Print this page
திங்கட்கிழமை, 03 January 2022 10:02

உத்கீத்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

ஏழாம் பயிற்சி-உத்கீத்!

நற்பயன்கள்- அளவிடமுடியா ஓர் பேரானந்த, இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.

#####

Read 780 times
Login to post comments