gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 16 July 2020 12:29

சூனிய சம்பாஷணை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

#####

சூனிய சம்பாஷணை!

2866. மனித உடல் சூது ஆடும் பலகை போன்றது. ஐம்பொறிகளும் சூதாடுவதற்குரிய கருவிகள் ஆகும். உயிரின் இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்று கண்களாய் விஷய சுகம் என்ற ஆகாயத்தை அடைய ஐம்பத்தோர் எழுத்துக்களையுடைய ஆதாரங்களில் சீவன் இருந்து செயல்படுகின்ற மாயத் தன்மை கொண்ட பொறிகளின் மறைப்பை அறியேன்.

2867. தூய சிவத்தை அடையும் நெறியான பயிர் முளைக்காதபடி ஆனவம் கன்மம் மாயை என்னும் களைச் செடிகள் பெருகிக் கிடந்தன. இத்தகைய களைகளை அகற்றிச் சிவநெறி என்ற பயிரை வளர்க்கும் வகையை அறிபவர் இல்லை. சிவநெறிப் பயிரை வளர்க்கும் வகையை அறிந்து அதற்கு மாறான ஆணவம் முதலிய களைகளை அகற்றி நிற்பவர்க்கு என் உள்ளத்தில் எழும் அன்பு பெருகி நிற்கின்றது..

2868. ஆறு ஆதாரங்களாகிய தெருவில் கீழ் உள்ள மூலாதாரம் என்ற சந்தியில் பக்குவம் அடையாதபோது இருள் முலமாகத் தொழிற்படும் நான்கு இதழ்களான பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அரிய சுழுமுனையான ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மீது ஏற முனைந்தேன். ஏறிச் சகசிரதளம் சென்றேன். மூலாதாரம் முதலிய எழு கமலங்களும் கூடி ஒன்றாகி ஒளிமயமாய் பொங்குவதைக் கண்டேன்.

2869. ஞான சாதனையான கத்தரி விதையை விதைக்க வைராக்கியம் என்ற பாகற் கொடி தோன்றியது. தத்துவ ஆராய்ச்சி என்ற புழுதியைத் தோண்டினேன். மஞ்சள் ஒளியையுடைய சகசிரதளமான பூசணிப் பூ பூத்தது. உடல் என்ற தோட்டத்தில் எழுத்துக்களான குடிகள் வணங்கி அகன்றார். வாழ்வில் தலைமை அளிக்கும் சிவமாகிய கனி கிட்டியது.

2870. நிலம் முதலிய ஐம் பூதம் கூட்டுறவினால் ஏற்படும் வீரியமான விதையில் ஆன்மாவை விளக்கிக் கொள்ளும் விந்து மண்டலம் இருக்கின்றது. இந்த விந்து மண்டலம் எப்படிச் செயல்படுகின்றது என்பதை அறிந்த ஞானம் உடையவர் எவரும் இலர். நீலகண்டப் பெருமானிடம் உள்ளம் பதித்தால் ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தைச் சந்தேகம் இல்லாமல் எளிதாய் அடைய முடியும்.

2871. பயன் அற்ற பள்ள நிலம் ஒன்று உள்ளது. பயிர் விளைவு அற்ற நனவு, கனவு ஆகிய ஆகிய இரண்டு நிலங்கள் உள்ளன காண்பதற்கு அரிய ஆன்மாவான கள்ளச் செய் தன் உண்மை உணராத நிலையில் பயனற்ரு இம்மூன்று அவத்தையிலும் கலந்து விளங்கியது. தன் உண்மையை உணர்ந்து உள்ளம் என்ற நிலத்தைப் பொருந்த்திச் சிவதொண்டு என்ற உழவைச் செய்பவர்க்குச் சிவானந்தமான வெள்ளம் பாய்ந்தி சீவன் முத்தி விலைச்சல் விலையும்.

2872. இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று ஏரும் உழுவது மூலாதாரம் என்ற முக்காணி நிலம். உழவைச் செய்தபின் அவை முதுகுத்தண்டான கயிற்றில் கட்டப்பெற்று சுழுமுனை என்னும் தறியில் பொருந்திவிடும். ஞான சாதனை செய்யும் உழவர் சொல் வடிவான பிரமத்தை எழுப்பி உள் நாக்குமேல் பிரமப் புழையை அடைந்து அங்குள்ள சகசிரதளமான வயலை உழமாட்டார். அடயோகம் செய்து விலைச்சல் அற்ற நிலத்தில் பயிர்
செய்கின்றனர். என்னே பயன்.

2873. ஆதாரங்கள் என்ற ஏழு கிணறுகளும் அவற்றினின்றும் நீர் இறைப்பதற்கு இடைகலை பிங்கலை என்ற இரண்டு ஏற்றங்களும் உண்டு. சந்திர கலையான மூத்தவன் இறைக்கவும் சூரியக்கலையான இளையவன் பாய்ச்சிய வீரியமாகிய நீர் அக்கினிக் கலையான பாத்தியில் பாய்ந்து சகசிரதளமான வயலுக்குப் போகாமல் பயனின்றி வீணே கழிந்து விடின் விலைமகள் கூத்தி வளர்த்த கோழிக் குஞ்சு அழிவது போல் ஆகும்.

