Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:24

முப்பரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

முப்பரம்!

2445. உடலில் இயல்பாகவே சுற்றி எழுகின்ற அக்கினி மண்டலம், கதிரவ மண்டலம், சந்திர மண்டலம் என்பனவற்றுள் விளங்கும் சிவனை இளங்கொடி போன்ற குண்டலினி சத்தி தாங்கி நின்று உயிர்கட்டு இன்பத்தை விளைவித்து கீழ்முகம் கொண்டு அக்கினி மண்டலத்துள் பக்குவம் அடையச் செய்து நன்மை அருளூகின்றான்.

2446. குண்டலினி சத்தி தலையைக் கடந்தபோது வான் மண்டலம் முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் மேம்பட்ட பொருளாக விளங்கும், அவளுடன் பொருந்திய சிவன் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் முழுமையாய் கலந்து நின்றான். கன்று கதறியபோது ஓடி வரும் தாயைப் போன்று சீவன் நினைத்த போது அருள் பொழிவன் இறைவன். அவன் அருளியபின்பு அந்தச் சீவன் குன்றின் மீது இட்ட விளக்கைப் போன்ற ஒளி பெறும்.

2447. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் பரம் சொல்லாமல் சொன்ன உபதேசத்தைச் சொல்லப் போனால் சிவபரம் பொருள் வேறாய் வெளிப்பட்டுக் குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாது காத்துக் கொள்ள வேண்டும்.

2448. தத்துவங்களின் பற்று நீங்கப் பொருளைப் பற்றிய விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன்மாக்கள் சதாசிவம் ஆவார். அப்படிப் பற்று நீங்க நாதத்தைத் தொழுவதால் நாத வடிவான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சிவபேதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கிப் பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிக்குப் பரமாகக் கூடும்.

2449. மேலான சதாசிவ பதவி அடைந்தவர் பாசம் பற்றாத மிக மோசமான நிலையை அடைந்தவர் ஆவார். அவர் சிவத்தைச் சார மிக மேன்மையான சிவனந்தம் விளங்கும். இவ்வாறு ஆன்மாக்களை மிக மேன்மையாய்ச் செய்வது அறிவின் வடிவான சிவமாகும்.

2450. நின்மலச் சாக்கிரத்தில் கலை வித்தை அராகம் புருடன் மாயை என்று ஐந்து தத்துவங்களும் நீங்கி கருவி அறிவையும் விட்டு ஆன்மா தனித்து நின்றபோது நினைவையும் விட்டு நீங்கிய துரியாதீதத்தில் நேயப் பொருளான சிவத்தை சார்ந்து அறிவு வடிவான உயிர் தற்பர நிலையை அடையும்.

2451. தன்னைத் தூய்மையாகக் காணாலும் என்னிடம் விரிவாகக் காணலும் பின்பு கருவி கரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலை மாறிச் சிவனும் சீவனும் கலந்து தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாக உடைய பிரணவ வடிவான சிவத்தை நாடுக.

#####

Read 1539 times
Login to post comments