Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:10

பதினோராம் தானமும் அவத்தை! கலவு செலவு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

பதினோராம் தானமும் அவத்தை எனக் கானல்!

2299. ஐந்தாம் கலையான் அர்த்த சந்திரனுக்குரிய இடம் புருவ நடு.. விழிப்பு அடைந்தால் அமுத மயமான சந்திரன் ஒளிபெருகும் தலையில் ஆறாம் கலையான நிரோதினி கலையை உணர்ந்தபோது ஆனந்தம் உண்டாகும். விந்து வெற்றி பெறுவதே பிரணவம் ஆகும். பன்னிரண்டாம் கலையாகிய உன்மனையை விளங்கச் செய்யாமல் ஆன்மாவை உடல் பொறிகளின் வழிச் செலுத்தும் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள குண்டலினி சத்தியேகேட்டு அருள் செய்வாயாக.

2300. புருடனுடன் அருவமான சிவதத்துவம் ஐந்துமாக அறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதம் ஆகும். உறக்க நிலையில் புரியட்டக உடல் நுண்னுடல் விரிந்து விளங்கும்.. கனவு நனவு நிலைகளில் அரிய வித்த்யா தத்துவம் எழும். அந்தக் கரணம் நான்கும் பொருந்திய நிலையில் அமையும்.

2391. பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும். இவற்றைச் செய்ல் படமல் அழித்திட்டால் சிவம் விளங்கும். அந்தக் கரணங்களின் வழியாகச் சென்று அலையாது நிற்பதே முறையாகும். என நீ உணர்வாய். பின்பு சிவத்தின் வழி நிற்பதே உறுதி தரும் என எண்ணுதல் நன்மை தருவதாகும்..

#####

கலவு செலவு!

2302. கேவலாவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களுடன் கலந்தால் அது சகலாவத்தையைப் பொருந்தும். கருவி கரணங்களை விட்ட போது அச்சகலம் பிரிதலைப் பொருந்தும். இந்த இரண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட வடிவத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதலில்லாத தீமை நீங்கும் சாக்கிராதீதத்தில் ஆன்மா பொருந்தியிருத்தலே தூய நிலையாகும்.

2303. மூன்று குற்றங்களில் ஒன்றான சினத்தை முடிகின்றவரையில் அடக்கிக் கொண்டிருங்கள். உங்கள் உள்ளத்தை இயன்றவரை இறைவன் நினைவில் நிறுத்துங்கள் இரவும் பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தின் கல்போல் உறுதியான பசமான இருள் அகலும். பரமாகாய மண்டல ஒளியில் இருப்பீர்கள்.

#####

Read 1504 times
Login to post comments