2874. மேய்ப்பவர் இல்லாமல் திரியும் ஆன்ம த்த்துவமகிய பசுக்கள் இருபத்து நான்கு உள்ளன. வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற குட்டிப் பசுக்கள் முறையே ஏழும் ஐந்தும் இருக்கின்/றன. இச் சிறிய பசுக்கள் குடம் நிறைய பால் கறந்தாலும் கறக்காத பட்டி மாடே ஆன்மா என்னும் பார்ப்பானுக்குக் கிடைத்தது.

2875. பாலைக் கறக்காத பசுக்களான இருபத்து நான்கு தத்துவங்கள் உள்ளன.. ஊற்றுபோல ஒளிவீசி நிற்கும் சிவதத்துவமான் பசுக்கள் கறக்கின்ற இன்பமான பால் ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. இடைகலை பிங்கலையாகிய காற்றுப் பசுக்களை கறந்து உண்ணும் காலத்தில் அதனின் வேறான சுத்த தத்துவமான பசுக்கள் வருவதை அறிய இயலது.

2876. உயிரின் மன மண்டலத்தில் தலையின் மீது உள்ள ஊர்த்துவ சகசிரதளத்தில் அருமபைப் போன்று சிறிதாய்த் தோன்றிச் செம்மையான நாதம் படர்ந்தது. வானம் சிறந்து விளங்க மெய்ம்மைப் பொருளான சிவத்தை நிலைபெறச் செய்து சீவன் அப்பொருளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான்.

2877. துன்பம் அளிக்கும் வினையான பயிர் விளையும் உடம்பான வயலில் கீழ் முகமாகச் செல்லும் உயிர்வளியின் வழியை அடத்து மேல் முகமாக்கிக் கொள்ளத் தக்க நல்ல சிவ தத்துவம் ஆன பசுவைச் சேர்த்துக் கொண்டால் தலையின் மீது விளங்கும் விந்து மண்டலம் சிவப் பயிர் விளையும் விதையாகும்.

2878. இடைகலையான சந்திர கலையைத் தூண்டி சிவ சிந்தனையான எருவைத் தூவி உணர்வான விதையை விதைத்து இடைகலை பிங்கலை ஆன காளைகளை அங்குச் சேர்த்து மூச்சுக் கதியான முறையை மாற்றித் தொண்டைச் சக்கரமான மிடாவில் ஞான சாதனையான சோற்றைப் பதப்படுத்தி மென்மையாய் உண்ணார். இதுவே கிடாக்களைக் கொண்டு சிவபதமான செந்நெல்லைப் பெறும் முறையாகும்.

2879. சிவத்தை அடையும் வழியை அறிந்தவர்க்குச் சிவம் விளங்கும் விந்து மண்டலம் பெருகிக் கிடந்தது. அங்ஙனம் வானப் பேற்றின் நினைவாகவே இருப்பவர்க்கு அது மும்முறை பெருகி ஆனந்த மயமாக விளங்கும்.

2880. அடயோகம் ஒரு களர் நிலம். அதில் சாதனை என்ற உழவைச் செய்பவரின் எண்ணத்தை நாம் அறிய இயலவில்லை. களர் நிலத்தில் ஏன் உழுகின்றோம் என்பதை அவர்களும் உண்ரவில்லை. அங்ஙனம் சாதனை செய்பவர் மூலாதாரமான களர் பகுதியில் தோன்றிய இளநிலம் வாய்த்த குண்டலியான காஞ்சிக் கொடியின் ஆற்றலால் காமத்துக்கு இரையாவார். மாள்வார்,

2881. நாதத்தை விளங்க விடாத வஞ்சனையைச் செய்யும் காம வாயுவான சிறு நரி தங்கும் விந்துப் பை என்ற கொட்டிலில் பாசத்தைச் சிவாக்கினியில் இட்டு நாத உபாசனை செய்தால் ஒலியாகிய நன்மை பெருகிச் சித்து ரூபினியான சத்தி பதிய அத்தகைய உள்ளமான இல்லத்தில் சிவனும் உடன் இருந்தான்.

2882. தலையான மலையின் மீது ஒளிக்கதிரான மழை பரவ பிராணன் என்ற மான் குட்டி தலையின் மத்தியில் மோத ஊர்த்துவ சகசிரதளம் என்ற குலைமீது இருந்த சிவமாகிய செழித்த கனி உதிர கொல்லன் உலைக் களத்தில் இட்ட இரும்பைப் போல் அந்தச் சிவன் மர்பகத்துக்கு மேல் ஒளிமயமான அமிர்தத்தை வழங்குமாறு செய்தான்.

2883. ஆன்மா என்ற பார்ப்பானின் உடலில் பொறிகளான கறவைப் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை மேய்ப்பவர் இல்லாமல் விருப்பம் போல் திரிவன. ஆன்மாவைச் செலுத்தும் சிவமான மேய்ப்பாரும் உண்டாகில் புலன்களில் போகும் விருப்பத்தையும் விட்டால் ஆன்மாவிடம் பொருந்திய பொறிகள் என்ற பசுக்கள் பேரின்பம் என்ற பாலைத் தரும்.

