Print this page
திங்கட்கிழமை, 03 January 2022 10:08

க்ஷீத்தலி! (நாக்கு வளந்த நிலை)

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

#####

பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி! (நாக்கு வளந்த நிலை)

நற்பயன்கள்: உடலுக்கு குளிர்சியை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும். அல்சர் போன்ற குடல் புண்கள் குணமாகும். மனதை சுத்தப் படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். படபடப்பு குறைந்து மன அமைதி உண்டாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.

3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

#####

Read 897 times
Login to post comments