Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:05

காரிய காரண உபாதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

காரிய காரண உபாதி!

2501. துன்பத்தைத் தருவதற்கு இடமான மாயா காரிய வித்தியா தத்துவம் ஏழும் பொருந்தும் பர உபாதியான சுத்தவித்தை ஈசுவரன் சதாசிவன் விந்து நாதம் சத்தி சிவன் என்ற ஏழும் காரிய காரண நிலையினின்று நீங்கத் திருவைந்தெழுத்து அமையும். அங்ஙனம் நீங்க உயிரானது சிவமாகும்.

2502. இறை சிந்தனையால் ஆன்மாவைப் பற்றியுள்ள காரிய உபாதியான முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க தத்துவங்களுக்கு வேறான நின்மல நனவில் பொருந்தும் கனவிலும் நனவோடு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய நிலையில்; உறக்கத்தை அடையாமல் அரிய இடமான துரியத்தே தங்கியிருக்கும் உயிரே தொம்பதம் ஆகும்.

2503. முப்பதமான் ஓம் என்னும் பிரணவத்தில் அகரம் உயிர் உகரம் அகந்தை இல்லாத பரம் மகரம் சிவமாய் விளங்கும். இனிச் சிவய என்பதில் உள்ள சிகாரம் சிவமாகும். வகரம் பரம் ஆகும். யகரத்தை உயிர் எனக் கூறலும் ஆகும்.

2504. உயிர்க்கு உயிராய் நீக்கம் இல்லாமல் நிறைந்து அழிவுற்றுச் சோர்வைத் தரும் காரண உபாதிகள் உயிர்களின் பக்குவ நிலையிலே உடனாய் நிற்கும். இறைவன் கருணையால் அன்றி நடுக்கத்தைச் செய்யும் ஆன்மாக்களின் ஆணவத்தை நீக்குவது இயலாது.

2505. காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தினால் பசுத் தன்மை கொண்ட உயிர் மய்ங்கி நிற்கும். காரண உபாதியாகி ஏழில் உயிர் ஒளியை அறிவதில் மேலான சிவம் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனையாகும். அசிபத பொருளை உணர்ந்து அனுபவிக்கும் போது அது நீங்கிய பாழில் மேலான பரன் உள்ளது.

#####

Read 1782 times
Login to post comments