Print this page
ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:55

அவவேடம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

அவவேடம்!

1655. ஆடமபரத்துடன் சோறு உண்பதையே பயனாகப் பயனில்லாத கோலங்களைப் பூண்டு உலக உயிர்களை மயக்கும் அறிவற்றவர்களே! பொய்யான கோலங்களை கைவிட்டுச் சிவனை நினைத்து ஆடி பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்வுடன் பிதற்றி சிவபெருமானின் திருவடிகளைத் தேடிக் காணுங்கள்.

1656. சிவஞானமில்லாதார் தவத்தை மேற்கொண்டு இந்த நாட்டில் இழிவான செய்கைகளைச் செய்து பிச்சை ஏற்று உயிருடன் வாழ்ந்தாலும் அந்த நாடானது பெருமை குன்றும். இழிவுடைய அவரது கோலத்தை அகற்றுவது இன்பம் தரும்.

1657. இன்பம் துன்பம் என்ற இரண்டும் நாட்டு மக்கள் செய்த நல்வினை தீவினையால் அந்நாட்டிற்கு தகும் என சொல்லுவர். மன்னன் இதனை ஆரய்ந்து நாள்தோறும் நாட்டில் பொய்க்கோலம் கொண்டவரை வழிப்படுத்தினால் நாடு நலம் அடையும்.

1658. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் மேனமை அடையும் பொருட்டு கோலம் கொள்வர் வழிவழி அடிமை செய்யும் குலத்தவர் தெய்வநிலை எய்துவதன் பொருட்டு கோலம் கொள்வர். பழிக்கக்கூடிய செயலைச் செய்யும் குலத்தே தோன்றி பாழான சண்டாளர் கோலம் பூண்டால் கழிக்கக்கூடிய குலத்தவர் ஆவர். இத்தகையவர் நீக்கத்தக்கவர் ஆவர்.

1659. பொய்யான கோலத்தைப் பூண்டு தவம் செய்பவர் நரகத்திற்குப் போவர். பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகமாட்டார். பொய்யான தவமானது மெய்த்தவத்தைப் போன்று உலக இன்பங்களை அளிக்க வல்லது. ஆயினும் உண்மை ஞானத்தினால் மட்டுமே தவத்தின் பயன் கைகூடும்.

1660. வயிறு நிறைய உண்பது ஒன்றையே எண்ணிப் பொய்யாய் தவம் பூணுவர். உண்மையாய் தவ வேடம் பூண்டவர் உயிர் உடலை விட்டு நீங்காமல் இருக்கப் பிச்சை ஏற்பர். பொய்யான் கோலத்தை மெய்யான கோலம்போல் கொண்டாலும் கோலத்தில் உண்மை மேன்மையானவற்றால் அதுவே அவருய்ய பெருவதற்குரிய கோலமாகும்.

#####

Read 1750 times
Login to post comments