ஓம்நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
&&&&&
சதுர்தசி திதி!
திதிக்குரிய விநாயகர்- விஜய கணபதி, பார்லி உணவு- ருத்திரருக்குரிய நாள். பங்குனிமாத சதுர்தசியன்று திரிபுரார்களைக் கொல்வதற்கு முன் சிவனும் கடலைக் குடிப்பதற்குமுன் அகத்தியரும் அவிக்ன விரதத்தை கணேசர்மீது பூஜைகள் செய்து ஆரம்பித்து விக்னமின்றி வெற்றி பெற்றனர்.
மாசி மாத தேய்பிறைச் சதுர்தசி- மகாசிவராத்திரி. மாதந்தோறும் தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி. அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- யோக சிவராத்திரி.
கிருத யுகத்தில் வைகாசி மாத சுக்லபட்ச சதுர்த்தசி நாளில் சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷவேளையில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்துள்ளது
$$$$$