ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்
#####
பகாளாமுகி!
லலிதையின் சேனாதிபதி தண்டநாதா என்ற பெயரில் இவள். தீச் செயல்களைத் தடுப்பது பயனற்ற பேச்சினை ஸ்தம்பிக்கச் செய்வது எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்குபவள் ஆவாள். பகளா என்றால் கடிவாளம் எனப்பொருள். தேவையற்ற பேச்சுகளை கடிவாளம் போல் தடுக்கும் பகளாமுகியை பகமுகி, வாக்ஸ்தானகரி என்றும் சொல்வதுண்டு. உபாசனையின்போது விதண்டா வாதங்களுக்கு பூட்டு போடுவது போன்று விதண்டாவதிகளை வாத்து / கொக்கு போல் மக்காக்கி விடுவதால் பகமுகி.
நம் குற்றத்தினை பெற்ற தாயைப் போல் பொறுத்தாலும் அநீதியை ஒருபோதும் பொறுக்கமாட்டாது கோபம் கொள்பவள் ஆதலால் சண்டிகாதேவி. மனிதன் இன்புற்றுவாழ அறிவு-சரஸ்வதி, ஆற்றல்-துர்க்கா, செல்வம்-லட்சுமி மூன்றும் சேர்ந்த ஒரே உருவம் ஸ்ரீசண்டிகாதேவி என்கிறது தேவி பாகவதம். மூவரின் மற்றும் தேவரின் தேஜோ ராசிகள் எல்லாம் ஒன்றுகூடி உதவ சமஷ்டி ஸ்வரூபினியான பகளாமுகி ஜனிக்க முடிந்தது. தனித்தனியாக விளங்குவது வியஷ்டி. தனித்தனியாக இருக்கும் யாவும் ஒன்றாகச் சேர்ந்து விளங்குவது சமஷ்டி. எதையும் சமஷ்டியாக நோக்கினால்தான் ஞானம் பெற வழி கிட்டும்.
புத்தி செயல்பட்டு மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தால் மனம் அடங்காது. மூச்சை நிறுத்துவதன் மூலம் மனதின் ஓட்டம் தடைபடும். பகளாமுகியின் தடை செய்யும் ஸ்தம்பன சக்தி இன்றி இராஜயோகமும், ஹடயோகமும் சித்திக்காது.
பகமுகியின் மந்திரத்தால் மழை பொழியாமல் நிறுத்தலாம். அவளுடைய தியானைத்தால் அடக்கப்பட்ட பிரணவாயு, நாடிகளைச் சுத்தம் செய்யும். தடை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. அதன்பின் தடைப்பட்டது சீறிப்பாயும். ஆசனப் பயிற்சி உடலின் அசைவைக் கட்டுப்படுத்தி பிரணாயமத்திற்கு உதவி செய்யும். தடையின்றி வெற்றி இல்லை. தடை சரியாக ஏற்பட்டுச் செயல்படுவது என்பது பகளாமுகியின் கருணாகடாட்சத்தால் மட்டுமே என்பதை அறியலாம்.
எல்லாமே மஞ்சள் என்ற வகையில் மஞ்சள் ஆடை, மஞ்சள் பூமாலையுடன் ஒருகையில் கதாயுதத்தை ஏந்தி மறுகையில் எதிரியின் நாக்கை பிடித்துக் கொண்டிருப்பவள்.
விஷ்ணுவின் கூர்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் பகாளாமுகி. இவள் தெற்கு திசையில் தோன்றியவள்.
அமாவாசையன்று-சத்ரு சம்ஹாரயாகம்-பில்லி சூன்யம் ஆகியவற்றின் தீய விளைவுகள் நீங்கும். வீண் வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சுக்லாஷ்டமியன்று-நவாக்ஷ்சரி மந்திர யாகம்-சர்வரோகசமண மந்திர ஹோமம், ம்ருத சஞ்சீவனி மந்திர ஹோமம்- மூதாதையரின் சாபங்கள், முற்பிறவி பாவங்கள், ராகுதோஷ கொடிய பலன்கள் நீங்கும்.
பௌர்ணமியன்று-பகளாமுகி மஹாமந்திரயாகம்-பக்ய சூக்தம், ஸ்ரீசூக்தம், தேவிசூக்தம் ஆகிய வேத மந்திரங்களால்-திருமண தோஷம் நீங்கி சந்தான சித்தி, ஆரோக்கியம், மேற்படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை கிட்டும்.
பகாளாமுகியின் மூலமந்திரத்தால் யாகம் செய்தால் சத்ரு பயம் நீங்கும், மோட்சம் கிட்டும், குபேரத்துவம் அடைவர், பதவி அதிகாரம் அடைவர்.
#####