2884. பிராணன் என்ற காட்டுப் பசுக்கள் ஐந்தும் ஆன்ம தத்துவம் புருடன் அற்ற வித்தியா தத்துவம் ஆகிய ஆண்சிங்கம் முப்பதும், இன்பதுன்பமான சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், சேவை, அருச்சனை, அடிமை, வந்தனம், சக்கியம், ஆன்மநிவேதனம், ஆகிய திப்பிலி ஒன்பதும் தமக்குரியவனாய் அடங்குமனால் தன் உள்ளத்தில் உல்ளவனான காமம் முதலியவை வளர்ச்சி அடையா. அம்முறையே செலுத்துபவர் ஞான ஒளியை வளர்ப்பவர்..

2885. ஏட்டில் எழுதாத மறைநூலில் நுட்ப வாக்கான பொருளை இளமை நலத்துடன் கூடிய குண்டலியான கன்னி தலையை அடைந்து எழுப்ப மேல் முகமான சகசிரதள மலரின் ஆனந்தம் உண்டாகும். நாதமாகிய தேனை உடலுடன் பொருந்தாத ஆன்மாவான வண்டு நாதமான தேனில் திளைத்து இன்பம் அடைந்தது.

2886. உடலினின்று வெளியே போகும் காற்றான அபானனும் புகும் காற்றான பிராணனும் கூடும் உடம்பான நாவல் மரத்தின் பயன் தரும் பழமாகிய போகத்தை அனுபவிக்கின்ற ஐம் பொறிகளான ஐவரும். வெந்து விடும் இயல்புடைய உடம்பு ஆன கூரையில் மகிழ்வுடன் திலைக்கின்றவரே. என்னே அவற்றின் இயல்பு.

2887. உள்ளம் என்ற மூங்கிலின் விதையினின்று தோன்றிய வைராக்கியம் என்ற வேப்பமரமானது உண்டு. அந்த வைராக்கியத்தைப் பொருந்திய முதுகுத் தண்டான பனை மரத்தில் குண்டலினி என்ற பாம்பு இருக்கின்றது. கீழே சுருண்டு கிடக்கும் பாம்பை மேலே செலுத்தி அமுதம் உண்பவர் இல்லாமல் வைராக்கியமான பாம்பு பயன் தாராமல் கெடும்.

2888. பத்து நாடிகள் ஏன்னும் பருத்த புலி பத்தும் ஐம்பூதங்கள் தன் மாத்திரைகள் புலன்கள் என்ற யானைகள் பதினைந்தும் ஜானேந்திரியங்களான வல்லவர் ஐவரும், பத்து வாயுக்களான வினோதகர் பத்தும், தாமத இராசத சாத்துவீகம் என்ற மூவரும் பிறத்தல் கற்றல் தேடல் கூடல் வாழ்வு தாழ்வு ஆகிய நலன்களை உயிர்க்குச் செய்யும் மருத்துவர் அறுவரும் இருக்கின்ற உடம்பில் பொருந்தி ஆன்மா நனவு கனவு சுழுத்தி துரியம் துரியாதீதம் ஆகிய ஐந்து நிலைகளையும் அடையும்.

2889. உடல் என்ற இந்த ஊர்க்குள் உழவைச் செய்யும் உசுவாச நிசுவாசமாகிய இரண்டு எருதுகள் உண்டு. இந்த இரண்டு எருதுகளையும் செலுத்தச் சீவனான தொழும்பன் ஒருவனே உள்ளான். சீவனின் நிலையை அறிந்து இந்த இரண்டு எருதுகளையும் செயல்படாமல் நிறுத்தி விட்டால் உசுவாச நிசுவாச இரண்டு எருதுகளும் போக்கும் வரவு இல்லாமல் சுழுமுனையான ஒரே எருதாய் ஆகிவிடும்..

2890. ஞானப் பயிற்சியாளர் உள்ள மண்டலத்தை விருப்பு வெறுப்பு இல்லாத சமத்துவ. அறிவால் ஒழுங்குபடுத்தி இறைவனிடம் மனம் பதியும் படி செய்து பருத்தி போன்ற வெண்ணிற ஒளியைத் தலையில் மீது விளங்கும்படி பாவித்தலால் அதுவே முத்திக்குச் செல்லும் நூல் ஏணியாகப் படைப்பு, காத்தல், துடைப்பு செய்யும் நன்முகன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரின் ஆட்சியில் உள்ள உடல் என்ற ஊரில் நாள்தோறும் சாதனை செய்து உயிரும் உடலும் சூழ்ந்த வானத்தையே தம் உடலாக்கிக் கொண்டு முழுமையுடன் விளங்கும்.

2891. அறியாமை என்னும் கோட்டானும் காமமான பாம்பும் தர்மமான கிளியுடன் அதர்மமான பூனையும் சிற்றறிவான நாகணப் பறவை அறியாமை என்னும் கோட்டான் நணுக முயலும் அப்போது அறியாமையான கோட்டானைப் பார்த்து சீவனாகிய எலி நாதமாகிய ஒலியை எழுப்பிச் சிற்றறிவையுடைய நாகணவாய்ப் பறவையைக் காக்கும்.

2892. குலையாய் உள்ள நல்ல எண்ணமான வாசனையைக் கலக்கி விட்டால் நிலைபெற வேண்டிய சீவனான வெள்ளை எலி தாமத இராசத சாத்துவீகம் ஆன என்ற முக்குணங்கள் வசப்பட்டு நிற்கும். அப்போது அதன் எண்ணம் உடலாகிய உலைக்குப் புறமாகிய மனமானது வெளியே போய்விடும். இல்லையெனில் அறிவிலே அடங்கியிருக்கும். உடல் பற்றுக் காரணமாகப் பிறந்த ஆசையால் அவ்வாறு மனம் அலையும்.

2893. அறியாமை மயமான தத்துவக் காட்டில் புகுந்தவர் சிவபூமியான வெட்ட வெளியைக் காண மாட்டார். உடல் என்ர கூட்டில் புகுந்த பஞ்சம் பிராணன் என்ற ஐந்து குதிரையும் உடலைச் சீழ இருக்கின்ற மன் மண்டலத்தைக் காமக் குரோதம் முதலிய ஆறு ஒட்டகமும் மறைப்பினைக் செய்யாவிட்டால் சீவன் சீவதுரியம் பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்து விளங்கும்.

2894. ஆடையும் நறுமணப் பொடியும் மினுக்கு எண்ணெயும் எழுத்தணியும் இடையணியும் கையணியும் என்பவனவற்றால் அலங்கரிகப்பட்ட பெண்களைக் கண்டு மோகம் கொண்டவர் பாறை மீது வைத்த ஆடை பறப்பதுபோல் காமம் முதலிய ஆறுவகையில் வருந்திக் கெடுவர்.

2895. துருத்தியைப் போன்ற உடலின் உச்சியுள் உள்ள மலை போன்ற தலையின் மீது மனத்தின் விருத்தியைக் கண்காணிக்க காலை நண்பகல் மாலை என்னும் மூன்று காலங்களிலும் அறிவுவானப் பெருவெளியை ஞான சாதனை செய்பவர் நாடுவர். அவரை வருத்திடும் மலை போன்ற தீய வினைகளைத் தவிர்ப்பவளாகிய பராசத்தியுள்ளாள். அவ்வாறுள்ள சத்தியின் துணையில்லாது சிவனது ஊரை அடைய முடியாது.

2896. அறம் என்கிற கிளியும் பாவமாகிய பருந்தும் இன்ப துன்மான மேளத்தைக் கொட்ட இன்பத்தில் பற்றும் துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் திருந்திய சீவராகிய மங்கையர் சிவத்துடன் சேர்ந்தனர். அதனால் அவர்கள் தவத்தால் அடையும் வான் மயமான உடல் பெறுவர். அவ்வாறு இருக்கின்ற வானப் பேற்றில் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.

2897. பொறிகளாகிய பறவை சத்தம் முதலியவற்றை அனுபவித்துப் பின்பு அதனுள் அழுந்தி அவ்விடம் அனுபவமான உணவை அனுபவிப்பதால் என்ன ஆகும். வெம்மை உடைய மூலாக்கினியில் உணர்வாகிய நெய்யைச் சொரிந்து அதனைத் தூண்டிச் சூழ்ந்த அண்ட கோசத்தினது இருளைப் போக்கி ஒளிமயமாக்கும் தன்மையைப் போக்கும் தன்மையை அறிபவர்க்குச் சிவமாகிய பயனை அடைய இயலும்.

2898. நிர்க்குணப் பிரமத்திடம் சத்தம் பரிசம் ரசம் கந்தம் ஆகிய தளிர் இல்லை. ஒளிமயமான மலர் உண்டு .விடய வசனையாகிய வண்டு இங்கு இல்லை. நிர்க்குணப் பிரமத்தின் அறிவான தன்மையை எவரும் காண முடியாது. ஆனால் நிர்க்குண்மான பொருள் கீழேயுள்ள நற்குண்மான வேரிலும் கலந்துள்ளது. ஆனால் நிர்க்குணத்தின் இருப்பு சகுணமான நாளீல் இல்லை. உலகத்தில் காணப்படும் மலர்களாகிய கொத்துக்கள் அங்கே இல்லை. ஆனால் அனுபவிக்கப்படும் ஒளி என்னும் மலர் உண்டு, அந்த ஓலிக் கதிர்களை வேறாகப் பிரித்துச் சூடும் தலை இல்லை. கரும காண்ட அறிவகிய கிளையில் ஞானமான நிர்க்குணத்தைக் காண முடியாது.

2899. ந்ற்குணமான கரையைக் கடந்து நின்ற நிர்க்குண பிரமமாகிய ஆலமரம் கண்டு குணங்கள் அற்ற நிலத்தைப் பொருந்தி நிற்பர். மக்கள் இனத்தில் மேன்மை பெற்ற அவர் அஸ்மிதை, ராகம், துவேசம். அபினி வேசம் அன்னும் ஐந்து கிலேசங்களை அறிந்து நிர்க்குணப் பிரமத்திடம் தாழ்ந்து அதன் பயனை அடைபவர் ஆவார்.

2900. ஒலியுடைய இல்லறமாகிய வழியிலே அஞ்ஞானமாகிய காடு இரு காதம் உள்ளது. அந்தக் காட்டில் வழிச் செல்பவரைக் கட்டிப் போடக் கூடிய ஐம்புல வேடராகிய கள்வர் இருக்கின்றனர். அந்த ஐம்புலனாகிய வேடரைச் சிவ ஒளியாகிய வெள்ளர் நாதமாகிய ஒலியை எழுப்பி அழைக்க அக்கள்வரான வேடர் மீண்டு வந்து சகசிரதளமான கூரையில் நிலை பெற்றனர்.

2901. அறிவும் அறியாமையும் ஆகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துள்ள இல்லறமாகிய கடலில் நாம ரூபமான எட்டியும் வேம்பும் விட்டு சத்து சித்து ஆனந்தமான வாழையும் கற்கண்டும் தேனும் கலந்து அனுபவிக்காதவர் உலக போகமான எட்டிப் பழத்தை நாடிக் கெடலானார்.

2902. காரணம் அற்ற சிவம் பொருந்திய உயிர் பிருதுவியின் இயல்பான சீவ சஙகல்பத்துக்கு ஏற்பப் பொருந்தி மூடியுள்ள பாசத்தில் சீவன் உருவத்தால் ஆன பயனை உள்ளத்தில் வழி அனுபவிக்கும் வலக்கண்ணில் விளங்கும் உயிர் உள்ளத்தின் வழியாகத் துன்பத்தையும் அடைகின்/றது.

2903. சுட்டறிவான அற்ப வளம் பொருந்திய புன்செய்யில் மேய்கின்ற ஆன்மாக்களான பசுகளுக்கு உதவியவன். சிவன். அவன் அவற்றைச் சுட்டறிவின் எல்லையைக் கடக்கச் செய்து அகண்ட சொருபமாகிய தன்னை அடைந்து பொருத்தமான தகுதியை அளித்தபின் அல்லாமல் சுட்டறிவாகிய புன்செய் நிலத்தை நாடிச் செல்லும் மனம் அகண்ட ஞான வடிவை அடைய இயலாது.

2904. வலக்கண் ஆன அகன்ற இடத்தின் நீரில் சூரியக்கலையான செந்தாமரை மலர்ந்தது.. இடக்கண் என்ற நீர் நிலையில் சந்திரக்கலை என்ற கருங்குவளை மலர்ந்தது. ஞானப் பயிற்சியால் இரண்டையும் சேர்த்துச் சுழுமுனையான விட்டத்தில் விளங்க வல்லார்க்கு ஆழ்ந்த இடமான நீர் நிலையில் விளைந்த ஆனந்தம் என்னும் முலாம் பழம் கிடைக்கப் பெறும்.

2905. காமம் குரோதம் முதலிய ஆறு பறவைகள் ஐம்பூதமயமான உடலில் இருக்கின்?றன. இவை தலையின் மீதுள்ள நூறு நாடிகளான பறவைகளால் உண்டு செல்லப்படுபவன. ஆனால் உயிர் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்தால் பின்பு தவறாமல் சிவன் விளங்கும் பதியைச் சீவன் அடையக் கூடும்.

2906. குடைதல் முதலிய செய்கைகளைச் செய்து திளைக்கின்ற யோனி என்ற குளத்தில் வட்டத்தால் குறிக்கப்படும் ஆகாய சம்மியம் பொருந்தி இயல்பான ஊற்றுப் பெருகும். வீரியமான சத்தியை வெளியே விடாமல் நடுநாடியாகிய கயிற்றால் கட்டி உடலுள் நிலை பெறும்படி செய்த பின்பு இதனால் ஒளி யாவர்க்கும் உண்டாகும்.

2907. உலகத்தைச் சூழ்ந்துள்ள ஏழுகடல்களும் உலகில் உள்ள மேலான எட்டு மலைகளும் சூழ்ந்துள்ள வானத்தில் தீ காற்று நீர் தாழ்ந்துள்ள பெரிய நிலம் என்பவை இடம்பெற்ற தன்மையை உண்ர்ந்து நீண்ட காலம் வாழ விரும்புவர்க்கு அந்த வான் ஆலயமாகும்.

2908. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தழுவி வெப்பம் உண்டாகச் செய்து கருப்பையில் உடலை உருவாக்கிவிட்டுக் காமச் செயலின் தன்மையை விட்டனர். கருவை இப்படி அமைத்த பின்னர் உடம்பில் உள்ள பொறிகள் மயக்கத்தினின்று நீங்கி பொறியின் வழி போன மனம் முன்னதாக இவை பின்னாக நின்றன.

