gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:51

தவதூடணம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

தவதூடணம்!

1633. உயிர்க்கு உயிரான பொருளை உள்ளே கண்டபின்பு கற்று அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை உடலில் கண்டால் அன்பு செலுத்த வேண்டியதில்லை. தன்னை மறந்த சமாதி நிலை கிட்டிய பின் இறப்பதும் வேண்டியதில்லை. உள்ளத்தைப் புலன் வழிப் போகாது தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் உடையவர்க்கு மற்ற இடங்கள் சென்று தவம் செய்ய வேண்டியதில்லை.

1634. மெய்ப் பொருளை உணர்த்து, நூல்களின் கருத்துக்களை உணர்ந்து அடங்கினால் கற்க வேண்டிய தேவை இல்லை. மெய்ப்பொருளை அறிந்து சிவத்துடன் கூடினால் நாத சம்மீயமும் வேண்டியதில்லை. இப்படி நிற்பவர் உள்ளம் அசுத்தம் இல்லாமையால் தூய்மை செய்யும் செயல் வேண்டா. சித்தம் எண்ணுவதை விட்டபோதே சித்தமும் வேண்டியதில்லை.

1635. தவத்தின் பயனை அறிபவரே உண்மையான தவத்தைச் செய்பவர்கள் ஆவார்கள். இத்தன்மை வாய்ந்தவர்களே உண்மையை அறிந்து மாணவனுக்கு எடுத்துச் சொல்லும் உண்மையான குரு ஆவார்கள். விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சிறந்தவர்கள்.

1636. திருவருளுடன் கூடி நிற்கும் தவத்தைச் செய்து ஒலிக்கும் நாத வடிவான திருவடியை கண்டேன். நீண்டகாலம் அந்நிலையிலிருந்து தேடிச் சிவசத்தியை அடைந்தேன். பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி நிற்பதே தவம். மாறுபட்டு பொறிகள் வழி மயங்கிய் உயிர்கள் எத்தகைய தவம் உடையவர்.

1637. உள்ளத்தில் சங்கற்பத்தால் ஆன பெரிய கடலாய் உள்ள ஏழினையும் கடந்து தவத்தவர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பவர் பிறப்புக்கு வரமாட்டர். அத்தவம் உடையவர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தை தன் முகத்தின் முன் கண்டு சிவப்பேறு அடையக்கூடும்.

1638. உள்ளம் என்ற உறைக்குள் உள்ள ஞான் வாளை உருவி செருக்கு சினம் முதலியவற்றை அறுத்து உலகியலை விட்டுச் சிவத்துடன் வேறுபாடின்றிப் பொருந்தி ஞானேந்திரியங்கள் ஐந்தும் வெளிச் செல்வதை தடுத்தால் தவத்தில் காணும் சிவ ஒளி தன் ஒளியாகும்.

1639. சீவர்களின் அறிவில் பொருந்தி இருப்பவனை உணர்வது சிவபத்தியை ஏற்படுத்தும். அடியவர் நாள்தோறும் தொழுவதால் வீடுபேறும் கிட்டும். உலகியல் நோக்கை வெறுப்பவன் என்று சொல்லை உண்மையாக்குவதே தவம்.

1640. இலைகளை எடுத்து மலரைப் பறித்தும் இறைவனுக்கு ஆகும் என எண்ணி மாலை கட்டிக்கொண்டிருந்தேன். வான் கங்கையான ஒளியைக் காணவில்லை. மூலாதாரத்திலிருந்து சிரசுவரை செல்லும் சுழுமுனை நாடியைப் பார்த்து எனது உள்ளம் அடங்கியது. சிரசில் சந்திரக்கலை இருக்குமாறு செய்து தவத்தின் பொருளை உணர்ந்தேன்.

1641. இறைவன் படர்ந்த ஒளிக்கிரணத்தையுடைய அன்பர்க்கு துன்பம் வராத வண்ணம் காத்தருள்வான். துன்பம் வராதபடி செய்தவரின் தவத்தை ஆராய்ந்து உடலை மீண்டும் பெருமை சேர்ப்பது அவரது மன ஒருமைப்பாட்டால் ஆகும்.

1642. நூலைக் கற்று அறியாமல் பொறுமையுடன் தவம் செய்யாதவர் வயிற்ற்குக்கு உணவு தேடி வருந்தி அலைவது ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் குட்டியான கரடிக்கு முன் அடைந்து வருந்துவதைப் போன்றதாகும்.

1643. சிவயோகத்தால் சிவக்கனி பழுக்குமாறும் அதை உண்ணுமாறும் உயிர் பலமுறை உலவுகின்ற உடம்பில் உயிர்காற்றை சுழுமுனையில் நிறுத்த வல்லார்க்கு மூச்சு இயங்கும் தன்மை கெட்டு மேல் முகமாக இருக்கும் சகசிரதளத்தில் ஒன்றி நின்றுவிடும்.

1644. சித்தம் இடைவிடாமல் சிவத்தை நினைத்து சிவமாவர்க்குச் செய்ய வேண்இய தவம் ஒன்றும் இல்லை. சித்தம் சிவமாகியவர் உறவு உண்டானால் அவர்களின் சித்தம் சிவமாய் சித்தியும் முத்தியும் உண்டாகும். சித்தம் சிவமாவது முன் தவத்தின் பயனாகும்.

#####

Read 1592 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27044921
All
27044921
Your IP: 3.149.213.209
2024-04-20 02:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg