Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:21

வாய்மை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

வாய்மை!

2595. அருள் உபதேசங்களால் மலம் நீங்கிய இயல்பைக் கூறின் அது தீயிலிட்டுக் குற்றத்தைப் போக்கிய பொன்னைப் போன்றது. மலம் நீங்குமாறு இறைவனை மாறுபாடின்றி உள்ளத்தில் வைத்துத் தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராகத் திகழும்.

2596. யாவற்றையும் அறியும் சிவமான பேர் அறிவுப் பொருளை விட்டுப் பிற உலகியல் பொருள் எல்லாவற்றையும் அறிவதால் பயன் ஒன்றும் இல்லை. அங்ஙனம் எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உலகில் உணரில் எல்லாவற்றையும் அறியும் சிவமாக சீவன் விளங்குவான்.

2597. தலையில் பொருந்தியுள்ள மேருவின் மீது நின்று இடைவிடாது தியானம் செய்து அருள் சுரக்கும் பார்வதியம்மையை ஒரு பாகத்துக் கொண்ட இறைவனை யானும் ஊன் பொருந்திய உடல் இயல்பைக் கடந்து சந்திர கலையில் மறைத்து விளங்கும் பெருமானை கண்டு கொண்டேன்.

2598. நிராதாரத்தில் விளங்கும் சிவத்தை அறிந்து ஒன்றுபட்டவர் உலகினை நடத்திச் செல்லும் தன்மையுடையவர் ஆவர். அத்தகையோர் சிவதத்துவத்தை அருளும் மூர்த்தியும் ஆவர். அவர்களால் உலகில் மழைவளம் உள்ளதாகும் என்/று வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. அவர் ஊனும் உருகும் உள்ளம் உடையவரிடம் நிலைபெற்று விளங்குவர்.

2599. சிவத்தின் திருவருள் உயிர்கட்குக் கிட்டிய காரணத்தை வினவில் பிரபஞ்ச போரில் மயக்கம் தெளிந்து சிவ ஞானத்தில் திளைக்கும் சிந்தை இறைவனை நாடி உலகியல் மயக்கத்தில் ஈடுபட்ட அச்சிந்தையை மாற்றி அரிய மெய்ப்பொருளான சிவத்தின் திருவடிகளைப் போற்றி வழிபடுவதாகும்.

2600. இறைவன் மெய்ப் பொருளுடன் கலந்திருப்பவரின் உடம்பிலும் உயிரிலும் பிரிவு இல்லாமல் நிற்பவன். உலகப் பற்று உள்ளவரிடம் போய் அடையாதவன். உய்யும் வகையறிந்து நாடுபவரிடன் பற்றுகளை அழிப்பவனாய் நின்று அவ்ர்தம் உடலிலும் உயிரிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.

2601. இறைவன் மெய்ப் பொருளாம் சிவத்துடன் பிரிவின்றி நிற்பவரிடம் கலந்திருப்பவன். உலகப்பற்று உள்ளவரிடம் போய்ச் சேராதவன். இத்தகையவனைச் சுழுமுனை நாடியில் பொருந்தி மேல் எழும்போது சிவபெருமானை சுழுமுனையில் எண்ணியிருப்பவர்க்கே மனத்தில் பெற முடியும்.

2602. தலையில் பிராணன் மோதுதலை அடைந்து பகலிலும் இரவிலும் சிவத்தை உடம்பில் பொருந்தும்படி எண்ணியிருப்பின் அப்பெருமான் தலையின் மேல் சிறந்து விளங்குவான், பொய்யான உலக நோக்கில் செல்வதையும் புலன்வழிச் செல்வதையும் விட்டு நிற்கில் தலைவனும் முன் சொன்ன கபால வழியில் எதிர்ப்பட்டுத் தோன்றுவான்.

2603. பிராண வெற்றி பெருவதும் இறைவன் திருவருளைப் பொறுத்ததே ஆகும். ஆனால் இந்நெறி உத்தமமான நந்தியெம்பெருமான் சீவன் உய்யும் பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவற்றுக்கு விளை நிலமான ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான வான் புரவியைக் கொண்டு சிவப்பயணம் செய்யலாம்.

2604. சிவன் சுழுமுனை நாடியில் கலந்திருப்பவன். நினைப்பவர் உள்ளத்துள் விளங்குபவன். மனத்தோடு உடம்பிலும் பொருந்தியிருப்பவன். மூலாதாரத்தில் நிலைபெற்றவன். உலகப் பற்றை விடாதவரிடம் வெளிப்பட்டு அருளாதவன். மலம் அற்றவன். இவ்வியல்பு வாய்ந்த இறைவன் உடல் பற்றையும் உலகப் பற்றையும் விட்டவர்க்குத் தஞ்சம் அளிப்பவனாய் உள்ளான்.

2605. உண்மையான திருவடிகள் மனத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச் சுழுமுனையான தாழ்பாளை திறந்து கொண்டு அறிபவர் எவரும் இலர். பொய்யின் மூலம் வைக்கப்பட்ட உலகப் பற்றை நீ விட்டு அங்குச் சுழுமுனையைத் திறந்து கொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.

2606. உய்வு பெற வேண்டுமானால் சீவர்களாகிய நீங்கள் உணர்வால் போற்றி வழிபடுங்கள். அப்போது மெய்யான அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி விளையும். உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குபவரின் சகசிர தளத்தில் எம் தலைவன் அங்குச் சீவனுடன் வேறுபாடும் இல்லாது விளங்குவான்.

2607. நறுமணம் விளங்கும் சகசிரதளமான மலரில் சிவமான கனி ஒன்று உண்டு. அந்தக் கனி விஷய வாசனையான பறவைகள் கொத்தி தின்பதற்கு எட்டாததாகும். அந்த விஷய வாசனைகளான பறவைகளச் சீவசத்தியை மேல் நோக்கச் செய்கின்ற அம்பினால் எய்து அகலத் துரத்தினால் செம்பொன் ஒளியுடைய சிவகதியைப் போய் அடையலாகும்.

2608. மயக்கத்தை தருகின்ற ஐம்புல ஆசைகளை அறுத்துக் கலக்கத்தைப் போக்கிய சிவத்தை தொடருங்கள். வேறு இறைவன் உண்டு என்று மயங்காமல் சிவனே என் இறைவன் என்று எண்ணித் தொடரின் உய்ந்து போவாயாக என்று என் மலத்தை அவனுடன் சேர்த்துக் கொண்டான்.

2609. உள்ளத்தால் உலகத்தைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி எண்ணவல்லார்க்குச் சிவம் பதியும் மேலான நுண்ணுடல் இன்பமாய்ப் பொருந்தும் என்பர். உலகத்தைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தகுந்தபடி தியானம் செய்தால் ஞான பூமியில் தூய சிவாத்தின் அருள் உண்டாகும்.

#####

Read 1799 times
Login to post comments