gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:57

மும்முத்தி! முச்சொரூபம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

மும்முத்தி!

2474. சீவன் தன் முத்தி நிலையைத் துரியா தீதத்தில் பெறும். ஆன்மா தன் செயலற்று அருள் வழியே நிற்கும் நிலையே பரமுத்தி எனப்படும். சிவமுத்தி என்பது சிவானந்தம் ஆகும். மூன்று இடங்களிலும் சீவமுத்தி பரமுத்தி சிவமுத்தி என்று மூன்று வகைப்படுவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி எண்ணியிருப்பின் நாதாந்தம் அமையும்.

2475. பிறவிப் பயனை அறியாதவரின் உயிர் பிறவியில் வந்து விடும். பிறவிப் பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர் இறைவன் திருவருளை நாடிப் ப்யன் பெறும். வெளியேயுள்ள உலகில் உள்ளத்தே உள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கு நன்மை தருவது என்பதை அறிந்து உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும்.

2476. சிவத்தை நினைத்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று குணங்களையும் அழித்து தாமத இராசத சாத்துவீகம் ஆன முக்குணங்களையும் தொலைத்துத் தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற அறநெறி நின்று சோகம் பாவனை செய்பவர்க்கு மலம் இல்லாச் சிவன் தானே வெளிப்பட்டு அருளுவான்.

2477. தளையைப் போக்கும் பரசிவ்னே, எண்பெருஞ் சித்திகளும் வீடு பேறும் மேலான சிவமுமாகும். நின்மல் துரியாதீதமும் மூன்று துன்பங்களைத் தொலைக்கும் சிவானந்தம் மேலான சமாதியாகும்.

#####

முச்சொரூபம்!

2478. ஆணவ மலத்தில் கட்டுண்ட உயிர்கள் பக்குவமாதற் பொருட்டு இறைவன் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்பனவற்றைக் கூட்டி ஆணவம் வலிமைகெட இருவினை ஒப்ப வந்த நிலையில் சிவோகம் பாவனை மேற்கொண்டு செய்து மேலும் ஒரு நிலையாக்கிச் சீவ பர சிவ நிலைகளை அடைந்து நீங்கி அவ்விடத்து இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அந்த உயிர்களை நிலைபெறச் செய்வான்.

2479. சகலர், பிரளயக்லர், விஞ்ஞானகலர் என்னும் மூவர்கள் வாழ்கின்ற இடம் பிரகிருதி மாயை, தூமாயை, துவாமயை ஆகும். இந்த மூன்று மாயைகளிலும் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் பொருந்தி நிற்கும் ஆத்ம பேரொளியைக் கண்டபோதே எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும்.

2480. உலகம் தோன்றிய வண்னமே ஒடுங்கிப் பல ஊழிகள் போயின. அப்போது ஊழி முடிவில் சீவன் பரன் சிவன் என்ற ஒன்றுள் ஒன்றாய் ஆராய்ந்து உணரும் தன்மையில் சிவன் உடனாயிருந்து உபசரிக்கும் அள்வையும் பெருமையையும் யாரோ உணர்ந்து தெரிய வல்லாவர்.

2481. உயிர் இனங்களைப் பெரிதாய் முதலாக எண்ணப்படும் வேறுபாடுகளாய் விகாரப்படுத்தித் தான் அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் ஒளிவடிவாய் வெளிப்பட்டு அருள் செய்யும் நாத சத்தியின் தலைவனான இறைவன் உயிர்களின் தொகுதி உருவமாயும் உடன் இருப்பவனாகவும் அங்ஙனம் இருந்தாலும் அவற்றால் அறியப்படாதவனாயும் விளங்குகின்றான்.

2482. மாணிக்க மணியின் முன் வெண்பளிங்கு அதன் வண்ணம் தன்மை என்பனவற்றைப் பெற்று மாணிக்கம் என்று கூறுமாறு நிற்கும். அது போல் தணிந்த இயல்புடைய ஆன்மா சீவ சொரூபம் பர சொரூபம் சிவசொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது அவையேயாய் ஆகும்படி செய்த பெருமை உடைய சிவனது திருவடிகளைப் பற்றி நிற்கும்.

2483. பளிங்கைப் போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவ ஒளியின் பிரகாசம் தோன்ற தன்மையைச் செய்யும் கண்மணியில் நாடி ஒளியுடைய தத்துவமசி என்னும் முப்பதத்தால் போதல்பாழ் சீவப்பாழ் சிவப்பாழில் நின்று சொல்லால் அடைய முடியாத பிரணவத்தால் ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமை ஆன இருள் நீங்கிப் பிறவி அறும்.

2484. மாறுபட்ட தன்மையுடைய ஆயிரம் இதழ்த் தாமரையுள் விளங்கும் பேரொளியைச் செல்லும் மூலாதாரத்தினின்றும் தோன்றும் நாதமானது அருளால் கிட்டுமானால் அங்கே பொருந்தும் அமுதேசுவரி வெளித்தோன்ற முன்பு அடைந்திருந்த மேல் வாசலைத் திறந்திருப்பாயாக.

#####

Read 1609 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931705
All
26931705
Your IP: 34.204.196.206
2024-03-28 23:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg