Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

இயற்கையின் நிகழ்வு

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

&&&&&

இயற்கையின் நிகழ்வு - சமுதாய ஆர்வலர்களின் சிந்தனைக்கு!

 தந்தை தன் மகளை மூன்றுவருடமாக கற்பழித்தார்.
 ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் கற்பழிப்பு.
 ஆதிவாசிபெண்கள் அதிகாரிகளால் கற்பழிப்பு
 பள்ளி மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்தார்
 சிறுமியை காமவெறியுடன் சிதைத்து கொலை
 கல்லூரி மாணவன் காதலிமேல் ஆசிட் வீச்சு ……… இன்னும் எத்தனையோ நிகழ்வுகள்!

இப்படி நாளும் எங்கோயோ ஓரிடத்தில் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நிகழ்வுகளில் ஒரிரண்டு மட்டும் செய்திகளாக வருகின்றது. பல தெரியாமல் போய்விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளியில் தெரிவிப்பதில்லை. அப்படித் தெரிந்த செய்திகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றது. சட்டங்களும் சமுதாயமும் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுகின்றது. நீதி துறையும், பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. சமுக ஆர்வலர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் அனுபவத்திற்கேற்ப கட்டுரைகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கின்றனர். பத்திரிக்கைகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் சிந்தனை வயப்படுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அந்த நிகழ்வுகளை ஒவ்வொருவிதமாக கணித்து நியாப்படுத்தியும், கண்டித்தும் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அந்த நிகழ்வை மறந்து விட்டு அடுத்த செய்திக்கு தாவுகின்றனர். மறுபடியும் எங்கேயாவது ஏதாவது நிகழ்ந்தால் அப்போது பழையதை எல்லாம் சொல்லி நினைவு கூறி பட்டி மன்றம் நடத்துபவர்களாக மாறி விடுகிறார்கள். செய்திகளை செய்தித்தாள்களிலோ, தொலைக் காட்சியிலோ பார்க்கும் சிலர் அழுத்தம் காரணமாக உடல் சூடேறி உணர்ச்சி வயப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தங்கள் கோபத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். சற்று மாறுபட்ட வடிவில் நாங்கள் இவர்களுக்கு பாதுகாவலர்கள் என தன்னை முன்னிலப்படுத்தும் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொலைக்காட்சி மூலம் விவாதம் நடத்தி தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். சிலர் கட்டுரைகள் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். தொடர்ந்து என்ன நடவடிக்கை என்பதற்கு நமது சமுதாய அமைப்பில் உள்ள வழிமுறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சென்று வென்றிட முனையுமாறு சமூக அமைப்பில் ஆர்வமாக உள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிறுவயதினில் தன் வளரும் அங்கங்களை, இன உறுப்புகளை தொட்டுப் பார்க்கும் தன் உறவினர்களால், நண்பர்களால் அவர்களின் செயல் புரியாமலும் தடுக்கும் நிலையில் இல்லாமலும் இருக்கும் நிலையில் உள்ளனர் நாளைய சமுதாய அங்கத்தினர்கள். தாய் தந்தை முன்னிலையிலும் இது நடப்பதாலும் அவர்களில்லாதபோது நடப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டுமென்றுகூட தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் அப்படி தொடும் போது அது தவறல்ல என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களில் பலர் சிறார்களை கொஞ்சும்போது இனக்குறிகளைத் தொட்டு முத்தமிடல், இது யாருக்கு என சொல்லி கேலி பேசுவதுமான நிகழ்ச்சிகள் இன்றும் பல இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றது. புரிந்தோ, புரியாமலோ இவைகள் குழைந்தைகளின் மனதில் பதிந்து விடுகின்றது.

வளரும் பருவத்தில் கேட்கும், படிக்கும் கதைகளும், பார்க்கும் சினிமா காட்சிகளும், எதிர்பாரமல் நேரில் பார்க்கும் காட்சிகளும் அவர்களுக்கு புரியாத நிலையில் தன் நட்புகளுடன் பரிமாரிக் கொள்ளும்போதும் இனம்தெரியா மயக்க உணர்வினை அடைகின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. தவறு என நினைத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் மேலும் அறிந்துகொள்ள முயன்று முன்னெச்சரிக்கையும் அடைகின்றனர். சிலர் தடம்மாறியும் விடுகின்றனர். தவறு பாவம் என்பவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரித்து நிற்பதால் இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

பருவமடைந்து பலவருடங்கள் ஆகியும் திருமணமாகாமல் உணர்வுகளுடன் அடங்கியிருக்கும் ஆண் அல்லது பெண், பருவமடைந்தபின் எதிர்பாராமல் ஆண், பெண் உறவை தங்கள் வீட்டிலோ வேறு எங்கேயோ பார்த்த ஆண் அல்லது பெண், ஒளிவுமறைவு இல்லாமல் வரும் கதைகள் மற்றும் வண்ணப்படங்கள் பார்த்த ஆண் அல்லது பெண், வாழ்நாள் முழுவது துணை என்று மணந்தபின் ஆசை அறுபது மோகம் முப்பது என்றபடி ஒதுங்கும் ஆண் அல்லது பெண், கணவன் கைவிட்ட மனைவி அல்லது மனைவியால் கைவிடப்பட்ட கணவன், வாழ்வில் பணம் அல்லது வேரொன்று குறிக்கோள் என நினைக்கும் ஆண் அல்லது பெண், திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய ஆண் அல்லது பெண், நாற்பது வயதிற்குமேல் என்ன வேண்டியிருக்கின்றது என நினைக்கும் ஆண் அல்லது பெண் ஆகிய இவர்களே இந்த சமுதாயத்தில் இதுபோன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாக்கள்.

உலகில் பலதரப்பட்ட பெண்கள் / ஆண்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவான உணர்வு ஆண்/பெண் என்ற பாலியல் உணர்வுகள். ஒருவர்மீது ஒருவருக்கு வசீகரமிருக்கும். அது இயற்கை நியதி. அது இயற்கையின் இரகசியம். அதை எந்த ஒரு பாலரும் கேவலமாகவோ, அநாவசியமானது என்று நினைத்தல் மற்ற பாலருக்கு துன்பம் தருவதாகும். வாழ்வு பயணத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வின் பயணத்தை ஆனந்தத்துடன் பயணிப்பதற்காக ஏற்பட்ட இயற்கையின் நியதி. ஆண்பெண் வாழ்வுமுறை இரகசியம். வாழ்வில் வெற்றி கொள்ள புன்னகைதவழும் முகத்துடன் இருபாலரும் வலம் வர ஏற்பட்ட உறவு தாம்பத்தியம். இயற்கையின் அமைப்பே பெண் வசீகரமிக்கதாகவும் ஆண் வசீகரிக்கப்படும் இனமாகத்தான் படைக்கப்பட்டுள்ளது. பெண் மென்மையான உறுதியுடனும், ஆண் வலிமைமிக்க உறுதியுடனும் படைக்கப்பட்டது பொதுவான இயற்கையின் நியதி. இந்த இயற்கை நியதியில் வக்ரமில்லை. வக்ர உணர்சியுமில்லை. பெண்ணுக்கு ஆண் அவசியம், ஆணுக்கு பெண் அவசியம். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. சமுதாய மேம்பாட்டிற்கு இந்த உணர்வுகள் ஒன்றுவது அவசியமாகிறது. சுதந்திரம் இரு பாலருக்கும் பொதுவானது. சுதந்திரம் என்ற பெயரால் ஒன்றை ஒன்று மீறக்கூடாது. ஒற்றுமையைக் கட்டக்கூடிய அளவில் இருபாலரின் சுதந்திரம் இருந்தால் அங்கு மனிதநேயம் பிரகாசமாகும். மற்ற பாலரின் விருப்பு வெறுப்புகள் பாதுகாக்கப்படும் ஒற்றுமையான சுதந்திரம் இல்லையென்றால் கட்டுப்பாடில்லை. அங்கு எல்லாம் தீர்க்க முடியாத துயரங்களே நிறையும்.

திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தன் மறுபாலினரின் விறுப்பு வெறுப்புகளை மதித்து விட்டுக்கொடுத்து மனிதநேயத்துடன் அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவது தம் வாழ்வியல் கடமை எனநினைத்து நடந்துகொண்டால் திருமணமான ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத உணர்வுகள் எப்போதும் ஏற்படாது. தினமும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அவர்கள் விரும்புவது கிடைத்தால் வேறு மாற்று எண்ணங்கள் தோன்றாது. கால சுழற்சியில் சுரப்பிகள் செயல்பட்டு உணர்ச்சிகள் தூண்டப்பட போதிய அவகாசம் வேண்டும். இதுவே அடிப்படை. அப்படி வேண்டியது கிடைக்காதவர்கள்தான் திருட்டுப்பாலில் சுவைகாண விரும்புவர். அது பூனை குணம். அவர்களின் பார்வையில் ஓர் கள்ளத்தனம் குடியிருக்கும். தொடர்ந்து அவர்களுக்கு அது கிடைக்காத நிலையில், நாளடைவில் அது அதீதத் தன்மையுடையதாகிவிடும். ஆணோ பெண்ணோ இப்படி தீர்க்கப்படாத அதீத உணர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அமைதி அடைய முற்போக்கு சமுதாய திட்டமிடல் வேண்டும். மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆழ்ந்தவர்களால்தன் நிகழ்த்தப் படுகின்றது என்பதை புரிதல் வேண்டும்.

