Print this page
திங்கட்கிழமை, 03 January 2022 10:00

பாராம்ரி! (தேனி சப்த நிலை)

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஆறாம் பயிற்சி-பாராம்ரி! (தேனி சப்த நிலை)

நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும். உடல் செல்களை குளிர்சி அடையச் செய்து செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். ஒம் என்பதில் மனதில் ஒ என நினைந்து ம் என்ற ஒலியை மட்டும் வெளியே கேட்கும்படி உச்சரித்தால் வண்டின் ரீங்கார ஓசை கேட்கும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

Read 894 times
Login to post comments