Print this page
செவ்வாய்க்கிழமை, 12 May 2020 11:40

சக மார்க்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!

#####

சக மார்க்கம்!

1488. ஞான நெறி என்பது தோழமை நெறியால் அடையலாம். அரச மார்க்கமான் இது வீடு பேற்றையும் சித்தியையும் அளிக்கும். மற்ற பிற்பட்ட நெறிகள் நீங்காத பிறப்பையும் இ/றப்பையும் அளித்து ஞானத்தை எண்ணி எண்ணி உறுதி அடைய வழியாகும்.

1489. சிரசில் பன்னிரண்டு அங்குலத்தில் பெருந்தும் மார்க்கத்தை அறியாதவர் துவாத சாந்தத்தில் இருக்கும் குருமண்டலமான ஒளி மண்டலத்தையும் அங்கே இருக்கும் சிவத்தையும் அறியாதவர். அவரின் வீட்டில் திருமகள் தங்காமல் போவாள். தன் உருவத்தையும் உறவினரையும் விட்டு இறந்து போவர்.

1490. துவாத சாந்தத்தில் பொருந்தியவர் யோக சமாதியை அடைவர். இந்த நிலையில் உல்கம் எல்லாம் நுட்பமாய் அங்குள்ளது. அவ்வொளியில் சிவமும் சத்தியும் உள்ளனர். இதைவிரும்பி மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.

1491. யோகம் போகம் என்ற இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும். யோகத்தால் சிவசாரூபம் அடைவர். அதனால் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் அடைந்தவர் ஆவர். அழியாத யோகியர்க்கு யோகம் போகம் பொருந்தும்.

1492. ஆதார சோதனையால் நாடி தூய்மை அடைந்து மேதை முதலான பதினாறு கலைகளில் இருக்கும். வானமும் ஒளியும் புலப்படும். அறிவினது ஆலயம் என்ற ஆன்மாவின் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் புத்தியும் தம் இயல்பான கீழ் இழுக்கும் இயல்பை விட்டு நிற்பதே சக மார்க்கம்.

1493. உயிரை கீழ் நோக்கி இழுக்கும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பின்பு மனம் எனும் கூர்மையான வாளால் வருத்தி துன்புறுத்தும். அப்போது பதினெட்டுக் கணங்களும் கருதும் ஒருவனும் வணங்க தக்கவனும் ஆன சிவன் சிந்தையில் வந்து பொருந்துவான்.

1494. வளமான பழத்தை போன்ற கனிவை உடைய செம்மை உடையவர்க்கும் ந்ல்ல கனியைப் போன்று இன்பம் தரும் உண்மைப் பொருள் இறைவன் ஆகும். உள்ளம் நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து இருப்பவர்க்கு கனியினின்று சாற்றை நீக்கி எடுப்பது போல் இவரை தத்துவங்களினின்று நீக்கி இறைவன் தானும் உடன் இருப்பவன் ஆவான்.

#####

Read 1610 times
Login to post comments