5.எண் ஐந்து (புதன்)
பிறவிஎண்-5
ஜூன் 15 முதல் ஜூலை 14 வரையிலும், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரையிலும் எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 5, 14, 23 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5
எண்ணின் அதிபதி-
புதபகவான்
அதிர்ஷ்ட நாட்கள்-
5, 14, 23
அதிர்ஷ்ட கிழமைகள்-
புதன், வெள்ளி
ஒற்றுமையான எண்கள் –
ஐந்து எண்ணுள்ளவர்களுக்கு 1, 6 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.
ஒற்றுமையான தேதிகள்–
1,5,6 வரக்கூடிய 1,5,6,10,14,15,23,24 நாட்கள் சிறப்பானவை.
சிறப்பு பலன்-
19,21,25,26,28,32,34,35,37,41,43,44,46,50,59,70,79 அதிர்ஷ்ட வயதாகும்.
கூட்டு சேரஎண்-
நட்பு-1,4,6 பகை-7 சமம்-3,8,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்
பொது பலன்-
இவர்கள் சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், ஆராய்ச்சியாளராகவும், புதியன கண்டுபிடிப்பவராகவும், பேச்சால் வாணிபம் விருத்தி செய்பவராகவும், மேடை பேச்சுகளில் வசப்படுத்துபவராகவும் விளங்குவர். எல்லோரையும் மோகிக்கச்செய்யும் சக்தியான அன்பைக் கொண்டவர்கள். எல்லோருக்கும் அறிமுகமான பிரமுகராக வாழ்வர். தங்கள் உழைப்பின்மூலமே மேன்மையடைய வேண்டும். மற்றவர்களில் உதவி கிடைப்பது அரிது. எளிதில் எதையும் கற்பர். எதிலும் புகழ் அதிகரிக்கவும் நேர்மையை நிலைநாட்டவும் பாடுபடுவர். தனிமையே இவர்கள் விருப்பமாக இருக்கும். பணம் ஓரளவுதான் தங்கும். கிடைத்த பணத்தை மனமகிழ்வுக்காக செலவழிப்பர். நாளைக்கு என சேமிப்பு இருக்காது. அதற்காக வருத்தப்படமாட்டார்கள். வாழ்க்கையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு இன்பம் குதிரைக்கொம்பாக இருக்கும். மனம் சதா ஓர்நிலை இல்லாமல் இருப்பதால் தூக்கம் கெடும். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.
வியாதி-
நரம்பு பலவீனம், பாரிசவாயு போன்ற வாத சம்பந்தமான நோய்கள் வரும்.
உடை-
சாம்பல் நிற ஆடைகள் அதிர்ஷ்டமானது. லேசான நிற ஆடைகள் எல்லாம் அணியலாம்.
பெயர் எண் ஐந்து- பலன்கள்
இவர் தன் அறிவைக்கொண்டே சூட்சமமான முறையில் எடுக்கும் எல்லா காரியங்களையும் முடிப்பர். சுறுசுறுப்பானவர்கள். எந்த வழியிலும் பணம் சம்பாதிக்க எண்ணமுடையவர்கள். கால அட்டவனைப்படி ஒரே இடத்தில் வேலை செய்யாமல் புதுப் புது திட்டங்களில் நாட்டமாயிருப்பர். துணிவுடன் தொழில்கள் செய்வார். அதில் பாதுகாப்பும் லாபமும் கிடைக்காது. சொந்தமில்லாமல் தொழில் நிறுவனங்களில் வேலை செய்திடின் அமைதியான வாழ்க்கை கிட்டும். மற்றவர்கள் அறிவுரை பிடிக்காது. சாந்த குணம் உடையவர்கள். ஈவு இரக்கமுடையவர்கள். குடும்பத்தில் அமைதி இருக்காது. பிறர் கஷ்டப்படுவதைக் கண்டு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். பிறர் ஏச்சுக்களை சகித்துக் கொள்வார். நல்லவர்கள். உண்மையுடன் உழைக்கக் கூடியவர்கள். பிறருக்கு தீங்கு இழைக்கமாட்டார்கள். வாழ்நாளில் லாட்டரி பந்தயம் போன்றவைகளில் பெரும் அதிர்ஷ்டம் கிடைத்து பணம் வரவுண்டு.
மிகஅதிர்ஷ்ட நாட்கள்-
மேலே உள்ள 5, 14, 23 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். 1, 9 ம் பொருந்தும். இந்த தேதிகள் புதன் வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.
அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-
அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஐந்திற்கு உரிய திசை- வடக்கு. கிழமை- புதன், வெள்ளி,
அதிர்ஷ்ட நவரத்தினம்-
வைரம்-நவரத்தினங்களில் தனி மதிப்புடையது. நீரோட்டமுள்ள நல்ல வைரத்தில் ஜீவ சக்தி உண்டு. ஆயுள் விருத்தி உண்டு. சத்துருக்களை பணிய வைக்கும். வைரக்கல்லில் நீர் பட்டு உடம்பில் பட்டு வந்தால் ஆரோக்யத்துடன் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ் அனைத்தும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். ஒத்துவராத ராசிகளும் உண்டு அவை அழிவை ஏற்படுத்தும் பார்த்து சோதித்து அணியவும்.
உடல் பாதிப்பு வயது-
நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும்.
உடலுக்குகந்த பொருள்கள்-
காரட், ஓட்ஸ், வால்நட், ஹேசல்நட் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி சேர்க்கவும்.
குடியிருக்க வீட்டின் எண்-
கூட்டினால் ஐந்து வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 5,14,23,41,50,68,77,86,95,104 ஆக இருக்கலாம்.
அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக!
எண் ஐந்து (புதன்)