன் நினைத்துப் பார்க்கின்றன என்ற நினைவு மிகுதியான மனவலிமையை உங்கள் உடலுக்கு, ஆன்மாவிற்கு ஏற்படுத்தும். நீங்கள் வளமுடன் இருக்க உங்கள் உணர்வில் இயற்கையாக கலந்திருக்கும்.
எனவே அன்பை மற்ற உயிர்களிடத்தும் காண்பிக்க உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இது! இவர்! என்ன இதனிடம்! இவைகளிடம் என்ன அன்பு வேண்டி இருக்கின்றது என்று உங்கள் உள்ளத்தில் கிளர்ந்தெழும் அன்பின் உணர்வுகளைத் தடை செய்யும் எண்ணங்களுக்கு முதலில் தடைபோடுங்கள்.
எப்போது நாம் நம்மிடம் இருக்கும் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லையோ, அதை நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை புரிந்து அனைவரிடமும் அன்பு கொள்ளுங்கள். அப்போதுதான் அங்கிருந்து அன்பு உங்களுக்கு கிடைக்கும்.
உலகில் 3வகை மனிதர்களுண்டு. முதலாமவர் நிகழ்வை நடத்துபவர், நடக்க காரணமாயிருப்பவர், இரண்டாமவர் அந்த நிகழ்வு நடப்பதை, நடத்துவதை வேடிக்கை பார்ப்பவர், மூன்றாவது நபர் அந்த நிகழ்வை என்ன நடந்தது, எப்படி நடந்தது என ரசித்துக்கொண்டிருப்பவர். எப்படிப்பட்டவராயிருந்தாலும் நீங்கள் அனைவருடனும் அன்புடன் இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வெருவரையும் புன்முறுவலோடு சந்தியுங்கள்.
உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். உங்களின் அந்த இனிய புன்முறுவல் அவர்களுக்கு ஆறுதலும், மனநிம்மதியையும் தரலாம். அதுவே அவர்களுக்கு வரப்பிரசாதமாகி நன்மைகள் பயக்கலாம். உங்கள் புன்னகையால் நீங்கள் இழப்பது ஏதுமில்லை. மற்றவர்களுக்கு நன்மைபயக்குமெனில் அதை நீங்கள் ஏன் ஏற்று புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கக்கூடாது.
மனதில், உலகில் எல்லாம் உயிர்களும். அன்பு காட்டப்பட வேண்டியவைகளே என்ற எண்ணங்களை பதிய வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே உங்களிடம் உள்ள பரிவு, பச்சாதாபம், பாசம் போன்ற உணர்வுகள் தோன்றும் போது அன்பு என்ற மந்திர செயலாக்கம் உங்களிடமிருந்து வெளிப்பட்டுவிடும். இயற்கையின் இந்த அதிசயத்தை நீங்களும் உணர்வீர்.
நீங்கள் அன்பு செலுத்தும் உயிர்களும் உணரும். இவ்வாறு அன்பு எல்லா உயிர்களுக்கும், எல்லோரிடமிருந்தும், எல்லா நிலையிலும் கிடைக்கும் போது போட்டி, பொறாமை, வஞ்சகம், ஏமாற்று, பழிக்குப்பழி போன்ற உணர்வுகளின் ஆதிக்கம் எல்லா ஆன்மா உயிர்களிடமிருந்தும் குறைய ஆரம்பித்துவிடும். ஓர் நிலையில் அவைகள் இல்லா நிலை எங்கும் உருவாகி ஆனந்தமான பரிபூரண அன்பு பரிமளித்து அன்புடன்கூடிய உயிர்கள்வாழும் உலகத்தில் நாம் இருப்போம்.
அது உடலுக்கும் ஆன்மாவிற்கும் எல்லாவிதத்திலும் எல்லையில்லா சந்தோஷம் தரும் சூழ்நிலையாக பரிமளிக்கும். இந்த சூழலில் மண்ணில் பூத்த, மலர்ந்த, பிறந்த எல்லா ஜீவன்களும் அதுஅது தோன்றியதின் பயனாக சந்தோஷத்தை முழுவதுமாக அடையும்.
இந்த சூழலை எதிர்பார்த்து அனைத்து உயிரும், ஆன்மாவும் விழையும் போது, நம்மிடையே வேறு வேறு எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உணர்வுகளைக் கொண்ட சகோதர, சகோதரிகளைக் கண்டு அவர்களின் சொற்களில், செயல்களில் மதிமயங்காமல், உண்மையான அன்பின் எல்லை என்னவென்று உங்கள் மனமும் ஆன்மாவும் புரிந்து கொண்டதைப் போல், அவர்களின் மனமும் ஆன்மாவும் புரிந்து கொள்ளும் வகையில் அன்புடன் அவர்களை வழிநடாத்தி செல்லுதல் உங்களின் தலையாய கடமையாகும்.
இதை செய்வீர்களானால் நீங்கள் அன்பு உலகத்திற்குள் செல்ல ஓர் ஒத்துழைப்பாளி. மற்றவர்களுக்கு உதவும் ஓர் தூதன் என்ற நினைவும் உங்களுக்கு மேலும் அன்பின் எல்லையை அடைய உதவிடும்.
உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம், சுகம், இன்பம், நிம்மதி, சந்தோஷம், ஆனந்தம் ஆகியன எங்கே! என வாழ்வின் பாதையில் தேடிக்கொண்டு செல்கையில், அந்தந்த ஜீவன்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவைகளின் சிந்தனைகள் சென்று, செயல்களின் வெற்றிக்காக எதோ ஓர்வழி சென்று, எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில், தன்னம்பிக்கை, நாணயம், அன்பு, பிற உயிர்களின் செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டாலும், மாற்றமடைந்தாலும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், வெற்றி தன்வெற்றி என்ற வெறியில் மீண்டும், மீண்டும் தவறான பாதையில் சென்று கர்மபலன்களை சேர்த்து, பிற உயிர்களின் பாதிப்புக்களைச் சுமந்து, ஜீவனின் மீதிக் காலத்தில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் அடிகோலி, அதே துயரத்தையும் துன்பத்தையும் தன் வாரிசுகளுக்கு சுமத்திவைத்து விட்டு செல்வதில் என்ன பயன்?
பிற உயிர்களுக்கு பாதிப்பின்றி, சுகம், நிம்மதி, இன்பம், ஆனந்தம், சந்தோஷம் ஆகிய அனைத்தையும் அடைய, அன்பின் வழி முயற்சித்தால், துன்பமின்றி எல்லோரும் இன்புற்றிருக்க ‘அன்பு செலுத்துதலே’ அன்றி வேறொன்றுமில்லை எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள். ஆனந்தம் அடைவீர், ஜீவன்- ஆத்மா- பேரானந்தம் நிலையடையும்.
ஒவ்வொரு ஆன்மாவும் தன் மனமோ, உடலோ சோர்வினால் ஆட்கொள்ளப்பட்டு நலிவடையும் காலத்து, நோய்களினால் ஏற்படும் தாக்கத்தால் தன்னை அரவனைக்க ஓர் அன்புள்ளத்தை எதிர்பார்க்கின்றது. நோயில் இருந்து அந்த ஆத்மாவை மருந்துகள் விடுவித்து காப்பாற்றலாம், ஆனால் மாறாத அக்கறையுடன் கூடிய அன்பினை பெறும் நோயாளியே விரைவாகவும் முற்றிலும் குணமாவார்.
எனவே உடலின் ஆன்மாக்களே! அன்புடன் இருங்கள். உள்ளும், புறமும் அன்புடன் இருங்கள். அதுதான் உண்மையான மனிதநேய ஆன்மா! உள்ளே அன்பு மயமாக இருக்கவேண்டும் என நினைத்து, வெளியே அதிதீதமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, உள்ளே இருக்கின்ற அன்புக்கு அர்த்தம் இல்லாமல் செய்துவிட வேண்டாம். எப்பொழுதெல்லாம் சுயநலம் நம்மைவிட்டு அகன்று விடுகின்றதோ அப்போதெல்லாம் நம்முள் அன்பு வற்றாத ஊற்றாகி, பொது நலம் பிறக்கும்.
ஆண்-பெண் இருவரிடையே பரஸ்பரமாக இருக்கும் அன்பு பெருகி, கரைபுரண்டு, அவர்கள் சார்ந்த சமுதாயம் முழுமையின் நன்மைக்குமாக ஒடி, இறுதியில் தெய்வீக நோக்குடன் ஒன்றிப்போவதே வாழ்வின் அற்புத அம்சம்.
கிருஷ்ணர் பாண்டவதூதராக துரியோதனை சந்திக்க வந்தபோது அவரை துரோணர், திருதராஷ்டிரன், துரியோதணன் முதலானோர் தங்களின் மாளிகையில் வைத்து உபசரிக்க விரும்பினர். ஆனால் தர்மவானும், அன்பு மிகக்கொண்டவனுமாகிய திருதரஷ்டிரனின் தம்பி விதுரனின் குடில் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் சென்று தங்கி தான் தூது வந்த செயலை செய்ததாக வரலாறு பகர்கின்றது. அன்பு கொண்ட இடத்தில் தான் மனித நேயம் இருக்கும். அது எல்லோராலும் பாராட்டி போற்றப்படும். மதிக்கப்படும்.
மனிதநேயம்: நீங்கள் மனிதநேயம் கொண்டவராகத் திகழ எந்த நபரையும் எந்த காரணத்திற்காகவும் எந்த சூழலிலும் புண்படுத்தாதீர்கள், தவிர்க்காதீர்கள். இப்போது அவர்கள் அழகை இழந்திருக்கலாம், களை இழந்திருக்கலாம், பணம், வசதி இழந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ, கர்ம வினைப்பயனாலோ அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளபட்டிருக்கலாம். எவ்வளவு வசதியாய் வாழ்ந்தவர்கள், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்திருக்கலாம். உங்களுக்கும் அதைப்போன்றோ அதைவிட மோசமான நிலை வரலாம். அவர்களுடன் புன்முறுவலுடன் பழகி மனிதநேயத்துடன் இருங்கள்.
நாம் வெளியில் நடந்து செல்லும்போது முன்பின் தெரிந்திராத மனிதர் ஒருவர், எதிரே வரும்போது நம்மை மோதிவிட்டு மன்னிப்பு கேட்கின்றார். நாம் ஏதோ கவனத்தில் இருந்ததால் பொதுநோக்குடன் அதைப் பெரிது படுத்தாமல் செல்கின்றோம்.
ஆனால் நம் வீட்டில் இதே போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டாலோ, நமது செயல்களில் குடும்பத்தினரின் இடையூறு ஏற்பட்டாலோ நாம் மிகுந்த கோபம் அடைகின்றோம். தொந்தரவு செய்யாதீர் என உரக்க கூச்சலிடுகின்றோம். ஏன் இந்த நிலைப்பாடு. நம் குடும்பத்தினர் மனம் எவ்வளவு வருத்தப்படும் என நினையுங்கள்.
எப்போதும் உணர்ச்சி வயப்படாமல் ஓரே மாதிரி நடக்கப் பழகிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்றே பிரதானம். துன்பங்கள், துயரங்கள் தாண்டி அன்பு செலுத்தப் பழகுங்கள். வாழ்வு மகிழ்வுடன் வாழ்வதற்கே! தவறுதலாக கோபித்தாலும் பிறகு அதை உணர்ந்து அவர்களிடம் உங்கள் தவறான கோபத்திற்கு பரிகாரமாக அன்புகொண்டு பேசுங்கள். பழகுங்கள். உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள். அவர்கள் சந்தோஷம் அடைவர். நீங்களும் அதனால் ஆனந்தப்படுவீர்கள்.
“அறிவு இருக்கும் இடத்தில் அடக்கம் இருப்பது போல, மனிதநேய அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்.”
பூவின் மென்மை அனைவரும் அறிந்ததே! அதன் வசீகரமான மணம், கவர்ச்சியான நிறங்கள் எல்லோரையும் அதன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதைப்போலத்தான் நமது இதயமும் மென்மையானது. அதிலே தோன்றும் உணர்வுகள் கணக்கிலடங்கா!
அந்த உணர்வுகளைப் பக்குவப்படுத்தி நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாக மாற்றினால், செயல்பட்டால் அதன் மணம், செயலாக்கம் பூவின் நிறத்தை, மணத்தை எல்லோரும் விரும்புவதுபோல அன்பு இதயத்துக்கு சொந்தமான உங்களையும் எல்லோரும் விரும்புவர். உங்கள்மேல் அன்பு கொள்வர். மனிதநேயம் பெருகும். வாழ்வில் இனியநிலை பெற்று சந்தோஷமடைவீர்.
போதனை வகுப்புகள் முடிந்ததும் குரு தன் மாணவர்களிடம், யார் என் போதனையை சரியாக நடைமுறைப் படுத்துகின்றாரோ அவரே என் சீடர் என்றார். சில நாட்களுக்குப் பின் மாணவர்களை ஓர் இடத்திற்கு வரச் சொன்னார். வழியில் முட்புதர்கள் கிடந்தன, முதல் மாணவன் யாரோ முட்டாள் வழியில் முள்ளை போட்டுவிட்டு போய்விட்டான், எனக்கு நேரமாகிவிட்டது என கடிந்து விலகிச் சென்று விட்டான்.
எத்தனை முள் இருந்தால் என்ன அப்படியே தாண்டிச் சென்று விடுவேன், என அப்படியே செய்தான் இரண்டாம் மாணாக்கன். மூன்றாமவன் பின் வருபவர்களுக்கு தொந்திரவு என் நினைத்து, முட்களை அப்புறப்படுத்தி சென்றான். மற்றவர்கள் ஞானி முன்னிருக்க, தன் தாமத்திற்கு காரணம் சொல்லி வருத்தம் தெரிவித்தான் கடைசியாக வந்தவன். உன் தாமதம் மனிதாபிமானத்தால் ஏற்பட்டது என்று கூறி அவனே தன் சீடன் என்றார். மனிதாபிமானம் போற்றப்படும் செயலாகும்.
கடிதங்கள் எழுதப்படும் அந்நாளில் இங்கு அனைவரும் நலம்! அங்கு அனைவரும் நலமா! என்று எழுதத்துவங்கியபோது, அங்கு மற்றவர்களின் நலனில் அக்கறை தென்பட்டது. அன்புடன் நலம் விசாரித்தனர். அந்தப்பகுதியில் பழகியோர், அருகிலுள்ளோர், உற்றார், உறவினர் நலன் என்று பெயர் குறிப்பிடப்படாமல் விசாரிக்கப்பட்டது. அன்பின் வயப்பட்ட சிறந்த மனிதாபிமானச் செயல்.
ஒவ்வொரு மனிதரையும் நாம் அவரவர் வட்டத்திற்குள் வைத்துதான் பார்த்து பழகியிருக்கின்றோம். நம் எல்லைக்குள் மற்றவர்களையும், அவர்களின் எல்லைக்குள் நாமும் செல்வது நமக்கு பிடிப்பதில்லை. நாம் நம் எல்லைக்குள், அவர்கள் அவரவர் எல்லைக்குள் என்று மனம் தனக்குள் ஓர் வட்டம் இட்டுக் கொள்கின்றது. இது தவறான எண்ணங்களின் நிலைப்பாடு. பொதுவான எண்ண ஓட்டங்களில் நமது சிந்தனை செல்லாததே இந்த குறுகிய எண்ண வட்டங்களுக்கு காரணம்.
எல்லோரையும் உலகில் வாழ உரிமையுள்ள ஜீவன்களாகக் கருதி, பொதுநலச் சிந்தனைகளின் அடிப்படை வடிவில் செயல் கொண்டால் இது போன்ற குறுகிய வட்ட உணர்வுகள் தோன்றாது.
பொது இடங்களில் ஏனைய ஆத்மாக்களின் மீது அன்பு மலரும். அது உங்களின் தரத்தை மேம்படுத்திக் காட்டும். இந்த நிலை கண்டால் உங்கள் வீட்டில் பொதுவாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் இலகுவாக தீர்த்துவைக்கப்படும். வெளியில் இனப்போர், சச்சரவுகள், வீண்விதண்டாவாத பிரச்சனைகள் தீர்ந்து நல்லுறவு மேம்படும். அருள் பொழிபவர்களுக்கு பிரியமானவர்களின் பட்டியல் எது என்றால் சக மனிதர்களை நேசிப்பவர்களின் பட்டியலேயாகும். மனிதநேயத்துடன் நீ ஆன்மாக்களை உன் அன்பின் வயப்படுத்தினால் உனக்கு எதிரிகளே இல்லை என்பது உனக்கு புரியும். எல்லோரும் உன் அன்பின் வட்டத்து நண்பர்களே!
