Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

நீயே நவரத்தினம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

&&&&&

நீயே நவரத்தினம் !

ஒவ்வொரு மனித ஆன்மாவின் உடலும் சிறப்பான தன்மைகளைக் கொண்டது. பஞ்ச பூதங்கள் எனக் கூறப்படும், நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய அனைத்தின் தன்மைகளை உள்ளடக்கியது ஆன்மாவின் உடல். அந்த ஆன்மாவின் மூளை பலசிறப்புக்களைக் கொண்டது.

ஒரு வெற்றிக்குத் தேவையான சிந்தனை, செயலாக்கத் திட்டம், மேற்பார்வைத்திறன் ஆகிய மெச்சத்தக்க, ஒரு தலைவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது.

ஒரு தொடர்ச்சியான வெற்றிகூடிய ஆன்மாவாக இருக்கவிரும்பினால் அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருத்தல் வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருத்தல் அவசியம்.

காலம் கனிந்துவரக் காத்திருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் தனது நினைவு திறனைத் தீட்டி செயல் வெளிப்பாடுகளை கவனமாக, நேர்மையாக வெளியிட்டு வெற்றிகாண முயலவேண்டும். வெற்றிக்காண வழிகளைக் கையாண்டு, தொடர்ந்து முயற்சி செய்தல் நன்று. படிப்படியாக திட்டம் நன்கு செயல்பட்டால் வெற்றியின் கனியை விரைவில் ருசித்து ஆனந்தம் அடையலாம்.

சந்தர்பங்களை குறிவைத்து. திட்டங்களை வரிசைபடுத்தி, செயல் துரிதமாக, கடின உழைப்புடன், சூழ்நிலையின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, திறந்த மனதுடன் நேர்மையாக செயல்பட்டால் பாதை, வெற்றியின்பாதை தெளிவாக புலப்படும். கடுமையான உழைப்பிலும் தடைகள் தாண்டி பெற்ற வெற்றியே ஆனந்தமானதாகும்.

இந்த வெற்றியை நாம் பெற்று ஆனந்திக்க நம் மூளையின் பல பகுதிகள் நமக்கு ஒன்பது வகை குணாதிசயங்களாக இயங்கி செயலாற்றம் காண்கிறது. இந்த ஒன்பதுவகையான குணங்கள் நவரத்தினங்களின் தன்மைகளை ஒத்துள்ளது. இந்த ஒன்பது நவரத்தினங்களின் குணாதிசயங்கள் செயல்பாடுகள் ஒன்பது நவகோள்களுடன் ஒத்த கருத்துடையவையாகும். எனவே நவகிரக தாக்கம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்திற்குரிய ரத்தினங்களை தேர்ந்து பயன்படுத்தினால் அதன் சீரிய தன்மையினால் உடலில் ஓர் உந்துதல் ஏற்பட்டு மூளை சிறப்பாக செயல்பட வாய்ப்பாக அமையும். அந்த ஒன்பதுவகை மூளையின் செயல்கள்

1. ஒரு செயலுக்காண உரிய, நல்ல தருணத்தை கண்டுபிடிக்க உதவும் திறமை. அந்த தருணம் எது என்பதை பகுத்து ஆராயும் பகுதி. இது ‘முத்து’ -ன் தன்மையைக் கொண்டது. முத்து- சந்திரன்- கிரகபலன் கொண்டது. நல்முத்துக்கள் ஒளிதாக்கி மின்னும். ஊடுறுவாது. பால் அல்லது மங்கிய நிறம். உடல் ஆரோக்கியமாய் இருக்கும். முகம் வசீகரம் ஏற்படும். திருமணம் கைகூடும். தூய்மையான உள்ளத்தையும் பணிவையும் ஏற்படுத்தும். கணவன், மனைவி நெருக்கம் அதிகமாகும்.

2. வாழ்வின் போட்டிக் களத்தை சீர்படுத்தி சுறுசுறுப்பாகக் குவியும் மையப்புள்ளியாக உறுதியாக தீர்மாணிக்கும் இந்தப்பகுதி ‘மரகதம்’ -ன் தன்மையைக் கொண்டது. மரகதம்- சுக்கிரன்- கிரகபலன் கொண்டது. பச்சை நிறத்துடன் ஒளிவிட்டுப்பிரகாசிக்கும். அணிந்தால் வழ்வில் ஒரு குறையுமின்றி புகழும் உயர்பதவியும் அடைவர். ஆரோக்யம் கெடாது. மணவாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும்.

3. தொழிலின் நிலைகளை முதன்மையாக வரிசைப்படுத்தி சரியாக தயார் நிலையில் கண்ணுக்குப் புலப்படும் பார்வையில் வைப்பது. இது ‘புஷ்பராகம்’ -ன் தன்மையாகும். புஷ்பராகம்-குரு-கிரகபலன் கொண்டது. பல நிறங்களில் பிரகாசிக்கும். வெள்ளையாக இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக சிறிது மஞ்சள் கலந்து இருக்கும். சற்று கடினமானது. அணிந்தால் சத்ருக்களை வெல்வர். கோபதாங்கள் குறையும். சந்தான பாக்யம் ஏற்படும்.பதவி உயரும். விபத்துக்களிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி.

4. சமர்த்தியமான ஒழுங்கான விழிப்புணர்வுடன் அருகில் நெருங்கி நடை முறைப்படுத்தி விருத்தி செய்தல். இது ‘கோமேதகம்’ -ன் தன்மையாகும். கோமேதகம்- இராகு- கிரகபலன் கொண்டது. பழுப்பு கலந்த சிவந்த நிறத்துடனும், மஞ்சள் பொன்னிறத்துடனும் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியதாக இருக்கும். பிரகாசமான ஒளியுடையது. அணிந்தால் மனமகிழ்ச்சியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். வருமானம் பெருகும். கணவன் மனைவி உறவு மேம்படும். நோய்களுக்கு பாதுகாப்பாகும்.

5. தீவிர உணர்ச்சியுடன் வெற்றியடைய ஆவல்கொண்டு, பெருவிருப்பத்துடன் பண்படுத்தி விருத்தி செய்தல். இது ‘வைடுரியம்’ -ன் தன்மையாகும். வைடூரியம்- கேது, சனீஸ்வரன்- கிரகபலன் கொண்டது. கருஞ்சிவப்பு வைடூரியம் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியது. பிரகாசமாகவும், கடினமாகவும், கணமாகவும் இருக்கும். அணிபவர் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கெட்டகாரியங்களைச் செய்யக்கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் கடும் நாசம் ஏற்படும். பரிசுத்தமானவர்களுக்கு எல்லா நன்மைகளையும் பெறுவர். ஆரோக்யம் பெறுவர். பணம் தட்டுப்பாடு இருக்காது. ஆயுள் நீடிக்கும். அடங்காத மனைவியும் அடங்கி நடப்பர். மகிழ்வு அடைவர்.

6. தீர்க்கதரிசிபோல உந்துசக்தியை இயங்கவைத்தல். இது ‘நீலம்’ -ன் தன்மையுடையது. நீலம்- சனி- கிரகபலன் கொண்டது. வாழ்க்கையை மேம்படையச் செய்யும் அல்லது அடியோடு நாசமாக்கிவிடும். சுத்தமானதாகவும் குற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். பரிசோதித்து வாங்கவும். கெட்ட கண்பார்வையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். சபைகளில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தனலாபம் ஏற்படும். கண்டங்கல் நீங்கி தீர்க்காயுள் கிட்டும். சனித்தோஷம் நீங்கும். இது அணிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது. நேர்மையான வழியில் சென்றால் உலகப் புகழ் அடையலாம்.

7. எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து உறுதியாக முன்னேற்றம் காண மீண்டும் மீண்டும் முயற்சித்தல். இது ‘பவளம்’ -ன் தன்மையாகும். பவழம்- செவ்வாய்- கிரகபலன் கொண்டது வெண்மை கலந்த சிவப்பு நிறமே நல்ல பவழம். ஒளி ஊடுருவாது. கணமாகவும் குண்டாக சற்று நீண்டிருக்கும். எளிதில் உடைக்க முடியாது. கடன் தொல்லைகள் நீங்கும். கோபக்காரரை சாந்தமானவராக மாற்றிவிடும். முகத்தில் ஒளியையும் கவர்ச்சியையும் உண்டு பண்ணும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். போலி கல்லினால் சீரழிவு ஏற்படுமாதலால் பரிசோதித்து வாங்கவும்.

8. முழு வெற்றிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வது. தலைமையேற்று உறுதி எடுத்துக்கொள்வது. இது ‘வைரம்’ -ன் தன்மையாகும். வைரம்- புதன்- கிரகபலன் கொண்டது. நவரத்தினங்களில் தனி மதிப்புடையது. நீரோட்டமுள்ள நல்ல வைரத்தில் ஜீவ சக்தி உண்டு. ஆயுள் விருத்து உண்டு. சத்துருக்களை பணிய வைக்கும். வைரக்கல்லில் நீர் பட்டு உடம்பில் பட்டு வந்தால் ஆரோக்யத்துடன் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, புகழ் அனைத்தும் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். ஒத்துவராத ராசிகளும் உண்டு அவை அழிவை ஏற்படுத்தும் பார்த்து சோதித்து அணியவும்.

9. மேற்கூரிய எல்லா செயல்களையும் முன்னின்று நடத்தி வெற்றிகொள்ளும் தன்மை. இது ‘மாணிக்கம்’ -ன் தன்மை. மனிதனை, மனித ஆன்மாவை மனிதருள் மாணிக்கம் எனக்கூறும் வண்ணம் இந்தப் பகுதியின் செயல் இருக்கும். மாணிக்கம்- சூரியன்- கிரகபலன் கொண்டது. இது நான்கு வகைப்படும். 1.பத்மராஜம்- தாமரைநிறம், 2.குருவிந்தம்- நல்ல சிவப்புநிறம், 3.சௌகாந்தம்- மஞ்சள் கலந்த சிவப்பு, 4. நீலகாந்தி- நீலவான நிறம். பதவிகள் உயரும். மனவலிமை அற்றவர்கள் மனோவலிமை அடைவர்.

இப்படி ஒன்பது நவரத்தினங்களின் தன்மைகளை உள்ளடக்கிய, ஒன்பது ஒப்புயர்வற்ற செயலாற்றல்களால் ஆன்மா தனித்தன்மை பெறக்கூடியப் பகுதிகளை நம்முள்ளே, நம் மூளை கொண்டு செயல்படுவதால் அதை ஏன் நவரத்தினம் எனக் கூறக்கூடாது. இந்த ஒன்பது குணாதிசயங்களை ஒன்றுகூட்டி செயல் பட்டால் மனித ஆன்மாவின் உடலே நீயும் ஓர் நவரத்தினம் ஆவாய்!

எந்த மரத்திலோ, செடியிலோ தோன்றிய விதை காற்றால், நீரினால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு, பலநாட்கள் புதையுண்டு, காத்திருந்து, முளைவிட்டு கிளர்த்தெழுகின்றது போல மனித ஆன்மாவே! நீ எங்கு தோன்றினாலும், எங்கு இருந்தாலும் உன்னுள் ஓர் அபரிதமானசக்தி இருக்கின்றது. அதை உணர், புரிந்துகொள். அதை வெளிக்கொணர முயற்சிசெய். மேன்மையடைவாய். வெற்றிகொள்வாய் வாழ்வில்.குருஸ்ரீ பகோரா

888888

Login to post comments