gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 16 July 2020 12:34

தோத்திரம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#####

தோத்திரம்!

2982. ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவன் என்ற கள்வனை அடைய மனம் என்ற தேரில் ஏறி அலைந்த நாட்டின் இயல்பை அல்லது கணக்கைச் சொல்ல முடியாது. புலம்புவர் யானும் அப்படியே பல இடங்களுக்கும் போய் அலைந்தேன். காணாமல் வருந்தினேன். இத்தகைய என் இறைவனை மின்னல் போல் தோன்றி அழியும் இந்த உடலான நாட்டில் விளங்குவதைக் கண்டேன்.

2983. நிலையான தலையின் மீது சாத்துவீக அகங்காரத்தின் உச்சியில் நாத கீதத்தில் விளங்கியிருந்தவர் எவர் என்றால் பல காலமாக முதல்வனான சிவனின் திருப்பெயரை வணங்கி வழிபட்டவர்கள் அவரது பெருமையை உணர்வீராக.

2984. சிறந்த ஆணி முத்தைப் போன்றவனும் தோன்றும் இளங்கதிரவனைப் போன்றவனும் பல வான மண்டல வாழ்நர் வழிபடும் இறைவனும் ஆகிய் என் தந்தையைக் காணாமல் புலம்பும் என்னை ஒரு பித்தன் என்று உலகத்தார் கூருகின்றனர்.

2985. புண்ணியம் செய்தவரால் உணரப்படும் சிவக்கதிரவன் என்னிடம் போந்து திகழ்ந்தான். அங்ஙனம் புகுந்து நின்றவன் எம் பேரறிவாளன். அப்பொருமான் அடியார்கள் உள்ளத்தில் விளங்கிக் கொண்டிருந்தான். அவ்விதம் என்னிடம் புகுந்து நிற்கின்ற இறைனை நான் போற்றி வழிபடுகின்றேன்.

2986. சிவக்கதிரவன் ஊனக் கண்ணினால் காணக் கூடாதவன். தலையில் உள்ள சகசிரதளத்தில் விளங்குபவன். ஞானக் கண்ணால் சிந்தை நாடினால் வெளிப்பட்டுத் தோன்றுவான். அற ஒழுக்கத்தில் நின்றவர் மன மண்டலத்தில் எழுந்தருளியிருப்பவன். நானோ அவனை நாதமயமாக உணர்ந்து வழிபடுகின்றேன்.

2987. சிவபெருமானை அவனுடைய ஆயிரம் திருப்பெயர்களால் பரவி வழிபாடு செய்யுங்கள். ஒராயிர வகையான சுகத்தை அடைவீர்கள். தலையின்மீது மனத்தை வைத்து ஞான சாதனையைச் செய்பவர். ஆயிரக்கணக்கான ஆசைகளினின்று நீங்குவர்.

2988. நான் சிவபெருமானை ஞானத்தால் புகழ்ந்து போற்றுகின்றேன். தலையின்மீது விளங்கும் விந்து நாதங்களே அப்பெருமானின் திருவடிகள் என்?று தெளிந்தேன். ஆகவே சிவயோகத்தை யாவரும் அறியுமாறு பறையறைகின்றேன். அத்திருவடிகளே எம் தலைவன் என்று போற்றி வணங்குகின்றேன்.

2989. பலவகைப்பட்ட தொண்டுகள் செய்து சிவனை நாடுங்கள். உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடு நாடி வழிபோய் வான் மண்டலத்தார் வணங்கி வழிபட ஒளிநிலை பெறலாம். பெற்ற பின்பு சிவானந்தத்தை வேண்டும் அளவு இலயம் அடையலாம்.

2990. சிவஞானியர்களின் உள்ளத்தில் அவர் வேண்டி நிற்கும் அரிய பொருளான சிவன் போந்து நிலை கொள்வான். ஆனால் இந்திரர் முதலிய அடியார் விரும்பி வேண்டினாலும் அவர்களுக்கு அழகிய தேவ மங்கையரின் தேவகானம் கிட்டுமே அல்லாமல் தெவர் உலகத்துக்கு அ[ப்பாற்பட்ட சிவகதி கிடைக்குமோ கிடைக்காது.

2991. சேற்றில் கலங்கியுள்ள நீரின் தன்மை தெரியாதவாறு போன்று மக்கள் உடல் மயமான எண்ணத்தால் கலக்கம் அடைந்து இறைவன் இன்ன இய்ல்புடையவன் என்று அறியார். குடித்தற்குரிய நீரைக் குளத்தினின்றும் முகந்து ஒரு குடத்தில் வைத்துத் தெளியச் சொல்வதைப் போல் சிந்தையை சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்தின் சீவன் சிவம் ஆவான்.

2992. உண்மைத் தவத்தில் விளங்கும் சிவபெருமானை விரும்பும் ஒருவர்க்கு உள்ளங்கையில் பொருந்திய நெல்லிக்கனி போல் அவன் விளங்குவான். ஆதலால் தூய்மையானவனும் துய நெறியாயும் விளங்கும் தேவதேவனை விரும்பினேன். அவனிடம் பொருந்தினேன். உலகைக் கடந்து நின்றேன்.

2993. அளவு படுத்திக் கூற இயலாத புகழை உடைய ஞானத்தைப் பெற்றுத் தத்துவக் கூட்டங்களைக் கடந்து நின்றேன்.. ஐயப்பாட்டு எண்ணம் என்னிடம் இல்லாததால் சிவ வடிவம் பெற்றேன். இருளான மலங்களினின்றும் நீங்கி நின்றேன். அப்போது மூலாதாரத்தில் உள்ள அக்கினி தலையின்மீது ஒளிமயமான புண்ணிய மூர்த்தி பொருந்தி உடல் வேறு உடலையுடையவன் வேறு என்று வகைப்படுத்தி உண்ர்த்திய வள்ளாகவும் உள்ளான்.

2994. வள்ளல் தனமை உடையவர்க்கு எல்லாம் மேலானவனும் ஒளி மண்டலத் தலைவனும் ஒளிக்கதிர்க் கற்றையான சடையையுடைய நாத தத்துவ முதல்வனும் ஆகிய சிவனை வஞசத் தன்மையுடைய உலகினர் கண்டு விடுவார் என்று அவன் அவர் உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்வான்.

2995. திருவடியை அளித்து ஆண்டு கொண்ட இறைவனை நாள்தோறும் வழிபாடு செய்து சன்மார்க்கத்தில் நின்றவாறு தீய குணத்தையும் தீய செயலையும் ஒழிக்கும் சிவனிடம் நானும் ஒளியுடைய நோக்குடன் உள்ளத்தையும் வைத்து இவ்வுலகப் பற்றை விட்டு நின்றேன்.

2996. மனம் பொருந்திச் சிவத்தின் திருவடியை வணங்க வல்லார்க்கு உலகப் பற்றை விட்டு அவர்கள் விரும்பினால் அவனுடைய அடிகளே வீரர்கள் போய்ச் சேரும் சொர்க்க உலகமாகும். திருவடிப் பேற்றை அடைவதே புண்ணிய உலக்த்தை அடைவதாகும். திருவடி உணர்வால் திருந்தியவர்க்குத் தலையின் மீது விளங்கும் பரவிந்து மண்டலமே பெருமையுடைய தீர்த்தம்.

2997. இந்த உடலைச் சூழ்ந்துள்ள மன மண்டல இருளைப் போக்கியருள் செய்தான். தனக்கு ஓர் உடல் இல்லாமல் தனித்து நிற்கும் அறிவொளிமயமான சிவகுருநாதன் சீவரிடம் பொருந்திய அஞ்ஞானமான கனியைச் சுவைத்து ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். சிவானந்தத்தை அருளும் சோதியைப் பற்றி நின்றேன்.

