Print this page
திங்கட்கிழமை, 11 May 2020 11:49

ஞானம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

ஞானம்!

1467. ஞானத்தைவிடச் சிறந்த அறநெறி இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமய நெறியும் நல்லது ஆகாது. ஞானத்திற்குப் புறம்பானவை வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் மிக்கு விளங்குபவரே மக்களீல் மேலானவர்.

1468. நாதமும் நாதத்தின் வடிவான மனமும் மனம் தரும் புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் இம்மூன்றும் சிந்திக்கின்ற செயலும் அதனால் உண்டாகும் நாதமும் நாதம் கடந்த ஞானியர் அடைந்த நெறியே ஞானம்.

1469. சிவன் சித்தத்தில் அமைந்துள்ள சங்கற்ப உலகமும் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானியர். இத்தகைய ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும் சிவத்தை அறிய உதவும்.

1470. முரணபாடு இல்லாத ஜானத்தை தெளிந்து உணர்ந்தார்க்குச் சார்ந்திருக்கும் காவலான இடம் அழியாத பிரம்ம பொருள் ஆகும். அசைவன அசையாதன என இறைவனாய்க் காணப்படும் உலகம் மேலான ஞானம் இருக்கும் ஒழுக்கம் ஆகியன தரும்.

1471. அறிவு அடக்கம் அன்பு என்ற மூன்றும் என்றும் நீங்கா நகரில் கோவில் கொள்ளும் பெருமான் தான் உருக்கொண்ட நிலையையும் நல்ல குணங்களையும் எண்ணித் திருவடியை நீங்காத நெறியை உடைய ஞானியர்க்கு சிந்தனையில் நீர் அருவியினது சலசலப்பைப் போல் சிரசில் அமையும்.

1472. ஞானம் முதிர்ந்து எழுகின்ற நிலையில் சிந்தனையில் அருவியாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எவ்விடத்தும் இளம்பிறை ஒளியைத் தரிசித்து உடலின் இழிதன்மையை உணர்வர் உடலைக் கடந்து ஒளிமிக்க சோதி இருக்கும்.

1473. ஞானியர்க்கு இயல்பில் பொருந்தியவை ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை ஞானத்தில் சரியை என்ற நான்கும். அனுபவத்தில் முதிர்ந்து பிரணவ சித்தியான மௌன ஞானிக்கு இவை ஏதும் தேவையிலை. மகிழ்வை அடைந்து சந்திரமண்டலம் ஒளியில் இருக்கும் சத்தி ஞானத்தை தந்துவிடும். அவர்களைப் போலால்லாது ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்பவருக்கு சரியையும் கிரியையும் உரியனவாகும்.

1474. ஞானிக்கு ஞானம் முதலிய நான்கு நிலைகள். ஞானத்தில் ஜானம் என்பது நான் என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் இல்லாமையாகும். ஞானத்தில் யோகமாவது நாதாந்த்தில் பேரொளியைக் காண்பதாகும். ஞானத்தில் கிரியை என்பது நல்ல வீடு பேற்றை விரும்புதலாகும்.

1475. ஞானத்தில் ஞானம் முதலிய நான்கையும் பெற்றவன் நல்வினையினால் அடையும் நற்பயனையும் பாவத்தால் வரும் தீய பயனையும் கடந்து நிற்பான். பெருமையுடைய நேயத்தின் ஞான் வரம்பைக் கடந்தவன் மலக்குற்றங்கள் அற்றவனும் சிவமுத்தனும் சித்தனும் ஆவான்.

1476. ஞானத்தில் சமய தீட்சை என்பது மெய்ப் பொருளை விரும்பும் ஞானி மெய்ப் பொருளைப் போல் தானும் ஒளி உருவினன் என உணர்த்துவதாகும்.

#####

 

Read 1565 times
Login to post comments