Print this page
திங்கட்கிழமை, 15 April 2019 20:20

வேதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு
முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி
தரித்துக் கொண்டு புகாரில்பொருள் நான்கினையும்
இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக்
கருணை புரிந்தல்லார்க்கு நிகரில்
மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#*#*#*#*#

வேதம்!

வேதத்தை வெளிப்படையாக பலருக்கும் சொல்லப்படுவதில்லை. அது ஒரு சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மறைக்கின்றார்கள். அதனால் அதில் வெளிப்படை இல்லை எனச் சொன்னாலும் வேதத்தில் முன் பின் பகுதி போக நடுப்பகுதி விஷயங்கள் ரகசியம் என்றே சொல்லப்படுகின்றன. அப்படி ரகசியம் என்பதை எப்படி எல்லோருக்கும் சொல்ல முடியும்.

வேதம் முழுவதையும் தமிழில் மறை என்பதுண்டு. அது மிகப் பொருத்தமாக இருக்கும் பெயர். தாவரங்களின் வேர் தெரியாமல் மண்ணுக்குள்தான் இருக்க வேண்டும்.. வேர்போன்ற வேதத்தை தனியாக அமர்ந்து ரகசியமாய்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.. ஏன் பகிங்ரங்கமாகச் சொன்னால் என்ன!

தாவரங்களின் பூவைப் பார்க்கலாம்,. காயைப் பார்கலாம், கனியைப் பார்க்கலாம், இலைகளைப் பார்க்கலாம். ஆனால் வேரைப் பார்க்க முடியாது. அப்படி அவ்வேரைப் பார்க்க எண்ணினால் அந்த தாவரமேதன் வழுவை இழந்து விழுந்துவிடும் நிலைக்கு வந்துவிடும். அதனால் வேர் மண்ணுக்குள் மூடித்தான் இருக்க வேண்டும் என்பது நியதி.

வேதத்தை யாரும் மறைத்து வைக்க வில்லை. சொல்லப் போனால் அந்த மந்திரங்களை எழுத சரியான மொழி எழுத்து கிட்டவில்லை. அதனால் அந்த மந்திரங்கள் சப்த உச்சரிப்பினால் தொனியால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் பாடமாகும். இரகசியத்தைச் சொன்னாலும் யாரும் எழுதிக் காட்டமாட்டார்கள் என்பதே உண்மை. வேதம் என்கிற மறை மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதாகச் சொல்லப்பட்டாலும் அவை சப்த ஒலி வடிவில் எங்கும் நிறைந்துதான் இருக்கின்றது..

வேதம் என்றால் அது அறியப்படவேண்டிய ஒன்று. அறிவது என்றால் எதை! எவற்றை! என்ற சந்தேகத்திற்கு எதையெல்லாம் அறிந்து கொண்டால் பரிபூரண ஞானம் அதாவது முற்றறிவு பெற முடியுமோ அவற்றையெல்லாம் அறியத் துணையாக நிற்கும் ஒரு தொகுப்பாகும். ஆனால் வேதம் ஒன்றுதான். அதை வியாசர் என்ற மகரிஷி நான்காகப் பகுத்துள்ளார். அவரை வேத வியாசர் என்பர்.

ஒரு வேதத்தை வியாசர் ஏன் நான்காகப் பிரிக்க வேண்டும். கலியுகத்தில் வேதத்தை அறிய வேண்டும் என்றால் அவர்களின் ஆயுட்காலம் மற்ற யுகங்களை விட குறைவு என்பதாலும், கலியில் வேதங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவு என்பதாலும் கலியுக மக்கள் வேதங்களால் நன்மை பெற வேண்டும் என்பதாலும் ஒன்றாக இருந்த வேதத்தை பிரித்து நான்காக்கி தந்துள்ளார்.

வியாசரால் நான்காக்கப்பட்ட வேதங்கள். ருக்வேதம், யஜூர்வேதம்,. ஸாமவேதம், அதர்வவேதம் எனப்படும். வேதம் ஒரு மரம் என்று கொண்டால் நான்கு பிரிவுகளும் நான்கு கிளைகள். பெரிய கிளைகளிலிருந்து சிறிய கிளைகள் தோன்றுவதுபோல் நான்கு பிரிவுகளிலிருந்தும் பல கிளைகள் உண்டு அவைகள் சாகைகள் எனப்படும். வேதத்தின் உட்பிரிவுகளே மந்திரங்களாகும்.

ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், உபநிடதங்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளது. முடிந்தளவிற்கு சுருங்கச் சொல்லியுள்ளது ஒரு மேலோட்டமாக வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக- குருஸ்ரீ பகோரா.


ஸம்ஹிதை
ஸம்ஹிதை என்றால் தொகுதிகள் எனப் பொருள். ஸூக்தங்கள் எனும் மந்திரங்களைக் கொண்ட இவை வேள்விகள் மற்றும் வைதீக கர்மாக்கள் ஆகியவற்றிற்கும். மனித நலத்திற்காகவும் உபயோகிக்கப்படுபவை.

ருக்வேத ஸம்ஹிதை- ருக்வேதத்தில் உள்ள மந்த்ர ஸமூஹம் 1017 ஸூக்தங்களுடன் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அக்னியில் ஆஹூத் செய்யும்போது ”ஹோதா” க்குரிய மந்திரங்களைக் கொண்டது.

