Print this page
வெள்ளிக்கிழமை, 15 May 2020 16:52

துறவு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

துறவு!

1614. சிவன் பிறப்பு இறப்பு என்ற தன்மைகள் நீக்கி உலகத்து இன்பங்களை இயல்பாகத் துறக்கின்ற தவத்தை அருளிச் செய்த ஒளிவடிவானவனை மறவாதவராய் தினமும் நாத வழிபாடு செய்பவர்க்கு சிவவுலகம் அருள்வான்.

1615. வினையின்படி பிறந்தும் வினை நீக்கிய வழி இறந்தும் பலவகைப்பட்ட அறியாமையால் செய்வன் விலக்குவன மறந்து அறியாமை நீங்க அறியாமையில் மறைந்து அறிவில் சிறந்த சத்திபாதம் உண்டான காலத்துப் பற்றுகளைத் துறந்து உயிர்க்குச் சோதியாய் இருக்கும்.

1616. நியதியை உடையவன் அநாதியானவன் அதனால் தனியன் அவன் தங்குமிடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கும் இடம். அவன் என்பது சிவபேதம். அவன் துறவி என்பதை அரிந்து கொள்ளுங்கள். பற்றுகள் நீத்தவனையும் பிறவியை ஒழிக்கும் பித்தர் ஆவார் என்பதையும் தெரிந்து கொளக.

1617. அநாதியான இறைவன் உயிர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெறிஞ்சில் முள் போன்ற ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்திருக்கின்றான். அறவழியில் நில்லாமல் தவறுமாயின் நெஞ்சில் முள் குத்துவதைப் போல் துன்பத்தை அடைவர். ஆனால் அறநெறி தவறாது நடக்க வல்லார்க்கு வழியிலே உள்ள் நெஞ்சில்முள் குத்துவது போன்று துனபங்கள் ஏற்படாது.

1618. நான் அசைந்தாச்டிக் கொண்டிருக்கும் ஒளி மண்டலத்தில் இறைவனின் விந்து நாதமான திருவடிகளை என்றும் பிரியாமல் கூடும் தவம் செய்த கொள்கையுடையவன். ஆகவே அறத்தால் வரும் கேட்டையும் அறத்தால் செய்யும் கடமையையும் உணர்ந்திருப்பதால் ஐம்புல ஆசையால் விளையும் பயனுக்கு ஆட்பட்டவன் அல்ல.

1619. ஞானப் பயிற்சி மேற்கொண்டவன் மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய வானமண்டலம் இருக்க அதில் ஞான சாதனையால் பொருந்திய நீலோற்பல ஒளி கண்டு ஞானசாதனை செய்தவன் இது அருள் ச்த்தியின் ஒளி என்று உண்ர்ந்து மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு இருப்பான்.

1620. இயல்பாகவே பற்றும் வெறுப்பும் அற்றவன். காலத்தை கடந்தவருக்கு அவன் நண்பன். அவன் எல்லாவற்றையும் உடையவன் ஆதலால் ஆசையில்லாதவன். அஞ்ஞானமான இருளைவிட்டு ஓளி பெறுபவர்க்கு தன் நெற்றி விழியினால் அருள்பவன். பூமி தத்துவம் என்கின்ற பால் உணர்ச்சியை துறந்தவர்க்கே தன் திருவடியை அளித்தருள்வான்.

1621. பாம்பு ஒன்று அதற்கு படம் ஐந்து அது அனுபவிக்கிற போகம் நான்கு. அது புற்றுக்குள் பொருந்தி நிறைந்திருக்கின்றது. அதற்கு உரிய இரண்டு உடல்களிலும் படம் விரித்து ஆடுவதை விட்டு ஒரே படமாய் செய்து உடலை இட்மாய் கொண்டு கிடக்கும்.

1622. ஆதியை உடைய சிவன் உறவு மேற்கொண்டவர்க்கு முதல்வன் துறவு ஆகாதவரைப் பிறவியில் விடுபவன். இவன் என சுட்டி அறியும் எளிமை உடையவன் அல்லன். சிவந்து திருவருளே பக்குவத்துக்கு ஏற்ப பலப்பல உயிர்களிலும் நிறையும். அவன் செய்யும் நன்மைகள் வரும் வழி நம்மால் அறிய இயலாது.

1623. உடலைக் கடந்தபோது கண் முதலான் ஒன்பது வயில்களால் வரும் அறிவு விடுபடும். சந்திர மண்டல்த்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்த போது உடலான சட்டையின் அனுபவம் முடிந்தது. உலகம் இனிமையான நிலையினின்று மாறிக் கசந்தது. உடலைச் செலுத்திய ஆன்மா சிரசில் தலைவன் வாழும் மேல் முகமாய் இருக்கும் சகசிரதளத்தில் இருக்கும்.

#####

Read 1584 times
Login to post comments