ஓம்நமசிவய!
செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி
#####
சாலோகம்!
1507. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை நெறிகளும் அமையும். சரியை நெறி பற்றி நிற்பர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனது அண்மையில் விளங்குவர். அத்தகைய உலகில் இறைவனின் அண்மையை அடைந்தவர் அவனது வடிவத்தை அடைவர். இறைவனைப் போன்ற ஒளிவடிவைப் பெற்று பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெற்று இருக்கும் இறைவன் உருவாகும்.
1508. சமய்த்தைப் பற்றி நிற்பவர் செய்யக்கூடிய முதல் செயல் தன் ஊள்ளத்தில் வழிப்டும் கடவுளை வைத்தல். சமயத்தில் விசேடம் என்பது அந்த வழிபட்டில் கடவுளுக்குரிய மந்திரத்தை நினைத்தல். சமய்த்தில் உள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதான நிர்வாண தீட்சை ஆகும். சமயத்திற்குரிய அபிடேகம் என்பது வணங்கும் கடவுளை எண்னியபடி சமாதி ஆவது.
#####
சாமீபம்!
1509. சாலோக முத்தியில் பாசத்தனமை கெடாமல் நின்று பிறவியைத் தரும் சாமீபத்தில் பாசம் கட்டுப்படுத்தாது அருளாக இருக்கும். சாரூபத்தில் பாசமானது வேலும் மேன்மையைத் தரும். சாயுச்சியத்தில் பாசமானது முழுவதும் குன்றிப் பதியை அடையச் செய்யும்.
#####
சாரூபம்!
1510. சாரூபம் என்பது யோகத்தில் எட்டாம் உறுப்பான சமாதியால் அடைவது. தங்கிய ஞான நெறி பற்றி நிற்பவர்க்கு கைகூடும். இந்த நெறி உறுப்புடன் கூடிய உடல் சித்தி கைகூடப் பெறுவர். உடம்பு குற்றம் இல்லாத யோகத்தால் திருத்தி அமைக்கப்படும்.
1511. மேருமலையைச் சார்ந்த போது உலகில் இயங்கும் பொருள் இயங்காத பொருள் அனைத்தும் மேருமலைப் போல் பொன் நிறம் அடையும். நாத தத்துவத்தில் இருக்கும் குரு மண்டலத்தை அடைந்தபோதே கயிலையின் தலைவன் இறைவனின் வடிவத்தைப் பெறுவர்.
#####
சாயுச்சியம்!
1512. முதல் நிலை சைவம் என்பது சிவனுடன் பொருந்தி நிற்றல். இரண்டாம் நிலை சிவ தத்துவத்தை உணர்ந்து அதில் இருக்கும் சிவபெருமானுடன் சேர்தல். மூன்றாம் நிலை சமாதியில் பொருந்தாமல் சிவம் தம்மிடம் ஒளிர்வதை உணர்ந்து கொள்ளுதல். இந்நிலையில் சிவத்துடன் பொருந்தி உலகை விட்டு சமாதியில் நிலைபெற்று சிவானந்த பேறு அடைதல். இதுவே சாயுச்சியம் பெற்றவர் நிலை.
1513. விழிப்புடன் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல் ஆகும். விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் அடைந்தவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையில்லாத ஆனந்தத்தில் நிலைத்திருப்பது சாயுச்சியம் ஆகும்.
#####