Print this page
வியாழக்கிழமை, 14 May 2020 16:29

நிராகாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

நிராகாரம்!

1550. இமயமலை போல் பாராட்டப்படத் தக்க தெய்வத் தன்மை பொருந்தியவர் இயல்பிற்கு ஏற்ப ஆறு சமயங்களைச் செய்தனர். அக்காலத்து சாத்திரங்களை ஓதிப் பொருந்த அறிந்தோம் என்பர். ஆதியான சிவன் பொறுமையுடன் அறிந்து அடங்கிய ஞானியரது உள்ளத்தில் கலந்து நின்றான்.

1551. அன்பர்களின் பொன்னொளி மண்டலம் என்ற அறிவு மண்டலத்தில் திகழும் சிவபெருமானை எண்ணித் தம்மிடம் வேறுபாடின்றி இருப்பர் இவ்வுலகத்தில் சிவபெருமானைப் போன்றவர் ஆவர். அவனை வேறு என்று எண்ணி நினையாமல் இருப்பவர் துன்பத்துள் மூழ்கி உய்ய நெறி அறியாது வருந்துவர்.

1552. உலகத்தில் வருந்தி அழுபவரும் நல்ல இயலபை இழந்து வருந்துவோரும் பெருமையுடைய சிவத்தை நினைத்து அருந்தவத்தை மேற்கொண்டால் அவரவர்குரிய துன்பங்களைப் போக்கி வருந்தாமல் செய்து தேவரின் தலைவனும் பிறப்பிலாதவனுமான சிவன் நல்ல தகுதியை அளிப்பான்,

1553. தொலைவில் இருக்கின்றான் இறைவன் என்று வணங்கும் பக்தர் அவன் துணையாய் இருந்து வேண்டியவற்றை அளீப்பதை அறியாதவர் ஆவர். புவியிலிருக்கும் இன்பப் பொருளை விரும்பியவர் அதனால் வரும் துன்பப் பயனை அடைந்து வருந்துவர். அறியாமை உடைய இந்த இருவரும் உலகப் பொருளுடன் பொருந்தி பிறவியில் விழுபவர்கள். சிவன் தம்மை விட்டு அகலாதவன் என்பதை அறிந்தவர் உலகத்துக்கு கைமாறு கருதாது மேகம்போல் பயன் அளிப்பர்.

1554. அறிவுடன் கூடி அறிந்து அனுபவிக்கும் தோணியான சிவம் வினைகளுக்குச் சேமிப்பு இடமான காரண உடம்பை அழிக்கும் தூணான பேரொளியின் இயல்பை அறிந்திருந்தும் கொடிய வினைக் கூட்டத்தை உடையவர் சிவத்தின் திருவடியை பொருந்த நினைக்க வில்லை.

1555. நிலை பேறுடைய சிவ பரம் பொருள் மனத்தில் பொருந்தியவன் என்றாலும் மக்கள் அறியாமல் இகழ்வார்கள். அவர்கள் உண்மையான் செல்வத்தை உணராதவர்கள். அவ்வாறு இகழாமல் உள்ளம் பொருந்தி வணங்கினால் உவமை இல்லா சிவத்தை அறிந்து சிவப்பேற்றை அடையலாம்.

1556. அன்பர்கள் பிரணவத்தில் சிவத்தைக் கண்டு தன் தணித்தன்மையை நீக்கி ஒன்றான தனமை போல் விளங்குகின்ற அனுபவம் கைவரப் பெறமாட்டார். உடல் அழியும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. பிறவாமையைப் பொருந்தார். மயக்கம் அளிக்கும் சமயத்தினின்று நீங்காதவர்களாய் அழிந்து போவர்.

#####

Read 1502 times
Login to post comments