ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
சாம்பவி மண்டலச் சக்கரம்!
1297. சாம்பவி ச்க்கரம் பற்றி சொல்வதனால் எட்டு இதழ் தாமரையின் சிறந்த பகுதியாய் இருப்பவை விந்து நாதம் சத்தி சிவன் என்ற நான்காகும்.. இவற்றில் கண்ணாகக் காண்ப்படுவது விந்து. இதை உணர்ந்து நடப்பவர்களை உலகதார் அறிந்து வழிபடும் நிலை உண்டாகும்.
1298. உலகறிந்த மண்டலமான இச்சக்கரத்தில் கோணல் அகல இரண்டு பக்கங்களிலும் வீதிகளை அமைக்க வேண்டும். சிறந்த எட்டு இதழ் தாமரை நடுவில் உள்ள பதினாறு வீதிகளில் இதழ்கள் அகல் நான்கு பக்க மூலைகளும் அவற்றில் இடை இடம் நான்கும் நடு இடமும் ஆகும்.
1299. இச்சக்கரம் இருபது அறைகளை கொண்டது நடுவில் லிங்க வடிவம் நான்கு நாற்கோணங்களில் நான்கு நான்கு இலிங்கம் இடைவெளி. நான்கில் நான்கு பூக்கள் நடுவிலும் பூ என அமைய வேண்டும்.
1300. நடுவீதியில் க் காரம் முதம் ஷ் காரம் வரையுள்ள் முப்பத்தைந்து எழுத்துக்களையும் சிவய்நம் என்ற ஐந்து எழுத்தையும் மாறுபட்ட நிறத்தில் வல்மாக எழுத்வும். இதுவே தூய்மையான சிவயநம என்றாகும். தெ/ளிந்தபின் பயிற்சியாளருக்கு குறை ஏதுமில்லை.
1301. சொல்லியவாறு சொல்லில் குறையேதும் எற்படாமல் ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை அடையலாம். வேதத்தின் கூற்றில் பிரணவத்து ஒலியே என்று உணர்வார்க்கு இறப்பு உண்டாகது. என உரைத்தனர்.
1302. வெளியில் காண்ப்படும் பொருளும் உள்ளே மனத்தில் காணும் தெய்வமும் போற்றப்படும் ஊரும் நன்மைக்ள் பெருகும் புண்ணிய தீர்த்தமும் உண்வும் உணர்வும் உரக்கமும் முய்ற்சிக்காமலே வந்தடையும் பொன்னும் ஆகிய்ன இச்சாம்பவியால் உண்டாவன.
1303. ஐந்தெழுத்து தோன்ற இடமான நாதமாகிய் ஒசையின் வழி போகும் இடமான உச்சித்துளை வழி சென்றால் தாம் எண்ணிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும். உலகத்தில் பகைஎன யாரும் இருக்க மாட்டார்.
1304. சாம்பவி மண்டலச் சக்கரத்தை வணங்குபவரிடம் பகை இல்லை. நகைப்புக்குரிய நிகழ்ச்சிகளும் இடம்பெறா. நாள்தோறும் நன்மைகள் உண்டாகும். தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவியும் இல்லாமற் போகும்.. தடை ஏற்படாது. நீர் போல் குளிர்ந்த குணம் உடையவராக இருப்பர்.
1305. சாம்பவியை ஐந்தெழுத்தால் வணங்கலாம். எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும். நிலம், முதல் வானம் வரை சூரிய சந்திர மண்டல்ம் ஆகவும் மேலான உடலில் உயிராகவும் உயிரில் உணர்வாகவும் விளங்கும்.
1306. சிவாயநம என சிந்திப்பவ்ர்களுக்கு உள்ளே உந்தியினின்று தலைமுடிய பிரணவம் தோன்றி எழும். அந்த பிரணவமே ஐந்தெழுத்து வடிவான முதல் நிலையாகும். சிவனும் சத்தியும் நாத விந்து தத்துவங்களின்று உடலைக் கொண்டு வரும். திரும்பவும் சத்தி சிவத்தை எண்ணியபோது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் இலயம் அடையும்.
#####