தீயபழக்க வழக்கங்களும், தீயசிந்தனைகளும், பிறருக்கு தீங்குவிளைவிக்கும் செயல்களுமாக தொடர்ந்து செய்து துன்பங்களைச் சேர்த்துக்கொண்டு துயரங்களில் மூழ்கியிருக்கும் ஆன்மாவே நீ எப்போதும் இப்படி துன்பத்தின் வாயில் உழன்று கொண்டிருப்பதுதான் நரகம். பல ஆன்மாக்கள் சில சமயங்களில் இந்த நரக வேதனையிலிருந்து காப்பாற்று என குரலிடுவதை கேட்கின்றோம்.
அவர்களுக்கு ஒன்று சொல்வது என்றால், யார் என்ன சொன்னாலும் கேட்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்துவிட்டு, நீங்களே உங்களைச்சுற்றி குழி பறித்துக்கொண்டு பின் அதில் விழுந்து தள்ளாடி இந்த சமுதாயத்தின்மேல் கூக்குரலிட்டு என்ன பயன் என்பதாகத்தான் இருக்கும்.
எல்லோரும் மனித ஆத்மாக்களை நரகத்திற்கு செல்வீர்கள் என பயமுறுத்துகின்றனர். அல்லது சொர்க்கம், என்று ஆசையை தூண்டுகின்றனர். இந்த பயமும் வேண்டாம். அந்த ஆசையும் வேண்டாம். நரகம் என்பது எங்கே! அங்கே எரியும் கொப்பரை எண்ணெய் அண்டாவில் நீ செய்த குற்றங்களுக்காக போட்டு எரிப்பர் எனக்கூறுவதை கேள்விப் பட்டுள்ளேன்.
என்ன காட்டு மிராண்டித்தனமான மனித நேயமில்லா கற்பனை! தீயில் ஒருவர் கருகினால் அவர் எவ்வளவு துயரம் கொள்கின்றார் என்பதை நாம் தெரிந்துள்ளோம். இப்படியெல்லாம் சொல்லி ஒருவரை பயமுறுத்தி என்ன பயன்! என்ன செய்தால் பாவம்! எது பாவமில்லை! என்ற தடுமாற்றத்தை ஆன்மாக்களிடையே உண்டுபன்னுகின்றது. உங்களுக்கு உதவியவர்களையும், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றாமல் உங்களால் முடிந்த நன்மைகளை கருணையுடன் செய்ய முயலுங்கள். நீங்கள் அன்பு கொண்டு இருந்தால் அதன்பின் கர்மப்படி நடப்பது நடக்கட்டும்.
செய்த செயல்பற்றி அச்சம் கொண்டு குற்றம் செய்துவிட்டோமோ என தவிக்கும் ஆன்மாக்கள் அதிகமாகிவிட்டனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்விலேயே கவனத்தை செலுத்தி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். செய்ய நினைப்பவைகளைச் செய்துவிட்டு வறுத்தமுறுபவர்கள் நிறையபேர். செய்யுமுன் ஆலோசனை கொள்! செய்தது தவறு என உணர்ந்தால் விட்டுவிடு! வேறு நல்லசெயலில் கவனம் செலுத்தி செயல்படு. மனிதநேயத்துடன் உங்கள் செயல் இருந்தால் சொர்க்கம், நரகம் பற்றிய கவலை எல்லாம் வேண்டியது இல்லை.
இந்தப் பிறவியில் உங்களுக்கோ உங்கள் உடம்பிற்கோ கிடைக்காத அந்த சொர்க்கம் ஒரு ஆன்மா இறந்தபின் என்ன வேண்டியிருக்கின்றது! நீங்கள் மனிதநேயத்துடன் அன்பு கொண்டு அனைத்து உயிர்களிடத்தும் நேசமுடன் உறவாடி அவர்களை சந்தோஷம் காணவைத்து நீங்கள் போதும் என்ற உணர்வுகளுடன் தனக்குத்தானே நிறைவுகண்டு ஆனந்தம் அடைதலே ஓர் உடலின் ஆன்மாவிற்கு சொர்க்கமாகும். இது உடலின் ஆன்மா பிறந்தபின் தேடும் சொர்க்கம். இன்னொரு சொர்க்கமும் உண்டு.
உண்மையில் சொர்க்கம் என்பது ஓர் உயிர் அதன் கர்மபலன்களுக்கேற்ப பிறந்து துன்ப, துயரங்களில் உழலாமல், அதாவது பிறப்பு என்பது இல்லா ஆன்மாவாக மாறுதலேயாகும் அதாவது வீடு பேறு -என்பதாகும். இந்த சிறப்பு விழிப்பு நிலையைக்காண மனித ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் முயற்சித்து வெற்றி காண்கின் சொர்க்கம் என்பது கனவல்ல! நனவே! இப்பூவுலகில் பிறந்த ஆன்மாக்களுக்கு சொர்க்க பூமியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நீங்கள் மனிதநேயம் பூத்த முழுமலராகா இருந்தீர்களானால் நல்லது எது, கெட்டது எது என்று அவைகள் தாண்டி தீர்க்கமாக சிந்தித்து செயல்பட முடியும்.
மனித நேயத்துடன் உங்கள் ஆன்மா செயல்படின் தெய்வத்தின் அருள் உங்களிடம் சேரும். வாழ்வில் இது ஓர் அற்புதமல்லவா! அதை விட்டு ‘என்புதோல் போர்த்த உடம்பு’ போன்று நடந்து வாழ்வின் இனிய சந்தர்ப்பங்களை இழந்து விடாதீர்கள்! மனிதநேயம் கொண்டிருக்கும் ஆன்மாவே மகான் ஆகின்றது. பிறகு தெய்வங்களோடு உறவும் கொள்கின்றது.
சமுதாய பேதமின்றி ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களிடம் நேசமுடன் இருந்தால் கலவரங்களில்லை. குழந்தை தாய்-தந்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி அவர்களைச் சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் அன்பு காட்டுகிறது. இறைவனின் குழந்தையாகிய நீ அவ்வாறே அனைவரிடமும் அன்பு காட்டினால் பேதமில்லையடா! இனத்தில் ஆண், பெண் தவிர வேறுபேதமில்லை என்பதை அனைவரும் உணரவைப்பீர் ஆன்மாக்களே!
கங்கைநீர் புனிதம்தான்! காவிரி நீர் புனிதம்தான்! ஜீவநதிகளின் நீர் புனிதம்தான்! மனித நேயத்தால் பிறர் துயர் கண்டு கண்ணில் தோன்றும் கண்ணீர் எல்லாவற்றையும்விடப் புனிதமானது. அதன் வழி செயலாக்கம் மிகமிகப் புனிதமானது.
இன்றுபோய் நாளைவா என்ற பாணியில் பலமுறை அலைய விட்டு பின் உண்ணாவிரதமிருந்து மன உறுதியுடன் சோதனைகளைக் கடந்து வேறு எவருக்கும் மூலமந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கூடாது என்ற சத்திய உத்திரவாதத்தின் பேரில், திரு எட்டெழுத்தின் உட்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து உபதேசமாக பெற்ற ஸ்ரீராமனுஜர், கோபுரத்தின் மீதேறி திரண்ட ஊர் மக்களுக்கு மந்திரத்தையும் அதன் பெருளையும் கூறினார்.
“சத்தியத்தை மீறிய சண்டாளா! சத்தியம் தவறிய நீ நரகம் போவாய்” என கோபத்தின் உச்சநிலையிருந்து கூறிய குருவைப் பார்த்து, “நான் ஒருவன் நரகம் சென்றாலும், இந்த மந்திரத்தின் பொருளை அறிந்த அயிரக்கணக்கானோர் வைகுந்தம் செல்வர், அந்த மகிழ்வு எனக்குப் போதும்” எனக் கூறிய ஸ்ரீராமனுஜரின் மனிதநேய பண்பு எவ்வளவு சிறந்தது.
