Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:02

குருமட தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஒன்பதாம் தந்திரம்

குருமட தரிசனம்!

2649. படைக்கப்பட்டவையும் தீயில் இடும் ஆகுதியும் பரந்த ஓமத்தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் என்னும் இவை எல்லாம் எம் சிவபெருமானைக் கருதிச் செய்வனவே என் எண்ணிக் குவிந்த மனத்துடன் குருவடிவாய் விளங்கும் ஒளியைத் தரிசித்தவர் இறைவனின் திருவடியைப் பொருந்த்தி நின்று உலகியல் வெம்மையை விட்டு நின்றவர்.

2650 அடியவனின் உள்ளத்தை விட்டு உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை ஆராயின் சீவனுக்கு வேறு இடம் உண்டோ. அங்ஙனம் அவனுக்கு இவன் உள்ளம் ஆகும் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவன் சிவன் வேறாக இருக்கின்றான் எனக் கூறுகின்றனரே. என்னே அறியாமை.

2651. அறிஞரால் விரும்பபடும் சகசிரதளத்தை நான் அறிந்து கொண்டேன். பின்பு ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானின் ஒளி ஒலியான திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் மனமண்டலத்தைக் கோயிலாகக் கொண்டவனும் ஆகிய என் இறைவன் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் இருப்பதை உணர்ந்தேன்.

2652. இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் எது மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகையுள்ள இடமும் எனச் சொல்வோர் ஆறு ஆதாரங்களுடன் அஞ்ஞானமான காடு எது எனச் சொல்வேன். இவற்றைப் பதினான்கு உலகத்தில் உள்ளவர்க்கும் சொல்வேன்.

2653. ஞானியர் பொருந்தியிருக்கும் இடம் முகம் ஆகும் பெருமையுடைய மடம் முன் உள்ள ஒளியாகும். உள்ளத்தில் உண்ட்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்வதை எண்ணியிருப்பதே நல்ல காட்சியாகும். நுண்ணுடம்பே மேலான ஆசனம் ஆகும். அருவுருவான ஈசனின் திருப்பெயரைக் கணித்தல் செயலாகும். அறிவு வானமே அவர் பொருந்தியிருக்கும் குகையாகும் இவையே அவரைத் தாங்கி நிற்பனவாகும்.

2654. அகநோக்குட்ன் ஆராயும் ஞானியர்க்கு அகமுகத்தில் விளங்கும் ஆன்மாவான பீடமே எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரம். உலக சொருபமான சத்தியே எல்லாவற்றிற்கும் இருக்கை. உலக காரணமாகிய தெய்வமே அனைத்தையும் இயக்கும் சிவம்.

2655. தூமாயை துவா மாயை என்னும் இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காது நிற்கும். அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்ற ஐந்து திசைகளும் நீங்கிட அந்த ஆன்ம ஒளியில் நிலைபெற்று ஆராயும் ஞானியர் காண்பான் காணப்படுவான் காண்கின்றான் என்ற மூன்றையும் கடந்து மேலான பிரணவ யோகத்தை அறிவர்.

#####

Read 1537 times Last modified on வியாழக்கிழமை, 16 July 2020 16:17
Login to post comments