gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:12

சம்பிரதாயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

சம்பிரதாயம்!

1778. குருவானவர் மாணவரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் நீருடன் சுத்தம் செய்ய ஏற்றுக்கொண்டு படர்ந்த வினையால் வரும் பற்றை அறுமாறு விழியால் பார்த்து மாணவனின் தலையில் கையை வைத்து திருவடி ஞானத்தை விளக்கி விரையக் கட்டினையுடைய பிறவியைப் போக்கியருளினான்.

1779. உயிரும் உடலும் ஒளிப்பொருளான வியப்புப் பொருந்திய பரமும் பொருந்திய பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி முதலியவற்றை அறிந்து உய்யும்படி குருநாதன் ஆட்கொண்டனன்.

1780. மேற்குத் திக்கை ஒளிரச் செய்த குருநாதன் நாள்தோறும் என்னை இங்கு நினைப்பாயாக என்று உணர்த்திய அப்பொருள் உச்சிக்கு கீழேயும் உள்நாக்குக்கு மேலேயும் உள்ளது. இதுதான் மேலான பதமாகும். இதனை கையால் சொல்ல முடியாது.

1781. தான் விரும்பியபடியே எங்கும் அனுபவம் இல்லாது பிதற்றித் திரிந்து கொண்டிருந்த என்னை என்னிடம் உள்ள குற்றங்களை எல்லாம் அகற்றி பின் குருவான தன்னையும் மாணவனான என்னையும் சமமாகச் செய்தான். நாணயமாற்று வணிகம் முடிந்தது.

1782. இவ்வுலகத்தில் வாழும் பல உயிர்கட்கு எல்லாம் தலைவனான சிவன் உடனாய் இருக்கும் இயலபை இவ்வுலகத்தவர் சற்றும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை அறிந்து கொண்டேன்.

1783. வினைக்கு ஈடாய் உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற நினைவு கொண்டு தன் ஞான சத்தியால் விந்து நாதங்களான திருவடியை விரும்பிப் பதிப்பித்தும் பெருமை அற்ற உடலில் பற்றை ஒழித்து சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் விளங்கும்.

1784. எனக்கு பக்குவம் வந்தபோது அடிமையாய் ஏற்றுக்கொள்ள எண்ணியவன் எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக் கூட்டம் ஆகியவற்றை அவனுடையதாக்க் கொண்டான். வல்லமை யாவற்றையும் த்ந்தவனே எடுத்துக் கொள்வதால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் எனச் சொல்வதற்கில்லை.

1785. குறியாக கொள்கின்ற உடலும் உடலை உடைய உயிரும் குடி நெறிப்பட இயங்கும் பிராணன் நிலைபெற்ற சிவன் இயமனால் நீக்கப்படும் உடம்பை எடுத்துக் கொண்டு இயல்பை உடம்புடன் கூடியிருக்கும்போதே அறிந்து பிரிக்க அறிந்து கொள்ளாதவர் பேயைப் போல அலைவர்,.

1786. சிவன் என்ற ஒளியை உணரும் இய்ல்பு உடையவர்க்கு எல்லா நுண்ணிய உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வு உடையவர் இந்த உலகத்தை அனுபவப் பொருளாய்க் காணாது சாட்சியாகக் காண்பதால் எத்தகைய துன்பமும் அவர்க்கு இல்லை. இவ்வாறு உணர்வு உடையவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவர் ஆவார்.

1787. உடலது பரப்பில் அலந்து துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிக விரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடியிருந்த அன்பர்க்கு தூய்மையான அருள் சத்தியை பதிப்பித்த சிவபெருமானை என்ன் சொல்லி வாழ்த்த முடியும்.

1788. நான் என்றும் நீ என்றும் நீ வந்து அடைதல் என்?றும் வேறாகப் பிரிந்து உணரக்கூடிய நிலை இல்லை. உடலும் உடலில் உள்ள உயிரும் போல் நாம் உடனிருக்கு வானத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணில் வான் மண்டலத்துள் வந்து பொருந்தி நின்று மனிதர் அனுபவிக்கின்ற இனபங்களைத் தேன்பொல் சுவைத்து அழுந்தியிருப்பர்.

1789. சிவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழிநிற்பவர் அவ் இறைவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றாக ஓடும். இவ்வாறு சரியை வழியில் நிற்பவனும் ஒன்றாய் உணரின் காணப்படும் பொருளான சிவனும் காண்பவ்னும் ஒன்றாகச் சீவன் சிவமாய் விடும்.

1790. தான் இந்தச் சிவனே என்று எண்ணுபவனான சீவன் உடலால் இதனைத் தான் எனவே எப்போதும் நினைக்கும் உயிர்போல் உளன். அவன் வானில் பரவும் பெரிய மேகத்தைப் போல் அருள் காட்டுபவ்னாக இருக்கின்றான். அதனால் நான் வான் தலைவனாக ஆனேன்.

1791. பெருந்தனமை உடைய தான் என்ற சிவனும் யான் என்ற சீவனும் வேறாக ஒரு சமயத்தில் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிகின்றான். உண்மையாகவே உயிர்களைத் திருத்தம் எய்தச் செய்யும் சிவன் தம்மை உடல் உயிர்போல் பிரிவில்லாமல் பொருந்தியிருப்பான்.

#####

Read 1512 times Last modified on சனிக்கிழமை, 20 June 2020 15:14
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931620
All
26931620
Your IP: 34.204.177.148
2024-03-28 23:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg