பதஞ்சலி சித்தர்
பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்த ரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், அனுசூயாதேவிக்கும் மகனாகப் பதஞ்சலி பிறந்தார். ஆதிசேடனின் அவதாரம். இவரின் மூச்சுக் காற்று பட்டவர் சாம்பலாகிவிடுவர் ஆகையையால் தம் சீடர்களுக்கு அசரீரையாகவே பாடம் நடத்தினார். இவருக்கும் சீடர்களுக்குமிடையில் ஓர் திரைச்சீலை இருக்கும். அன்றைய தினம் கௌடபாதர் என்ற சீடரை வேலை நிமித்தம் வெளியில் அனுப்பியிருந்தார். தாம் எழுதிய வியாகர்ண சூத்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சீடர் ஒருவருக்கு தன் குருநாதரைப் பார்க்க ஆவல் ஏற்பட திரைச்சீலையை நீக்கிய அடுத்தகணமே அனைவரும் சாம்பலாயினர். குரு எதை நினைத்து நடக்கக்கூடாது என்றிருந்தாரோ அது நடந்தது. அப்போது ஒரு சீடர் வருவதையறிந்து மானிட நிலையை அடைந்தார் பதஞ்சலி முனி.
தன் நண்பர்கள் சாம்பலாகியது கண்ட கௌடபாதருக்கு பதஞ்சலி ஆறுதல் கூறி நீமட்டும் சீடனாக வேண்டும் என்பது விதியானது. மனதை தேற்று. உனக்கு நான சகல கலைகளையும் கற்றுத் தருகிறேன் என்றார். யோகத்தில் ஆழ்ந்தபோது குருநாதர் பதஞ்சலியாரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
பதஞ்சலி வியாகர்ண சூத்திரம், யோகம் ஆகிய நூலகள் எழுதினார். பதஞ்சலி முனி சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.
பதஞ்சலி சித்தர் தியானப்பூசைக்கு
“ஆயசித்தி அனைத்தும் பெற்ற
சத்திய சித்தரே சப்தரிஷி மண்டலத்தில்
பிரகாசிப்பவரே பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பதஞ்சலியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு இரண்டுமுக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து பிச்சிப்பூ, முல்லைப்பூ மற்றும் பொன்நிறமலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி
ஆதிசேஷன் அவதாரமே போற்றி
இன்பொழிபேசி இகபரசுகம் தருபவரே போற்றி
ஒளிமயமானவரே போற்றி
கடும் நச்சுக்காற்று மூச்சுடையவரே போற்றி
கருணாமூர்த்தியே போற்றி
பூலோக சூரியனே போற்றி
மந்திரத்தின் உருவமே போற்றி
மகாவிஷ்ணு பிரியரே போற்றி
யோக சூத்திரம் அருளியவரே போற்றி
யோகங்கள் அருளும் முனியே போற்றி
ஞானம் அளித்து அஞ்ஞானம் போக்கும் யோகியே போற்றி
நிவேதனமாக இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் இவற்றுடன் பொன்னிற வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
வியாழன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். செல்வம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும். எழும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும். நல்ல மக்கட் பேறு உருவாகும். கல்வி கலைகளில் சிறந்து விளங்குவர். தடைகள் நீங்கி வெற்றிகள் வந்தடையும். உஷ்ண நோய்கள் தீரும். நலன்கள் பல பெற்று இன்புற்றிருப்பார்கள்.
“ஓம் க்லம் ஸ்ரீ பதஞ்சலி சித்தர் பெருமானே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்