இந்த ஆண் அல்லது பெண் நமது சமுதாய அமைப்பிற்குப் பயந்து பெறும்பாலும் அதீத உணர்வுகளுடன் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த உணர்வுகள் கூடிய உணர்ச்சிகள் பல காலமாக அவர்களிடையே நீறு பூத்த நெருப்பாக தனலாக எரிந்து கொண்டுதானிருக்கின்றது சாம்பலின் அடியில் கனல் இருப்பது போன்று. அவர்கள் எல்லோரும் சாம்பலைப் போன்று நல்லவர்களே நல்ல சந்தர்ப்பம் வரும்வரை. உணர்வுகள் அமைதியாய் இருக்கும்வரை. ஏதோ ஓர் சூழலில் பூத்த சாம்பலில் இருக்கும் கனல் பூத்து அவர்களை தன் நிலை மறக்க வைக்கும். அதுவே அவர்களின் உடன் செயல்களும் அதைத் தொடர்ந்த திட்டங்களும். செயலாக்கமும். இது அவர்களுக்குள் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உணர்வு. அவர்களுக்குகூடத் தெரியாமலிருக்கலாம். இதை விரக்தி வேகம் கொண்டு அமைதியாக இருக்கும் வியாதி எனக்கூட கூறலாம். ஓர் செயலைக் கண்டதும் அல்லது கேட்டதும் அழுத்த நோயுள்ளவர்களின் செயல்பாடு எப்படி வீறு கொண்டிருக்குமோ அது போன்ற தன்மையுடையது இவர்களின் உணர்வு. பல சூழ்நிலைக் காரணங்களால் இந்தவித உணர்வுகளை அவர்கள் செயல் படுத்தும்போது பலர் தப்பிவிடுகின்றனர். சிலர் மாட்டிக்கொள்கின்றனர். செயல் படுத்தும்போது அதை செய்பவர்கள் எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். பின் விளைவுகளை யோசிக்கும் நிலையில் அவர்களது மனம் இருப்பதில்லை.

உணர்வுகள் என்பது சாதாரணமான விஷயமில்லை. எவ்வளவு காலமானாலும் உள்ளத்திலிருக்கும். எந்த சூழலிலும் மீண்டும் அது தோன்றும். உங்களுக்கு சிறுநீர் பையில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிரமங்களும் சிக்கல்களும் அதை அனுபவிக்கும் போதுதான் தெரியும். அந்தப் பை முழுவதும் நிரம்பினால் மருத்துவர் உதவியுடன் அதை சரி செய்தவுடன் ஓர் நிம்மதி ஏற்படும். மலம் கழித்தலிலும் சிறுநீர் கழித்தலிலும் வெளியேற்றத்திற்குப்பின் ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது. இதைப் போன்றதே இந்த பாலியல் உணர்ச்சிகள் நிறைந்த ஒருவன் அல்லது ஒருத்தி அதனை நீண்ட நாள் அடக்கிவைத்தலும் ஆரோக்கியமானது அன்று. அவ்வாறு அடக்கிவைத்தலின் முடிவே அதீத எண்ணங்களின் வெளிப்பாடு. எனவே இயற்கையான இந்த உணர்வுகளின் அடிப்படியில் இந்த சமுதாயம் இந்த நிகழ்வுகளுக்கு ஓர் நிரந்தர மாற்று வழி காணவேண்டியது அவசியம். உணர்வுகளை அடக்கிவைத்த இருபாலருமே முகம் களையிழந்து கண்கள் ஒளியிழந்து சொற்களில் சுவராசியமில்லாமல் செயல்களில் ஓர் உந்துத்தல் இல்லா சலிப்பான நிலையில் இருப்பார்கள்.

இதிலிருந்து விடுபட எத்தனையோ வாய்ப்புகளும் வழிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அதை எல்லாம் நமது சமுதாயம் அங்கீகரிக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் பழகும் ஆண் அல்லது பெண் உதவியை நாடுகின்றனர். சிலர் வேறு சிலரின் பழக்கத்திற்கு உடன்பட்டு போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். சிலர் ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். சிலர் எல்லாவற்றையும் மறந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருப்பினும் உணர்ச்சிகள் அமைதியடையா நிலையில் இருந்து வரும் ஆண் அல்லது பெண் ஓர் நாள் ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் உணர்வுகளில் கிளர்ச்சி தோன்றி கட்டுக்கடங்கா நிலையில் தன்நிலை அறியாமலே தவறு செய்யத் தூண்டப்படுவர். நீண்டநாள் அடக்கிவைத்த உணர்வுகள் கிளர்ந்தெழும் அந்நிலையில் அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களின் உணர்ச்சிக்குத் தீர்வு என்ற ஒன்றோயாகும். அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அது ஒருவித வெறிகொண்ட செயலாகத்தான் இருக்கும். அந்த உணர்விற்கு தீர்வுகாண முயற்சி செய்து வென்றாலும் தோற்றாலும் நாம் இப்படிச் செய்துவிட்டோமே என பின் வருந்துவர். செயல் நடந்தபின் வருந்தி என்ன செய்ய! காலம்தாழ்ந்த எண்ணம்! இந்த உணர்வுகளால் தோன்றும் கொடிய நோயின் தாக்கத்தில் இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மிடையே என்னென்ன வழிமுறை கொண்டு அவர்களை அந்த தாக்கத்திலிருந்து காக்க முடியும் என்பதை மக்கள் சமூக நல சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