2909. திருமணச் சடங்கில் மேளமான கொட்டும் உரிமையான தாலியும் இரண்டே. இந்த இரண்டையும் விடக் களவு வழி விருப்பமான பாரை வலிமையானது. மற்றவர் அறியச் செய்த கொட்டுக்கும் தானே உரிமையாய் அணிந்த தாலிக்கும் இயல்பாய் உண்டான விருப்பத்துக்கும் இறைவன் அருளால் அமையும் விருப்பமே வன்னையுடையதாகும்..

2810. மாறிக் கொண்டே இருக்கும் கயல் மீனைக் கண்டவர் உலகில் பிறந்து இறந்து கொண்டே இருப்பர். சிவம் என்னும் முயலை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோக நெறி நிற்பவர் சிறிது சிறிதாக ஞானத்தை அடைந்து உய்வர். இவற்றை விடுத்து தருக்க வாதத்தில் ஈடுபடுபவன் மறைகள் போற்றும் நிலைத்த பொருளான சிவமாய் ஆக முடியுமா முடியாது.

2811. ஆசை என்னும் கோரைப் புல் முளைத்த உள்ளம் என்ற குளத்தில் அதன் பாசமான ஆரை படர்ந்து நீண்டு விளங்கியது. ஆரையும் கோரையும் நிரம்பிய அக்குளத்தில் மீனைப் பிடிக்கும் நாரை போன்ற நீர் நிலையில் உயிராகிய மீனைப் பிடிப்பவன் ஆவான்.

2812. வளம் குறைந்த கொல்லை நிலமான அ உ ம என்ற முக்காதமும் அதன் காடு பொன்ற அர்த்த மாத்திரைப் பிரணவமும் இந்த இரண்டு உடம்பிலும் தலையிலும் ஆன்மாவைப் பிணித்திருக்கும் இரு நெறிகள் ஆகும். உடலும் தலையும் என்ற எல்லைக்குள் கட்டுப்படாமல் செயல்படுபவர்க்கு விரைவில் பிரண்வத்தைக் கடந்து ஓலி ஞானத்தைப் பெற்றுச் சிவ பூமியை அடைவது கூடும்.

2813. அகண்ட சிவத்தை அடையும் தவமான உழவைச் செய்து உள்ளம் ஒருமையடைந்த காலத்தில் எண்ணம் என்னும் மழை பெய்யாமல் சிவ பூமிக்குரிய சத்தி பொருந்தி மல பரிபாகம் உண்டாக்கி வினை போகத்தை கொடுக்காது. வளரும் ஒளிக்கதிர்கலையுடைய சிவன் பொருந்தி விளங்குவான்.

2814. சீவன் தொழிலில்லாமல் இருப்பினும் உயிரின் அதிபதியான சூரியனின் இயக்கம் பன்னிரண்டு இராசிகளிலும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் உடலைக் கடந்தபோது விளங்கிய சந்திர மண்டல ஒளி பெருகவே தேன் கசியும் சிவக்கனியின் இன்பம் காக்க இதுகாறும் வருந்திய ஐம்பொறி அறிவைச் செயல்படாதவாறு சிவன் அடக்கிக் கொண்டான்.

2815. பிரணவம் என்ற தோணி அதில் ஏறி அறிவு வானம் என்ற கடலில் போய் ஒளி பெறுவதும் இருள் விடுவதுமான வாணிகத்தைச் செய்து விருத்தியை அடைய விரும்பிய சீவன் மாயா காரியமான நீலியைப் பற்றுகின்ற உள்ளத்தின் தன்மையை சிறிது சிறிதாக விட்டுத் தேனைச் சிந்தும் கனியைப் போல் இன்பம் தரும் குளிர்ந்த சந்திர மண்டல ஒளியில் மகிழ்ந்து மூழ்கி இருப்பான்.

2916. தாமதம் இராசதம் சாத்துவீகம் ஆகிய ஆற்றிலே நனவு கனவு சுழுத்தி என்னும் மூன்று வாழைகல் உள்ளன. அங்குச் செந்நிறம் உடைய அக்கினி மண்டல விளைவாக ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலர் சேர்க்கை நிறைந்து கிடந்தன. ஆனால் சிவ அன்பு உடைய்வர் இவற்றினின்று நீங்கியவர் பொய்யை மெய் போல் பேசும் மங்கையரின் காமச் சுவையான மலரின் மணத்தை விரும்பித் தூய்த்துக் கொண்டே சுழுமுனையில் தம் மனத்தை நிறுத்தி நீடு வாழ்ந்தனர்.

2917. மூலாதாரம் என்ற அடியும் தலையாய முடியும் உடைய ஆத்தி போன்ற முதுகுத் தண்டு முடியும் உச்சியில் மூங்கிலின் முக்கண் போன்ற சந்திரன் சூரியன் அக்கினி அகிய மூன்?று கலைகள் இருக்கின்றன. முக்கலைகளும் சாதனையால் வளர்ச்சி பெற்று ஒன்றான போது கொடியும் படையும் போல் தீமையைத் தரும் ஞானேந்திரியம் கன்மேந்திரியங்கள் கெட்டு ஒழியும். அப்போது அங்கு சங்க நாதம் ஒலிக்கும்.