2998. அறிவாகாய ஒளியே உயிர்களின் தலையெழுத்து வண்ணமாய் ஆவது. அதுவே தேவர் வாழும் தலம். அங்குப் பரவி ஓடும் வான் கங்கையும் உள்ளது. வணங்குவதற்குரியது அதுவே. பழைய வினைக் கூட்டங்களை அழிக்கும் இடமாகும். அதுவே அருட் சத்தியைத் தாண்டிய இடமாகும். உலகைக் கடந்து நிற்கும் முடிவு நிலையும் அதுவே ஆகும்.

2999. அறிவாகாய ஒளியில் மேல் உள்ள இடம் தேவர் இனத்தவர் உள்ளது. அதன் கீழ் உள்ள இடம் மாட்சிமையுடைய தவத்தினர் நிலையாகும். துன்பத்தை அனுபவிக்கும் மனிதரின் நிலை அதன் கீழதாகும். அறிவானந்த சத்தியானது வில்வமாலையால் அலங்கரிக்கப்பட்ட சடையுடைய சிவத்துடன் அங்குப் பொருந்திய அரிய உயிர்க்கு வேண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.

3000. சூழ்ந்திருக்கும் கருங்கடல் நஞ்ஸை உண்டு கழுத்தில் அடக்கியவன். ப்தினான்கு உலகுக்கும் கருவாய்ப் பிறப்பில்லாதவன் ஆவான். அவன் ஆழ்ந்துள்ள சுனையும் காடும் உடைய கயிலை மலையில் வீற்றிருப்பவன். அவனே வாழ்வை நல்கும் ஐந்தெழுத்தில் விளங்குபவன்.

3001. உலகத்து உயிராகவும் மண்ணாகவும் உயர்ந்த காற்றாகவும் கதிரவனாகவும் திங்களாகவும் அக்கினியாகவும் ஆதியாகவும் உள்ள பெருமான் பெரிய மேகம் பொருந்தும் வானமாகவும் நீராகவும் ஆகி விளங்குகின்றான். பின் அவற்றை அழிப்பவனாகவும் திக்குப் பாலர்க்குத் தலைவனாகவும் உள்ளான்.

3002. அக்கினி கதிரவன் என்பவற்றின் தனமை அறிந்து இறைவன் அவற்றுள் பொருந்தியிருப்பவன். அது போன்று பெருமையுள்ள காற்றிலும் பொருந்தியுள்ளான். சந்திர மண்டலத்தின் தன்மை அறிந்து அதனுள்ளே விளங்குவான். அச்சந்திர மண்டல அறிவு விளங்க அதைப் பெருகச் செய்வான்.

3003. பூதங்களின் பகுதியை கட்ந்து முடிவை அடைந்தாலும் அவை நுட்பத்தில் ஒளீ அணுக்களாய் சிவ சோதியில் நிற்கும். பதப்படுத்தும் உலகத்தில் அவனை அடைக்கலமாய்க் கொண்டவர்க்குத் தாங்கும் பெரும் பொருளாகவும் விளங்குகின்றான். தன்னால் படைக்கப்பட்ட உலகம் அனைத்துக்கும் தான் முழுமுதற் பொருள் ஆவான். பக்குவ ஆன்மாக்களுக்கு தானே சிவ குருவாய் எழுந்தருளி ஆட்கொள்வான்.

3004. வீடு பேற்றுக்கு நிலைக்களமாக உள்ள சிவவுலகமே சிவபெருமனின் திருமுடியாகும். ஆயினும் உலகம் ஏழும் அப்பொருமானுடைய வடிவம் ஆகும் அத்தனின் திருவடி பாதலம் ஏழுக்கும் கீழ் ஊடுறுவி நிற்பது. ஆனால் அறிவில்லாதவர் அவ்வியலபை உணர மாட்டார்.

3005. மேலே சிவமே நம்மை எல்லாம் நடத்தும் தலைவன் ஆவான். அப்பொருமான் முத்தி உலகத்தில் பேரொளியாய் விளங்குவான். அவனே திங்கள் கதிரவன் அக்கினி என மூன்று சுடர்களாய் விளங்குபவன். அவனே மேல் உலகங்களுக்கு மேலாகவும் கீழ் உலகங்களுக்கு கீழாகவும் இருப்பவன். இவ்வுலகங்களுக்கு நடுவாய் இருந்து இவற்றை இயக்குபவனும் அவனே ஆவான்.

3006. உலகம் ஏழினையும் கடந்து மேலும் உய்ர்ந்துள்ள பெருமை கொண்டவன். உருவம் பொருந்தும் நிலைகளை இயல்பாகவே கடந்தவன். மிக நுட்பமானவன். அடியார் விரும்பி அடைந்த ஒலிக்கின்ற திருவடியை காணும் போது அவர்கள் செல்லும் நெறியில் நின்று அழைத்துக் கொண்டு செல்பவனாக உள்ளான்.

3007. நான்கு பக்கங்களிலும் உலவும் நோக்கத்துடன் பெருங்கடல் சூழ்ந்த நிலவுலகம் எல்லாம் இறைவன் நிறைந்து விளங்குகின்றான். அந்த உலகத்தில் வாழ்பவர்க்குப் பயன் தரக்கூடியவை யாவும் முன்னமே படைத்தான். உலகில் உள்ள உயிர்கலையெல்லாம் காக்கும் பொருட்டுப் பொன் ஒளியில் விளங்கி நின்றான்.

3008. சிவன் பரனாகவும் அபரனாகவும் பொருந்திப் பல ஊழிகளிலும் நுண்மையாகவும் பருமையாகவும் விளங்கி அகன்ற உலகங்களைத் தாங்கி அவற்றைக் காத்து வருகின்றான் என்ற உண்மையை உலகத்தார் அறியவில்லை. அவன் பரவியிருக்கும் எல்லையைக் கடந்தும் ஆன்மாவினூடும் நிறைந்து விளங்குகின்றான்.

3009. பருமை நுண்மை ஆகியவற்றிலும் சிவமே நிறைந்து விளங்கும். அதனால் வேறே பெரிய வணங்கக்கூடிய தெய்வம் ஒன்று இல்லை. ஆதரமான உடம்பும் ஆதாரம் கடந்த நாதமும் நாதாந்தமும் உயிர்க்கு வேறாக விளங்கும். அகண்ட வடிவமும் ஆகிய அவனே பெரிய தெய்வம் ஆகும். அவனே பருமை நுட்பம் ஆகியவற்றை இனைக்கும் பிராணனாகவும் விளங்குகின்றான்.

3010. சுற்றியிருக்கும் திசைகளில் எல்லாம் சிவனே அவ்வாறு ஆன போது அவனுக்கு அப்பால் ஒரு கடவுள் உண்டு என்று மனிதரே நீங்கள் சொல்ல வேண்டா. புகையானது மேல் தோன்றிக் காணப்பட்டாலும் அது தீயின்றே தோன்ரறியது.. அது போல் உண்டானவை எல்லாம் எங்கள் ஆதிபெருமானான சிவத்தினிடமிருந்தே தோன்றின என்று அறிவீர்.

3011. சிவன் கீழ் மேல் என்று கூறப்படும் எல்லாப் புவனங்களாகவும் அவற்றின் வேறாகவும் நிறைந்துள்ளான். இப்பெருமான் எல்லாமாகி நிற்பினும் உலகத்தவரால் காணப்படத் தோன்றுபவன் அல்லன். சிவனே பல வகையான உயிர் இனங்களில் உயிர்ச் சத்தியாய் இருந்து இயக்குபவனாய் உலக நிலையில் பொருந்தி உலகத்தவரால் நம்புதற்குப் பாத்திரமாகவும் உள்ளான்.

3012. சிவன் தந்திரக்கலை மந்திரக்கலை உபதேசக்கலை என்னும் மூன்றையும் கடந்து அப்பால் நின்றவன். அவனை விரும்பி நில்லுங்கள். அவனே எல்லாத் தத்துவங்களுக்கும் தலைவன் ஆவான். அவன் விலை மதிக்க முடியாதவன். அவனைத் தேவர்களுள் ஒருவனாய் வைத்து எண்ண இயலாது. அத்தகைய அரியவன் நீங்கள் எண்ணியபோது சிறந்து உங்களிடம் விளங்குவான்.

3013. தலைமுறை தலைமுறையாக நான்முகன் செய்வதற்குக் காரணமான படைபுச் செயலை ஒழித்து திருமால் காக்கும் தொழிலால் விருப்பம் பெருகுவதற்குரிய பற்றை நீக்கி அடயோகம் முதலிய துன்பம் அளிக்கக் கூடிய செயல்களினின்றும் நீக்கி நான் உய்யும்படி என்னை அன்பால் அகப்படுத்திக் கொண்டான்.

3014. இறைவனின் திருவடியே எட்டுத் திக்குகளிலும் விளங்கி ஒளி தருவதாயிற்று. நாதமே வைகரி வாக்குக் காரணமாவதைப் போன்று அழியாது இருப்பவன் அவன் ஒருவனே. ஒளிமயமாகி நிலம் நீர் தீ காற்று வானம் சந்திரன் கதிரவன் அக்கினி ஆன்மா ஆகிய ஒன்பது பகுதிகளிலும் மலரில் மணம் போன்று விளங்குகின்றான்.

3015. எம்பெருமான் புறக்கண்னுக்குக் காணப்படாமல் அகக் கண்ணில் விளங்குபவன். ஆதலால் அவன் இல்லாதவன் அல்லன். கல் போன்ற நெஞ்சத்தை கசியச் செய்து நிற்பவரிடம் விளங்கித் தோன்றுபவன். பழைமையானவன். தூய்மையானவன். நடுக்கம் அற்றவன். குற்றம் இல்லாத மாணிக்கம் போன்ற ஒளியுடையவன். இவ்வாறு விளங்கும் சொல்வதற்கு அரிய பேரொளி ஒளியாகவும் இருளாகவும் சீவர்களைத் தொடர்ந்து நின்று அருளினான்.

3016. இறைவன் உள்ளம் என்ற மண்டலத்தில் ஒடுங்குபவனாய் உள்ளவன். உயிர்கள் உலக மயமான போது அவற்றின் உள்ளே நிலை பெற்றவன். அப்போது ஒளிமயமான சடையையுடைய நந்தியெம்பெருமான் பொறிகளை இயக்கும் கள்ளத் தலைவனாக உள்ளான். பல்வேறு வள்ளல் தன்மையை அறிந்து அவனைச் சிந்திக்கும் உயிரின் துன்பம் தருவதான பிறப்பை அறுத்து நிற்பவனாக உள்ளான்.

3017. ஒருவருக்கொருவர் மாறுபட்ட தேவரும் அசுரரும் நாள்தோறும் தோத்திரம் செய்து சிவபெருமானின் ஒலிக்கின்ற அடியை விரும்பி வணங்குவர், ஆனால் அடியார்கள் அகமும் புறமும் ஒத்து அவனது உதவும் தன்மையை நினைத்து உள்ளம் கசிந்து நிற்பர். அவ்வடியார்க்கு அவரது ஊனை நீக்கி உணர்வைப் பெருக்கிப் பேரொளியாய் விளங்குவான்.

3018. இறைவன் பூதாகாயத்தில் மட்டும் நிலைபெறுபவன் அல்லன். பெரிய கதிராகவும் அறிவாகாயம் என்ற ஆகாய வடிவில் உள்ளவன். அவன் புறக்கண்ணுக்குக் காட்சி தருபவன் அல்லன். ஆனால் அகக்கண்ணுக்குப் புலப்படுபவன் ஆவான். உள்ளப் பண்பின்றித் தோத்திரங்களால் மட்டும் அறியப் படுபவன் அல்லன். உள்ளப் பண்போடு அவன்பால் அன்பும் உடையவர்க்கு வெளிப்பட்டருள்வான். உயிர்கள் அடையும் எல்லா ஆனந்தத்துக்கும் காரணமாக உள்ளவனும் எம் சிவபெருமானே ஆவான்.

3019. எம் சிவபெருமான் எங்கும் உள்ளவரால் விரும்பப்படும் ஆனந்தக் கடல் போன்றவன் முத்தைப் போன்ற சடையுடையவன். நீல ஒளியை உடையவன், ஞானியர் ஒளியில் விளங்கும் இறைவனை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பர். ஆனால் சித்தரும் தேவரும் அறிவு ஆராய்ச்சியால் தெளிந்து அறியமாட்டார்.

3020.முகத்தின் முன்பு எந்த நிறங்கள் காணப்படுமோ அந்த அந்த நிறங்க்ளின் தன்மைக்கேற்ப இறைவன் விளங்குவான். அறம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இன்பம் அமையும். தீய ஒழுக்கம் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப் படுகின்றதோ அந்த அளவு பாவம் அமையும். இத்தகைய உண்மை நிலையை அறிந்திருந்தாலும் மக்கள் ந்ன்மையை கடைபிடிக்கவில்லையே.

3021. அருள் மழை பொழிகின்ற இறைவன் இவ்வுலகில் பல் தலங்களில் உள்ளான். மேல் உலகில் இருக்கின்றான். எங்கும் இருக்கின்றான். எனவே அவன் எல்லாப் புவனங்களிலும் நிறைந்து விளங்கும் புண்ணிய மூர்த்தி. அப்பெருமானை சீவரின் அஞ்ஞான இருளில் உள்ளான். ஞான ஒளியில் கதிர் ஒளிபோன்று அவன் விளங்குவான்.

3022. உணர்வாகவும் மிக மேலானதாகவும் அறிவது சூக்குமமான எம்பெருமானையே ஆகும். அப்பெருமான் அணைப்பவனாகவும் நுட்பமானவனாகவும் உடல் உணர்வால் அண்டகாயத்தில் உயிர் ஒளியிலும் நிலைபெறுபவனாகவும் விளங்குகின்றான்.

3023. இறைவன் தன் ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கியுள்ளான். தன் ஆற்றலால் தான் அணுவைக் காட்டிலும் நுட்பமாய் இருக்கும் தன்மை உடையவன். அவனது வலிமையை நோக்கில் எட்டுக் குலமலைகளும் ஒப்பாகச் சொல்லப்படா. அவனது ஆற்றலால் அகன்ற கடலிலும் பரவியுள்ளான்.

3024. என் தலைவனான சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் மற்றவர் யாவரினும் மேம்பட்ட பெருமையுடையவன். ஆயினும் அவன் சிறிய ஊன் உடலிலும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான். அவன் விண்ணுலகத்தவராலும் அறிய முடியாத பேரொளியுடையவன். மண்ணுலகத்தவர் செய்யும் தவத்தின் ஆற்றலுக்கேற்ப அறியப் படுபவனாக இருக்கின்றான்.

3025. பிண்டமான் உடலில் ஆல விதையைப் போன்று எழும் சீவசத்தி பெரிய ஆலமரம் போன்ற உடலில் மேற்சென்று பக்குவப்பட்டு ஒளியாய் விளங்கியது. அதை விளங்கச் செய்து அனுபவித்தவர் அதில் திளைத்திருந்தார். அந்த உணர்வைப் பெற்றிராத மூடர்கள் உடம்பைக் கடந்து ஒளியை அறியாது உடலே பெரிது என்று எண்ணி மயங்குகின்றனர் என்னே அறியாமை.

#####

Read 1940 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879345
All
26879345
Your IP: 44.204.164.147
2024-03-19 09:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg