Print this page
ஞாயிற்றுக்கிழமை, 10 May 2020 17:12

மார்க்க சைவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

#####

மார்க்க சைவம்!

1427. பொன்னால் செய்யப்பட்ட உருத்திராக்காமான சிவ சாதனம், திருநூற்றுப் பூச்சான சிவசாதனம், ஐந்தெழுத்து ஓதலான ஞான சிவ சாதனம்,, தீயவருடன் சேராமல் நல்லடியார்களுடன் செர்ந்திருத்தலான சாதனம், ஆகியவை சுத்த சைவர்குரிய சன்மார்க்க ஒழுக்கம்.

1428. குற்றம் நீங்கிய ஞான ஓலி வீசும் ஞானத்திற்கு மன்னன் ஆகி துன்பம் இல்லாத வேதாந்த சித்தாந்தங்கள் பொருந்தும் ஞானம் உடையவன். மேன்மையுடைய சுத்த சைவத்தில் பக்தி உடையவன் அழிவில்லாதவன்.

1429. காரணம், காமிகம், வீரம், சித்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிர பேதம், மகுடம் இந்த ஒன்பது ஆகமங்களே விரிவைப் பெற்று இருபதெட்டு ஆகமங்களாக ஆகும். அவை சைவம், சௌத்திரம், ஆரிடம் என மூன்று வகையாகி வேதாந்த முடிவாகி சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றானது.

1430. கேவலத்தில் சாக்கிரம் செப்பனம் சுழுத்தி என்ற மூன்று சுத்தத்தில் சாக்கிர சொப்பனம் துரியம் துரியாதீதம் என்ற நானகு ஆகிய எழும் சத்தும் அசத்தும் ஆகியவனவாகி அவற்றைக் கடந்துமான பராபரை சீவர்களைச் செலுத்தும் பராபரை, சீவர்களுக்குள் பொருந்திய் உயிர்க்கு உயிரான பராபரை சிவத்திற்கு அருட் சத்தியாய் எங்கும் பரந்துள்ளாள்.

1431. சத்து அசத்து ஆகியன கடந்த ஞானியர் சத்தியே தாமாகி, அறிவு, அறியாமை நீங்கிய சிவமாய் பாலிக்கும் பாவனையில் இரண்டு அற்ற நிலையில் அதீத பாவனையில் முழுகியிருப்பவர்களிடம் அனைத்து சித்திகளும் விளங்கும்.

1432. ஆன்மாவான தன்னையும் பரமசிவத்தையும் சதாசிவனான மன்னனையும் பதிபசுபாசம் ஆன முப்பொருளையும் அநாதியாய் இருந்துவரும் பாசத்தன்மை யையும் குற்றமற்ற வீடு பேற்றையும் சுத்தசைவர் தடை நீங்கும் வழி என எண்ணுவர்.

1433. முழுமையான சிவத்தில் சித்தத்தை வைத்து ஆனம் போதம் அற்று மறை முடிவைப் பெரிது என ஆனந்தத்துடன் துவாத சாந்தத்தில் முறையாகப் பெறும் சிவபோகம் சுத்த சைவர்க்கு முதல் நிலையில் கிடைக்கப் பெறும்.

1434. தன்மையான ஞானத்தில் மதிப்பு இல்லாது சிறந்த யோகமும் பெரிது எனத் தெளிந்து கொள்ளாத சிந்தனையை தெளியச் செய்து அங்குச் சிவத்தை சிவோகம் பாவனையைச் செய்து முறையாய் நிற்றல் ஞானிக்குரிய சரியை ஆகும்.

1435. வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம்ம வித்தையை அறிந்தவர், நாத தரிசனம் செய்தவர், நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வு அடையாமலும் நிற்கும் மேலான யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையவர் இயற்கையை அறிந்து தக்க உபாயத்தால் சிவத்தைச் சேர்வர்.

1436. வானை இடமாகக் கொண்ட மேகங்கள் வானத்தைசென்று அடையா. கண்ணால் காணப்படும் பல் காட்சிப் பொருள்கள் கண்களைத் தாமாக வந்து பொருந்தா. அவற்றைப் போன்று எண்ணத்திற்கு அப்பால் உள்ள பொருளாக எண்ணப்படும் சிவபரம் பொருளை பசுவான சீவர்களைப் ப/ற்றியுள்ள் பாசங்கள் சென்று அடையாது.

1437. பிரமம் என்பது ஒன்றே எனும் வேதாந்த இலட்சியமும் இறைவன் வேறு சிவன் வேறு எனும் துவைதமும் இல்லாததாய் பொருள் இயல்பினால் வேறாய்க் கலப்பினால் ஒன்றாய்ச் சுத்தாந்த பாவனையில் நின்று சமய நிந்தனையை விட்டு அகன்று பராபரையான நேயப் பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்று சிவமாதலே சித்தாந்தத்தால் பெறப்படும் சித்தி.

#####

Read 1656 times
Login to post comments