2918. தூயமையின்மையும் விருப்பமும் பகைமையில் சீற்றமும் தீமையில் அடக்கமும் நன்மையிலே எரிச்சலும் எங்கும் பொருந்திக் கிடந்த உள்ளத்தில் பொருந்தாமல் சிவத்துடன் பொருந்திச் சமம் செய்து நிறுத்திய பின்பு உயிரின் குறை சிறிது சிறிதாய்க் குறையும்.

2919. தாமரை அரும்பைப் போன்று எழும் சகசிரதளமாகிய மொட்டு தலையில் உண்டு. பாசத்தினின்றும் நீங்கியபோது அம்மொட்டு மேல் முகமான சகசிரதள மலராக விரிவதைக் காணலாம். உடல் பற்று நீங்கித் தத்துவக் கூட்டத்தால் ஆன உடல் கெடும்படி ஒளியாகக் கண்டு பற்று நீங்கியவர்க்கு அன்றிச் சகசிரதளமலர் விரிவதைக் காண முடியாது.

2920. நீர் இல்லாமல் உணர்வு பாயும் சகசிரதளமான நிலத்தில் மரகத ஒளி விளங்கும் ஞான சாதனையைச் செய்து இந்த உண்மையைக் காணவல்லவர் இலர். மிக்க மழையின்றிப் பெருகும் உணர்வாகிய நீரின் தன்மை பொறிகளின் வயப்பட்ட மனம் என்ற விலைச்சல் இல்லாத நிலத்தில் பொருந்தி நில்லாது என்பது புலப்படும்.

2921. அறியாமையில் மூழ்கிக் கிடந்த உயிர் என்ற கூகை குருவால் உணர்த்தப் பெற்று ஒளீயான குருந்தின் மீது ஏறி மூன்று குணம் கொண்ட மாயையே இந்த உலகத்துக்குக் காரணம் என்று அறிகின்ற போது பாம்பு போன்ற குண்டலினி சத்தி தலைவின் நடுவே உள்ள மேல் முகமான சகசிரதளத்தில் பொருந்தி நாதத்தை எழுப்பி விளங்கும். பொறிகள் வயப்பட்டு இறந்து பிறந்து கொண்டிருந்த உயிர் இறந்து ப்[றவாத சிவமே ஆகும்.

2922. வாழை போன்ற இன்பமும் சூரை போன்ற துனபமும் முன் செய்த இரு வினைகளுக்கு ஈடாக உயிர்களுக்கு வந்து பொருந்துகின்றன. இன்பத்தை விடத் துன்பம் வலியது என்று உரைப்பர். இன்பமும் துன்பமும் உடல் பற்றால் ஏற்பட்டவை என்று அறிந்து கடிய வேண்டும். கடிந்து நிலைத்த சிவத்தை இடமாய்க் கொண்டு வாழ்வதே முறையாம்.

2923. சுவாதிட்டானமான நிலத்தை தோண்டி நீண்ட உப்பு நீர் நிலையான உடலில் செலுத்தி அந்தக் கொல்லைக்குரிய சிவன் என்ற வேடன் புணர்ந்து கொண்டு வரும் வீரியம் என்ற கொழுந்து மீனை விடுவதை நீக்குங்கள். அப்போது யாம் ஒருவர் வேண்டினாலும் குறைவு படாத சிவமான செலவம் கிட்டுவதில்லாமல் சீவன் பக்குவப்பட்டு சிவமாகும்.

2924. தட்டிக் கொண்டிருக்கும் அசைவு உணர்வில் சீவன் உடல் விருத்தியை அடையும். அங்குக் கூப்பிட்டு அழைக்கும் சங்கின் நாதம் உண்டு. அந்த ஓசை வழியே போய்ச் சிவனை நாடுவதில் சிவனுக்கு மகிழ்வு உண்டாகும். அந்த நாட்டம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் சுழுமுனையான பதத்தைத் தரும் என்ற உண்மை ஆராய்பவர்க்குப் புலனாகும்.

2925. உடம்பான குடையை நீக்கிச் சித்தம் என்ற கோவில் உடையவன் நாத சம்மியத்தை நோக்கிச் சென்றது. ஆனால் விடயமான படையை எண்ணிய போது சித்தம் நாதத்தினின்றும் நீங்கி உடலை நோக்கியது. ஆன்மாவாகிய உடையவன் புத்தி என்ற அமைச்சருடன் உண்மையை உணர்ந்ததும் ஊர்வனப் போல் ஒன்பது துளை வழி போவது உடலைக் கடந்து விளங்கும்.

2926. வெளிப்படும் சந்திரக் கலையாலும் உள்ளே புகும் கதிரவக் கலையாலும் உடலில் உள்ள ஒன்பது துளைகளிலும் சேயல்படுவன ஆயின. குண்டலினியும் சந்திர கலையும் நிவிருத்தி பிரட்டை வித்தை சாந்தி ஆகிய நான்கு கலைகளும் பாகனான உயிர் அறிந்து செயல் படாவிடில் பன்றியைப் போல் இழிந்த நிலையை அடைபவன் ஆவான்.

2927. காமம் குரோதம் முதலிய அறு பகைகளான பாசி படர்ந்து சித்தம் என்ற நிலையில் பாசத்தில் பற்றுக் கொண்டிருக்கும் சீவனான கொக்கு விடய அனுபமான இசையைத் தேடி உண்ணும். ஒளிமயமான கொடியை உடைய சிவனான போர் வீரனின் துணை கிடைத்தவுடன் இருள் என்ற பாசம் கீழ்படுத்தப்பட்டு நீங்கிவிடும்.

2928. குடத்தைப் போன்ற தலை என்ற மலையின் மீது மேல் மூகமாக விளங்கும் சகசிரதளம் என்ற கொம்பு உள்ளது அந்தச் சகசிரதளத்தின் மீது உணர்வு என்ற பிராணன் போய் மோதும். அங்குச் சிவானந்தமான மலரினுள்ளே சிவமாகிய வண்டு பொருந்தி நாதமான ஓசையை எழுப்பிச் சீவனை உறவு கொள்வான்.

2929. வீணையின் ஓசையும் புல்லாங்குழல் ஓசையும் கலந்து ஒலிக்கச் செய்கின்ற சிவன் பொருந்தி முறையான கேவல கும்பகம் அடையச் செய்தான். அச்சமயத்தில் தன்னைக் கொடுப்பதும் சிவத்தைக் கொள்வதுமான வாணிகம் அமையும். முன்பு நம் உரிமையும் அச்சிவனுக்கு ஆகியது.

2930. சிவானந்தம் தருபவருடன் கொண்டு கொடுத்து வாணிகம் செய்த தன்மையைத் துரிய பூமியுள் போய் அனுபவித்தவர்க்கன்றி ஆராய்ச்சி அறிவால் அறியப்படும் தனமை உடையதன்று. சந்திர மண்டலத்தை அடைந்து இருளே தம் உண்மை வடிவம் என்பதை அறிகிலர். அத்தகைய பூமியில் தஙகி அங்கு இருப்பவரில் சிலர் உண்மையகவே இவ்வுலகத்தை துறந்தவர் ஆவார்.

2931. சகசிரதள மலர் விளக்கம் பெற்றது. அது பொன் நிறம் கொண்டு விளங்கியது. அதனுடே இருக்கும் புன்னைப் பூவின் மகரந்தத்தூள் போன்ற மலமான அணுக்கள் இரண்டு பக்கங்களிலும் ஒதுக்கப்பட்டன. குற்றம் இல்லாத சிவன் செயல்படும் இடம் இதுவாம். இது காதல் உடைய சீவனும் சிவனும் பொருந்துகின்ற சிவபூமியாகும்.

2932. ஆன்மாவோடு பொருந்திய தத்துவங்களும் தம்தம் விருப்பப்படி போய் அகமாகிய உடலில் அக்கினியை மூட்டி நிற்கும் அச்சமயத்துச் சிவன் அழிவற்ற இடத்துக்கு வழிகாட்டி ஆன்மாவில் நின்று அச்சுறுத்தினால் ஐந்து கோசங்களாகிய அன்ன மயகோசம் முதலியவற்றைக் கடக்க இயலும்.

2933. சாதகம் செய்யும்போது நிட்டை கூடாது. கலைந்து விடுமானால் வெளியே போய்க் கிரியை முதலியவற்றைச் செய்வதனால் என்ன பயன் ஏற்படும். முதல்வனை முன்னிலையாகக் கொண்டு நிஷ்டை கூடும் வகையில் ஒருமுகப்படுத்தி உபதேசம் செய்து தந்தவர் பயிற்சியாளர்க்கு மன ஒருமைப்பாடு உண்டாகாத போது என்ன செய்வார்.

2934. ஒளி உண்டாயிற்று என்று சிவ தத்துவமான பறவைகள் ஒலியை எழுப்ப அந்த ஓளியானது தோன்றிய போது சிற்சத்தி தலையிலே பொருந்தி ஒலி எழுப்பிய அச்சிற் சத்தியோடு சீவன் பர லோகத்தில் திளைக்கும் சீவனுக்கு எப்போதும் ஒலியுடன் பொருந்தி விளங்குவதால் பொழுது விடிவது என்பது இல்லை.

2935. அறிவாகாயப் பெருவெளி என்ற துறையில் சிவனைக் கொண்டு சேர்க்கப் பிரணவம் என்ற தோணி ஒன்று உள்ளது. பிரணவத் தோனி தோன்றாத போது நான்முகன் முதலிய ஐவரும் நிலை கொள்ளுதலும் தன்னைத் தந்து சிவத்தைக் கொள்ளும் வாணீகம் செய்யும் சீவன் அறிவாகாயப் பெருவெளிக்குப் போகும் நெறியில் இடைப் பகுதியில் உடல் பற்றான ஆணி கழன்றால் சிவம் பொருந்திச் சீவன் சிவம் ஆகும்.

#####

Read 2033 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879504
All
26879504
Your IP: 44.206.248.122
2024-03-19 10:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg