Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:09

புறங்கூறாமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

புறங்கூறாமை!

2512. மதியில் உள்ள முயல் கறையை எய்ய மணி கட்டப்பட்ட வாளை எடுத்துச் செல்பவரைப்போல் திருநீலகண்டனை காண மாட்டாதவர் உபாசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவர். இவர் எல்லாம் வீண் ஆரவாரம் செய்பவரே அல்லாமல் உள்ளத்தில் அரியாதவரே ஆவார்.

2513. கரிய நிறமுடைய காலையுடைய பருந்து வான் வீதியில் செல்லக் கடுமையான தாள்கள் நிறைந்த குளத்தில் கரிய நிறம் உடைய பாம்பு அடங்கியிருத்தல் போல் மனமே நின் பெருமையை நினைக்காது அடங்கி இருப்பாயாக. மற்றும் நீர் அருந்த முடியாத அலை கடலில் ஆறு போய் ஒடுங்குவது போலவும் மனமே அடங்குவாயாக.

2514. ` பகைவர் இற்ந்து போகப் போர் முனையில் நிலைபெற்று போர் செய்வது அற்ப அறிவுடையவர் செய்யும் ஆண்மைத்திறம் ஆகும் உபாசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கை கூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவர் ஆவார்.

2515. சிவத்தையன்றி மற்றத் தேவரிடம் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவரே ஒப்பில்லாத தனிப் பெருங்கடவுள் என்று எண்ணி வழிபடில் பதினெண் கணத்தவரும் உம் அழகிய அடியைக்காண வணங்கி எழுவர். அங்ஙனம் இறைவனை நாடி இன்பம் அடையலாம்.

2516. என்னைவிட எனக்கு இனிமை தரும் இறைவன் பொன்னைவிட மிக்க ஒளியுடைய துயவனை விளங்கும் எல்லாவுயிர்க்கும் உயிராய் உள்ள விகிர்தனை பொருந்தும் வகையில் மனத்தைத் திருவடியில் பதித்து நினைப்பீராக.

2517. நிற்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் படுத்துள்ள போதும் மலம் அற்ற சிவனைப் பொருந்தும் வகைகளை வாயால் கூறுவராகிலும் ஐம்புல ஆசைகளைக் கொடுத்து அவற்றை ஒவ்வொன்றாய் அறியும் குணத்தையும் போக்கி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் சிவத்துடன் உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையை அறிவீராக.

2518. உயிர்களின் உணர்வுக்கு உணர்வாய் எல்லா உலகமாய் ஏழ் உலகத்தவரும் எண்ணத் தகுந்த அறிவாய் விளங்கும் என் பெருமானாய்த் தகுதியுடையவரை அறிபவனாய் உள்ள இறைவனைத் தியானத்தில் பொருந்தியிருக்கும் ஞானியரை விண்ணுலகத்தவர் உய்வு பெறுவதற்காக விரும்புகின்றனர்.

2519. விண்ணவராலும் அறியப்படாத பெருமானை காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்தி கண்டு எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையைச் செய்து வந்தால் மேலான பரனாம் தன்மையைப் பெறலாம்.

2520. சிவபெருமான் தன்னை ஒப்பவர் இல்லாமல் ஏழு உலகங்களிலும் பரந்து நிறைந்துள்ளவன் அப்பொருமானின் திருவடியை அடைக்கலமாய் அடைந்த பின்பு பேரருளை அளித்த பெருமைமிக்க வள்ளலும் ஆவான். மாறுபாடு இல்லாத மனத்தை உடையவரின் அறிவுக்குள் விளங்குபவன் வாடாத சகசிரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான்.

2521. எம் தந்தையான சிவபெருமானின் திருவடியைப் போற்றி என்று வணங்கினேன். அவ்வழிபாட்டுக்கு வைத்தது எந்நாளும் வீசும் ஒளியே ஆகும். அது பிராணனால் அமையும் விளக்காகும். அதனால் உடலுக்கு இன்ப நிலை அருளும் நாதம் ஒலித்தது. அப்போது தேவன் விளங்கும் திருச்சபையைப் பார்த்தேன்.

2522. சகசிர தளத்தில் இறைவன் இருப்பதைக் கண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பவர் இலர். எலும்புக் கூண்டைத் தாங்கி நிற்கும் பிரமதண்டின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் கண்ணை மூடிக் கண்டேன். அப்போதும் உலகப் பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன்.

2523. சிவபெருமானைப் புகழ்வதால் அமையும் ஞானமும் சிவானந்த தேனும் இருக்கும் சகசிர தளத்தை அறிந்து உடலைக் கடந்து நினைவைப் பதித்தவர்க்கு வனத்தை உடலாக்கும் வீரனும் அங்கு விளங்குவான்.

2524. மாண்புமிக்க மதி மண்டலத்தில் நினைவு கொண்டு நின்ற பெருந்தவத்தினரின் அறிவுக்கும் அறிவு தருபவனாக விளங்கும் சிவன் பேரின்பத்தைத் தருபவனாய் உள்ளான். அத்தகைய சிவ அறிவில் தாம் அறிவு ஒன்றுபடுவதில் உபசாந்தம் அமைந்து ஆகின்ற மலம் நீங்கியவராய்த் திருவடியின் கீழ் அமைதி பெற்றவர்.

2525. பத மூர்த்திகளான சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் மூன்றையும் குற்றம் உடையவை என்று நீக்கி இன்பத்தை அளிக்க வல்ல மாயா காரியமான இருளைவிட்டு ஆணவம் அற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று என்பனவற்றை அறவே நீக்கி அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவ சித்தர் ஆவார்.

2526. சித்தர் அகண்ட பரந்த சிவத்தைக் கண்டவர். சிவ சிந்தனையில் நின்ற தூமாயை துவா மாயையில் தோய்ந்தாலும் தாமரை இலை நீர்மேல் பற்று இல்லாது விளங்குவர். இந்தச் சீவன்முத்தர் முன் கூறிய சாயுச்சிய நிலையை அடையும் தன்னம உடையவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை வசப்படுத்தியவர். இவர்கள் சதாசிவத் தன்மை வாய்ந்தவர் ஆவார்.

#####

Read 1555 times Last modified on செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:48
Login to post comments