பிறவியின் உடல்: பெற்றோரின் தூய அன்பில் கிடைத்த உடலிது. இதை மாசுமருவற்ற நிலையில் பேணிக்காத்து கொடுத்த பெற்றோர்கள் அதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள். எத்தனை பிரார்த்தனைகள் செய்திருப்பார்கள். என்ன என்ன வேண்டுதல்கள் செய்திருப்பர் குழந்தை நலமுடன், வளமுடன் வளரவேண்டும் என்று. அப்படி சீராட்டி, பாராட்டி பேணப்பட்ட இந்த உடம்பை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
அதற்கு தெளிவான தூயசிந்தனை, பிறருக்கு ஊறுவிளைவிக்காத செயல்பாடுகள் கொண்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். அன்பே பிரதானம் என அன்பின் மகத்துவத்தை புரிந்து கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற எண்ணங்களோடு வாழவேண்டும். பெற்றோர்களின் அன்பில் கிடைத்த இந்த பிறவியின் பயனம் எப்போது முடியும் எனத்தெரியாது. இடைப்பட்ட காலத்தில் உடல், உயிர், ஆன்மாவிற்கு சந்தோஷம் வேண்டி பயனிக்க வேண்டும். அந்த சந்தோஷம் எப்படி அடையவேண்டும் என வரைமுறை கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் உலகில் அவதரிக்கும்போது அதற்கென தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன. அந்த திறமைகளை புரிந்து அதை மலரவைத்து அதனதன் தனித் தன்மைதனை காக்க வேண்டும். மற்ற உயிர்களுடன் ஒப்பிட்டு அந்ததிறமை உங்களிடம் உள்ளதா என ஆராயாமல் உங்களிடையே மறைந்திருக்கும் அற்புதமான திறமையை காணமுயலுங்கள்.
எந்தவிதமான போட்டிகளின்றி, எந்த ஆத்மாவுடனும் ஒப்பிடப்படாமலும், செய்யும் செயல்களை அதனதன் தன்மைகளுடன் செய்து ஆனந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஓர் ஊக்கசக்தி உண்டு. ஏனெனில் அதிலிருந்து நமக்கு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் செயல்பாடுகள் இருக்கின்றன. எல்லா விருப்பங்களுக்கும் இலக்கு அன்பாகத்தான் இருக்க வேண்டும். எனவே நீங்கள் அன்பு சக்தி கொண்டவராக இருந்தால் வேரொன்றும் வேண்டியது இல்லை.
வேண்டும்போது: அன்பேசிவம். அன்பினால் எல்லாம் சாதிக்க முடியும் என உறுதிப்பாடு வேண்டும். உறுதிப்பாட்டுடன் செயல்பட நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவு உங்கள் செயலை செம்மைப்படுத்தும். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை நினைவாகக் கொண்டால் அந்த எண்ணங்கள் ஒரு சக்தியாக உருவாகி, சக்தி அலைகளாக உங்களிடம் மற்றவர்களை கொண்டு வந்து சேர்க்கும்.
நீங்கள் அந்த அன்பின் வட்டத்திற்குள் இருப்பீர். உங்களைச் சுற்றி அந்த வட்டம் மிளிரும். வாழ்க்கை சுமையாக இருக்காது. சுகமாக இருக்கும். அன்பின் அலையில் நீங்கள் இனிது பயனம் செய்வீர்கள். நீங்கள் வாழ்வில் முன்னேறி உங்களைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றி அழைத்துச் செல்வீர்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைவு கொள்ளுங்கள். அந்த சூழ்நிலையை மீண்டும் மீண்டும் நினைத்து சந்தோஷமடையுங்கள். இப்படி உங்கள் மனம் பழகிவிட்டால் நீங்கள் நினைத்தபோது சந்தோஷம் உங்களை வந்தடையும். தனது அனுபவத்தில் தெரிந்ததை புரிந்ததை உண்மை என மனம் நம்பத் தொடங்கிவிட்டால் அதன்பிறகு மாறுபாடான வாதங்களை எண்ணங்களை அவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ளாது. எனவே அன்புடன் பேசி, அன்பாக செயல்பட்டு வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்- அன்பே சிவம் என்பதை உணர்வீர் ஆசிகளுடன்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931118
All
26931118
Your IP: 54.87.17.177
2024-03-28 22:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்