gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:15

அருள் ஒளி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

அருள் ஒளி!

1814. திருவருளே ஏற்ற துணையாகும் என்று அதில் அழுந்தித் தன் செயல் நீக்கப் பெறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அத்தகையவர் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்ற ஐந்து மலங்களையும் நீங்குவதில்லை. அருளின் பெருமையை அறியாதவர் அதில் அழுந்தார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவர்.

1815. குருநாதனான சிவன் மீண்டும் பிறவிக்கு வராத நெறியை அருளியவன். தெவிட்டாத இன்ப அமுதத்தை அருள் செய்தான். ஆயிரம் திருப்பெயரையுடைய பொருமானின் பயர்களில் ஒன்றான சிவ என்பதால் தெவிட்டாத இன்பத் திருவருட் கடலில் முழுகி ஆடுக என்று அருள் செய்தான்..

1816. உண்டாகின்ற ஆனந்தத்தால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும் சிவனின் பேரியல்பைத் தேடி நான் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய அப்போதே வடிவம் அற்ற ஒளியை அளித்துத் தன் அருளால் எனக்குள் மேல் கீழ் உள் என்ற பாகுபாடு இல்லாது விளங்கினான்.

1817 .குருநாதன் ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும் அப்பிறப்பினால் உண்டான மாயா கரியங்களும் இடையில் வந்து பற்றிய பொய்க்கூட்டம் என்று தெளிந்து நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானமளித்தான். அதலால் இதுகாறும் கற்றவற்றை விட்டு விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழியிலே சென்றேன்.

1818. ஞானம் என்னும் விளக்கை ஏற்றி எல்லை அற்ற பரம் பொருளை அறிந்து கொள்ளுங்கள். அப்பரம் பொருளின் முன்னம் மல மயா கன்மங்களாகிய உடலின் துன்பங்கள் யாவும் அகலும். மிக்க ஒளியை வெளிப்படுத்தும் ஒளி உடையவர் சிவ ஒளியும் தம் ஒளியும் கூடிக் கலந்து நிற்கத் திகழ்வர்.

1819. ஒளியும் இருளும் எக்காலத்தும் கெட ஒளியில் கலந்திருப்பவர்க்கு அருள் ஒளி நீங்காது. புறக்கண் எதையும் இருளில் அறியாமல் ஒளியில் அறிவது உலகியல் அது போன்று புறக் கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும்.. அண்டகோச அறிவில் இருள் நீங்கி உயிர் ஒளியைப் பெற்றால் சிவமாகும்.

1820. ஆணவத்தால் வெளியே திரிந்திரிந்த எனக்கு உன் பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்தாய். என் அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் நீங்கப் பெற்றாவனாகச் செய்தாய். என் அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுவதற்குரிய அரிய அமுதத்தை அளித்தாய். நின் இத்திறம்தான் என்னே என்று மயங்கினேன்.

1821. அருள் எனப்படும் பரவெளி ஒன்றும் பெய்ப்பொருள் எனப்படும் புகும் இடம் ஒன்றும் வேறு வேறு என்ற மயக்கம் நீங்க என் மனத்தகத்தே புகுந்த பேரொளியைச் சிவம் என்று தெளிவீராக பின்னர் சிவசத்தி உண்டாகும்..

1822. இவ்வுலகில் சிவமானது பிறந்து இறாந்த கதை உண்டு என்றால் கூறுங்கள். செத்துப் பிற்க்கும் மற்றத் தெய்வகளை மெய்ப்பொருள் என் எண்ணுவதைக் கை விட்டு விடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை கீழே வீழ்த்தி அரிய உயிரைத் தெளிவடையச் செய்வோம். இந்த உண்மையை பிறர்க்கும் சொல்லுங்கள்.

#####

Read 1614 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26937598
All
26937598
Your IP: 54.227.104.229
2024-03-29 07:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg