ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#####
யோகம்!
1457. மூலாதாரம் தொடங்கி வீணாத்தண்டின் ஊடே பிரமரந்திரத்தைச் சேர்த்து உண்மைப் பொருளான சிவத்துடன் பொருந்தி தறியைப் போன்று உடலில் அசையாமல் இருக்கச் செய்து, உடலை சொறிந்தாலும் தாக்கினாலும் துணுக்கென்று உணராமல் இலட்சியப் பொருளான சிவத்தை அறிவர்க்கு அயலாய் பொருந்த முடியும்.
1458. பல காலம் யோகத்தைப் பயின்று ஞானம் பெற்றவர்க்கன்றி மற்றவர்க்குப் பலகாலமானாலும் உணரப்படாதவன். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும் நான்முகன் ஆகிய தேவர்க/ள் ஊழிக்காலம் முயன்றாலும் அவனை அடைய இயலாத ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளான்.
1459. மலரில் மணம் பொருந்தியிருப்பதுபோல் சீவனுக்கு சிவ மணம் விளையும். எழுதப்பெற்ற ஓவியம்போல் அசையாதிருந்து அறியும் வல்லமை உடையவர்க்கு பூனுகுப்பூவை சேர்ந்த நடுதறி மணத்தைப் பெறுவதுபோல் நறுமணம் உண்டாகும்.
1460. உயர்ந்தோம் எனக் கூறி யோகத்தால் உள்ளே கூறும் பொருளைக் காணமாட்டீர். சுவதிட்டானத்தில் பொருந்திய சிவத்தை சிந்தையில் பொருந்தி தெளிவுபெற்று இருளை நீங்கினால் பழமையாய் வரும் பிறவிக்கு மூலத்தை நீக்கும் மருந்து விதையாகும்.
1461. இலக்கண அறிவு இல்க்கிய அறிவு அறுபத்து நான்கு கலை அறிவு என்பனவற்றால் பழியைத்தரும் பாசத்தால் உண்டாகும் பிறவியை நீக்காது அழிவு செய்யும் சந்திரன் அக்கினி கதிரவன் ஆகியவற்றை வரிசைப்படுத்தி தலைக்குச் செல்வதால் ஒளி அமைவதை உணர்ந்தேன்.
1462. சந்திரன் சூரியன், அக்கினி ஆகியவற்றை சிரசில் சேர்க்கும் யோகத்தை உள் அன்புடன் செய்பவர் தவம் உடையவர். தத்துவமசி என்ற பெரும் வாக்கியத்தின் பொருள் இதுவே. உண்மையான தவம் இதுவே. இதுவே தேவர் ஆக்குவதும் ஆகும்.
1463. உடம்பில் அக்கினி மயமாய் இருந்து சூட்டை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உத்தமனாகிய சிவம். ஆண் பென் கூட்டுறவிலிருந்து அக்கினி மண்டலத்தில் விளக்கம் அடையும் அக்கினியை காப்பாற்றி மேல் எழும்படி செய்தால் மீண்டும் பிறவிக்கு வராத ஒலி உலகைத் தரும். நாண்ம் கொண்டு இதைச் செய்யாமலிருந்தால் நரகத்தில் செலுத்தி மீண்டும் பிறவி எடுக்க் வேண்டும்.
1464. நேர்மையுடைய செங்கோல் மன்னர்கள் உண்மையான வேத நெறி விளங்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம்பேர் இந்த உண்மையை உணராமல் அழிந்தார்கள். யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாய் பரமசிவத்தை தவிர வேறு உயிர்க்கு நன்மை செய்பவர் இல்லை என வணங்குவர்.
1465. யோகியர் யோகம் கிரியை சரியை என்ற மூன்று நெறிகளை கொண்டு மேன்மை அடைவர். பயன் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை என்பனவாகும். ஆசையை விட்ட சரியை ஒன்று அவ்வாறு இருக்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் அன்பு கொண்டேன்.
1466. யோக நெறியில் சமய தீட்சை என்பது பல யோக நெறிகளை பற்றி நினைத்தல். யோக நெறியில் சிறந்த தீட்சையானது அட்டாங்க யோக நெறி நிற்றல். யோகத்தில் நிர்வாண தீட்சையானது பராசத்தியின் தரிசனம் பெறுவது. யோக அபிடேகமாவது ஒளிமிக்க சித்திகளை அடைதல்.
#####