Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:24

பத்தியுடைமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

பத்தியுடைமை!

2623. இறைவன் உயிர்களுக்கு வீடுபேற்றை அளிக்கும் ஞான வடிவாகவும் மந்திர வடிவாகவும் உள்ள தலைவன். அழியாத தேவர்களை நடத்துபவன். தூய்மையானவன். தூய நெறியாக விளங்குபவன். இத்தகைய இறைவன் அடியார்களால் போற்றப்படும் உயிர்களின் தலைவனும் ஆவான்.

2624. சிவபெருமானின் சந்தான ப்ரம்பரையில் வ்ந்த அடியாரிடம் அடிமைக்கு அடியவனாகி அவரிடம் அடிமைப் பட்டேன். அப்படி அடியார் அருளால் சிவஞானம் பெற என்னையும் அவன் அடையார்களுள் ஒருவனாய் ஏற்றுக் கொண்டான்.

2625. இறைவன் தன்னைச் சார்ந்தவ்ர்க்கு நீரை விடக் குளிர்ச்சியுடையவன். உலகத்தைச் சார்ந்தர்க்குத் தீயை விட வெம்மையைத் தருபவன். அவனது இப்படிச் செய்யும் இச்செய்கையை அறிபவர் யார். ஆனால் உலகத்தின் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ள்ச்த்தில் உமையம்மையுடன் எழுந்தருளியிருப்பவன் ஆவான்.

2626. ஏழு உலகங்களில் உள்ளவர் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவன் ஆன என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யார் அறிய வல்லார். சிவத்திடம் பத்தி கொண்டூ ஊர்த்துவ சகசிரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து அவரது உதவியைப் பெற்றவர்க்கே அல்லாமல் முத்தைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் அவளைக் (குண்டலினியை) காணலாம் எனக் கூறுவர் யவருமிலர்.

2327. கன்று தாயை நாடிக் கதறி அழைப்பதைப் போன்று நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயான சிவத்தைப் பக்தியிப்னால் கதறி அழைத்தேன். வான் உலகு வாழ்பவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப் பொருள் ஊனில் கட்டப்பட்டிருக்கும் என்னை விரும்பி என் மனத்தில் எழுந்தருளியுள்ளான்.

2328. மலத்தால் கட்டப்பட்டிருக்கும் சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர். ஆதலால் அவர்களாகச் செய்து கொள்ளும் பயிற்சி பலனை அளிக்காது. போகும் முதற் நிலையில் உள்ளவர் இவனைத் தவிர வேறு எதனையும் நினையாதவராதலால் அவர்களின் முயற்சியில்லாமலேயே வேண்டியவை எல்லாம் அவர்களுக்குப் பொருந்தும். தலைவனான சிவத்துக்கு மலக்கட்டு உடையவர்க்குப் பிறவிப் பிணிப்பும் மலம் அற்றவர்க்குக் காட்டும் அருட் பிணிப்பும் ஆகிய அருட் செயல்களால் இறைவனைப் ப்ற்றிக் கொண்டு விளங்குபவர்க்குச் செயல் ஏதும் இல்லை.

2329. உடல் கற்பமாகக் குண்டலினி சத்தி உடம்பில் விளங்கவும் நாத ஒலி கேட்கத் தலையின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறித் தேன் சிந்தும் சகசிரதள மலரைக் கொண்டு சிவபெருமானை வழி படுவதல்லாது பிற கடவுளைத் தெய்வம் என்று எண்ணி வழிபடுவதற்கு என் மனம் இடம் அளிக்காது.

2330. அடியார்க்கு எப்போதும் தக்க துணையான நந்தியும் தேவர்க்குத் தலைவனும் ஆகிய இறைவனைத் துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாய்க் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்திருக்கத் துணைவனாய் ஒளி வடிவினனாய் நின்று அருளுவான்,.

2331. ஒளி மண்டலத்து வாழ்பவர்களான தேவர்களை அடக்கியிருகின்ற இருள் மண்டலத்தில் வாழ்பவர்களான அசுரர்களது முப்புரத்தை எரித்த தலைவனை நாதமயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன் பொதிந்த உடலுள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானியர் வழிபட்டனர்.

2332. குண்டலினி சத்தியை மூலாதாரத்தினின்று எழுப்பிச் சகசிர தளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக. அல்லது அறியாது கேடு செய்க என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்தவன் சிவன். அப்பொருமானினை நாடி என் மனம் ஒளி பெற்று விளங்கும். சிரமான மலையிலும் நெற்றி நடுவான வானத்துள்ளும் விரிந்த சகசிரமான புறத்திலும் மூலாதாரமான உலையிலும் மன மண்டலம் என்ற உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்து இருந்தேன்.

#####

Read 1623 times
Login to post comments