இப்படி இயற்கை உணர்ச்சிகளின் அடிப்படையில் நிகழ்வுகள் நடப்பதை, ஏன் நடக்கின்றது என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த உணர்வுகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள நாம் அந்த நிகழ்வுகளை ஆராய வேண்டும். அப்படியின்றி ஒரு நிகழ்வைக் கண்டு அது தவறு அவர்களை அடி, உதை, தூக்கிலிடு என்பதாலாயோ அல்லது சட்டதிட்டங்கள் போட்டதாலோ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் என்பதற்கு யார் பொறுப்பு!. உண்மைதனை அலசி ஆராயவேண்டும். ஒர் நிகழ்வு வெளியான அடுத்த நாளே மற்றொன்று நடப்பதே இதற்கு சாட்சி. இயற்கையான பால் உணர்வுகளை மதிக்க வேண்டும். சட்டங்கள் எல்லோருக்கும் பொது. அது இந்த சமுதாயத்தில் பாதுகாப்பும் தவறு செய்பவர்களை தண்டிக்கவும் இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே.

ஒர் சிறு பெண்ணுக்கு என்னவென்று அறியாத புரியாத நிலையில் நிகழ்வுகள் நடப்பது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்று சமுதாய கொடுமைகள் நடக்காமலிருக்க ஆரம்ப அடிப்படை உண்மைகளை தெளிந்து வளரும் சமுதாயம் ஆரோக்கியமாக வளர உரிய நடவடிக்கையாக இருக்க முடிவு எடுக்க வேண்டும். ஏதோ சமூக ஆர்வலர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காக ஏனோதானோவென்று அரசின் முடிவுகள் இருக்கக்கூடாது. இந்த வேகம் விவாத மேடைகளுடன் நின்று விடக்கூடாது. இயற்கையான பால் உணர்வுகளுக்கு தீர்வாக திட்டங்கள் அமைந்தால்தான் குற்றங்களின் போக்குகள் குறையும். காலப்போக்கில் அது மறைந்து குற்றங்களில்லா நிலை ஏற்பட வழிவகுக்கும்.

பாலியல் பலாத்காரம் என்பது இருபாலருக்குமே உரியது, வெளியில் தெரியாத நிலையில் எத்தனை பேர் என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியுமா! சொல்ல முடியா நிலையில் உணர்வுகளை அடக்கிவைத்த நிலையில் பலர். எந்த இனத்தவருக்கும் யாருக்கும் யாரும் ஆமோதிக்க வேண்டியதில்லை. ஆதரவு காட்ட சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆண் ஆணாலும் பெண் ஆணாலும் அவர்களும் ஓர் ஆத்மா. இவ்வுலகின் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து அனுபவித்து ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாழ உரிமையுள்ளவர்கள். இருபாலருக்கும் அந்த ஆனந்த சந்தோஷம் சரியாக குறைபாடியின்றி கிடைக்கின்றதா! என்பதை புரிந்த சமுதாய சீர்திருத்தம் ஏற்படவேண்டும். இந்த குறைபாடுகளின் வெளிப்பாடே நடக்கும் நிகழ்வுகளுக்கு காரிய காரணம்.
சட்டங்கள் அனைவருக்கும் பொது. சட்டங்கள் நிறைவேற்றினாலும் அது பயனுள்ளதாகவும் மீண்டும் உபயோகமின்றி போகாததாகவும் மாற்றமில்லாத நிலையானதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் நிறைந்த புண்ணிய பூமி இது. எல்லா சமூக அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்நிலையை ஆய்ந்து நம் வரும்கால சமுதாயத்திற்கு ஓர் நல்ல வழியை தெரிவு செய்து முறைப்படுத்தி வழங்கி அந்த வருங்கால சமுதாயம் சந்தோஷமுடன் இயங்கிட உதவிடுங்கள் என அன்புடன் அழைக்கும்- குருஸ்ரீ பகோரா.

Login to post comments