யஜூர்வேத ஸம்ஹிதை- நாற்பது அத்தியாயங்களுடன் 1886 சுலோகங்களைக் கொண்டுள்ளது. இதில் தேவதாவாஹனம், தேவதா ஸ்துதி, வேதிகை செங்கல் தூபஸ்தம்பம் ஆகிய விபரங்கள் உள்ளன. இது வேள்வியை நடத்துகின்ற அத்வாயுக்கான தர்மங்களைக் உள்ளடக்கியவை. யஜுர் வேதம் கிருஷ்ண யஜுர்வேதம், சுக்ல யஜூர்வேதம் என இருவகைப்படும். கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையும், சுக்ல யஜூர்வேதத்தில் வாஜஸனேய ஸம்ஹிதையும் உள்ளன.

ஸாமவேத ஸம்ஹிதை- 32 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இதில் 460 ருக்குகள்-மந்திரங்கள் உள்ளன. 75 ருக்வேத மந்திரங்களும் அடங்கியுள்ளது. கானம்-இசை பற்றியது. ஸாம வேதம் அறிந்த ஒருவரைத்தான் பண்டிதர் என்று சொல்வது வழக்கம். ஸோம யாகத்தில் ஆஹூகு செய்யும் போது ஸாம வேத கானம் பாடப்படும். இறைவனுக்கு மிகவும் பிடித்த கானம்.

அதர்வ வேதம்- இது 20 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 731 ருக்குகள்-மந்திரங்கள் கொண்டது. அன்றாட வாழ்வியல் விவசயிகள், வியாபாரிகள் ஆகியோரின் நடைமுறைகளை விளக்குவது. யாகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு பிரம்மாவுடையது. அத்வர்யு, உத்காத, ஹோதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவர்த்திக்கும் பொறுப்பு பிரம்மாவுடையது.

பிராமணங்கள்!
யக்ஞ விதிகள், நிந்தை, ஸ்துதி, கதைகள், கதை வசனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை.

ருக்வேத பிராமணங்கள்! முப்பது அத்தியாயங்கள் கொண்ட இது இரண்டு பிரிவுகள் கொண்டது. ஐதரேயம், சங்காயாணம் அல்லது கௌஷிதக ப்ராமணங்கள். ஐதரேய பிராமணத்தில் ஐதரேய உபநிஷத்தும், கௌஷிக பிராமணத்தில் கௌஷிக உபநிஷத்தும் உள்ளது.

யஜூர்வேத பிராமணங்கள்! கிருஷ்ண யஜுர் வேதத்தில் வசன நடையும், ஸம்ஹிதையும் கலந்து கூறப்பட்டுள்ளன. இதில் தைத்தரீய உபநிஷத், கடோபநிஷத், ஸ்வேதாசுவதரம் ஆகிய உபநிடதங்கள் உள்ளன.

சுக்ல யஜுர் வேதத்தில் 100 அத்தியாயங்கள் கொண்ட சதபத பிராமணம் உள்ளது. இதில் பிரஹதாரண்யக உபநிஷத், ஈசோப நிஷத் ஆகியன உள்ளது.

ஸாமவேத பிராமணங்கள்! தலவகாரம், பஞ்சவிம்ச பிராமணம், சாந்தோக்ய பிராமணம் ஆகியவை உள்ளன. இதில் கோனாப நிஷத் உபநிஷத்துக்கள் உள்ளது.

அதர்வவேத பிராமணங்கள்! கோபாத பிராமணம் உள்ளது. இதில் முண்டக, பரச்ன, மாண்டுக்ய ஆகிய உபநிஷத்துக்கள் உள்ளன.

வேதாங்கங்கள்- சிஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், சோதிடம், என்ற ஆறும் வேதத்தின் அங்கங்கள் எனப்படும்.

சிஷா- இது அத்யயனம் பண்ணும் முறையை தெரிவிப்பது. ஸ்வர ஞானம், உத்ஸாரணம், மாத்திரை பற்றிச் சொல்வது. வேத வாக்கியங்கள் மாறுதல் அடையா வண்ணம், பதம், க்ரமம் ஆகியவகைகளில் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கின்றது.
பதபாடம் என்பது ஒவ்வொரு வார்த்தையையும் தனித்து அதன் ரூபத்துடன் உச்சரித்தல் ஆகும்.
கிரமபாடம் என்பது இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தல் ஆகும்.

கல்பம்: கல்பம் என்பது க்ரியை முறையாகும். மூன்று அக்னி சம்பந்தமான கிரியைகளைச் சொல்கின்ற சிரௌத சூத்திரங்கள் இதைச் சேர்ந்தவை. யாக சாலை நிர்மாணிக்க வேண்டிய க்ஷேத்ர கணித அளாவு, குறைகளைக் கூறும் கல்ப சூத்திரங்களைக் கொண்டது. இதற்கு ஜியோமிதி அல்லது க்ஷேத்ர கணித பிரக்ஞை வேண்டும்.

வியாகரணம்- வியாகரணம் என்பது ஒரு இலக்கண நூல். பாணினி என்பவரால் எழுதப்பட்ட பாணினி சூத்திரம் இதிலடங்கியது.

நிருக்தம்- சொல்லின் உற்பத்தி முதலியவைகளின் இலக்கணம். யாஸ்கர் என்பவர் இதற்கு பாஷ்யம் செய்திருக்கின்றார்.

சந்தஸ்-இது வேத சம்பந்தப்பட்ட முக்கியமான சாஸ்திரம். இதை யாப்பிலக்கணம் என்பர்.

ஜோதிஷம்-இதில் ககோள சாஸ்திரம் மற்றும் பல சாஸ்திரங்களைக் கொண்டது. கிரஹம் பற்றியவைகளின் சஞ்சாரம் கொடுக்கும் பலன்கள் மனிதர்களுக்குச் சொல்கிறது.

#####

 

Login to post comments