gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:14

சுத்தா சுத்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

சுத்தா சுத்தம்!

2546. புருவ நடுவில் இருந்து பன்னிரண்டு விரற்கிடை உயரத்தில் உள்ள சகசிரதளத்தில் உயிரின் காரண சரீர விருப்பினனான இறைவன் உள்ளான் என்பதை யரும் அறியவில்லை. சிவத்தைப் பற்றிப் பேசி இருப்பது வேதம் எனினும் அவ்வியக்த வடிவத்தைப் பற்ரி அறுதியிட்டுச் சொல்ல முடியாததாய்ச் சுருக்கி கொண்டுள்ளது அதன் இயல்பாகும்.

2547. உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் விளங்குகின்றது. இவ்வாறு செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் அகன்று அன்பால் செய்பவை உயிர்களுக்குரிய கன்மத்தை அழிப்பதாகும்.

2548. மயையான திரை சீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈசுவரன் அம்மாயையான திரை அகன்றபோது அப்பொருளான ஈசுவரன் வெளிப்படும். மாயை நீங்குமாறு அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடம்பும் இல்லை மனமும் இல்லை.

2549. தியானத்தினால் புருவ நடுவை அடைந்து கபால வழியைத் திறந்து அதற்குள் புகுந்து கோழை வந்து அடைக்கும் இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பில் கீழே போகாமல் அடைத்து அங்கு உண்டாகும் அக்கினிக் கலையை ஒளிப்படுத்தும் முறையில் உள்ளம் தாழ்வான மாயை வழிச் செல்லாமல் நிறுத்துவதே தன் சாதனையால் உண்டாகும் பலமாகும்.

2550. உடம்பில் இருந்து கொண்டு நுண்ணிய உடலுடன் உறவு வைத்திருப்பவன் உடலில் அக்கினி கலை விளங்கும். சிவத்தை நாட்டில் போய்ப் புறத்தே வழிபாடு செய்யும் அவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவரே ஆவார்.

2551. அறிவற்றவர் மற்றவரைத் தீண்டுவதால் தீட்டு ஏற்படுகின்றது என்பர். தீட்டு எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை. தீட்டு எங்கு உள்ளது என்பதை அறிந்தபின்பு மனித உடலே தீட்டாக உள்ளது என்பதை அறிவர்.

2552 தத்துவ ஞானத்தால் தம்மை உணர்ந்தவர்க்குத் தூய்மையின்மை என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் அழிக்கும் அரனை வணங்குபவர்க்குத் தூய்மை இன்மை இல்லை. மூலாதாரத்தில் உள்ள கனலைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினி காரியம் செய்பவர்க்கும் தூய்மை இன்மை இல்லை. மேலான் மறையை உணர்ந்த ஞானிக்குத் தூய்மை இன்மை என்பதே இல்லை.

2553. சிவத்தை வழிபட்டு வணங்குபவர்க்கு உச்சிக்குழிக்குமேல் இருக்கும் சகசிரதளம் சிறப்பாய் அமைந்து ஒளிபெருகி நிற்பதில் உள்ளத் தூய்மை தொடங்கும். குழுயில் விழுந்து விந்து நீக்கம் செய்பவர் ஆதார நிராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள கீழ் நோக்கிய முகத்தை மேல் நோக்கிய முகமாக ஆக்கியவர்க்கு அன்றிச் சிவம் தோன்றாதாகும்.

2554. தூய பிடரியின் கண் உள்ள தூய அக்கினி தூய ஒளியுடன் விளங்கும். இத்தகைய இடத்தில் விளங்கும் அக்கினிக்கு ஆதாரம் எங்கே இருக்கின்றது என்பதை அறிபவர் இலர். இம்மணியில் விளங்கும் அக்கினியின் ஆதாரத்தை அறிபவர்க்குத் தூய்மையான பிடரிக் கண்ணில் விளங்கும் அக்கினி தூய்மையைச் செய்யும்.

2555. சொல்லப்பட்ட தூயமணியில் விளங்கும் சிவன் வைத்த தூய நெறி கரும் நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அத்தகைய மணியைச் செழிப்படையச் செய்ய இறைவன் திருநாமமான ஒளி தேவை. அம்மணி கருவிகளை ஓயச் செய்து எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்கும் தூய மணி மேல் எழுத்தின் பீடமகும்..

2556. தலைவனான சிவபெருமான் விரும்பிப் பெறுகின்ற சிறந்த பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் இருப்பவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர் சொர்க்கம் நரகம் புவி என்று சுழன்று வருகின்ற பிறவித் தளையில் மயங்கிய உள்ளம் உடையவராய்த் தூய்மையின்மை உடையவர் ஆவார்.

2557. மயக்கத்தில் உள்ள உயிர்கள் வினையான அசத்தான மாயை வலிவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சுழற்சியை அறியா. ஞானத்தை உணர்ந்து அதன் வழி நிற்பதில் கொடிய வினை நீங்குவதனையும் தெளிந்து அறியா. வினைகள் உயிர்களைப் பற்றாது நிற்பதில் முத்தி நிலை உள்ளது என்று வேதம் சொல்லும் உண்மையை அறியா. தீவினையில் பதிக்கப்பட்ட உயிர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியா.

#####

Read 1546 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26935707
All
26935707
Your IP: 3.235.227.36
2024-03-29 06:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg