gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சட்டைமுனி சித்தர்

Written by

சட்டைமுனி சித்தர்


விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மகனாய் சட்டைமுனி ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் மாதத்தில் பிறந்தார். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்றுத் தம் தாய் தந்தையருக்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு அணிந்திருந்த ஒருவரைப் பார்த்து அவருக்கு ஏதோ சக்தி இருப்பதாக நினைத்து அவருடன் சென்று விட்டார். பின்னர் போகரிடம் வந்து சேர்ந்தார்.
கொங்கணர் இவருடைய நண்பரானார். ஞானத்தை மனித குலம் அனைத்திற்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுதினார். நேரிடையாக எழுதுவதை தடை செய்ய சிவபெருமானிடம் சித்தர்கள் செல்ல இவரின் நூல்கள் குகையில் வைத்து பாதுகாக்கும்படி செய்தார்.
சட்டைமுனி ஊர் ஊராக சுற்றி வரும்போது தூரத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் கோபுரம் கண்டு அதன் நடை சாத்துவதற்குள் தரிசிக்க விரைந்தார். அதற்குள் கோவில் நடை சாத்தப்பட்டது. ஏமாற்றத்துடன் வாசலில் நின்று ரங்கா, ரங்கா என கத்த தவுகள் தாமாக திறந்தன. அரங்கணின் தரிசனம் கிடைத்தது. அவரின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக சட்டைமுனிமேல் வந்து சேர்ந்தன. இவர் ரங்கா எனக் கூப்பிட்ட சப்தம் கேட்டு திரண்ட மக்கள் வியப்படைந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டைமுனி இறைவனுடன் ஒன்றாக கலந்தார். சட்டைமுனி ஜீவசமாதி திருவரங்கத்தில் உள்ளது.
சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 ஆகிய நூல்கள் எழுதினார்.
சட்டைமுனி சித்தர் தியானப்பூசைக்கு
“சித்தவேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கணிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத
மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம்
அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், விருட்சிப்பூ, ஜாதிப்பூ ஆகிய மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி
கவலைகளை அகற்றுபவரே போற்றி
காம குரோதத்தை அழிப்பவரே போற்றி
சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி
திருவரங்கனின் அருள் பெற்றவரே போற்றி
தேகத்தைக் காப்பாற்றுவாய் போற்றி
நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி
நோய்களை அழிப்பவரே போற்றி
ராமநாமப் ப்ரியரே போற்றி
வருணபகவானை வணங்குபவரே போற்றி
வில்வ அர்ச்சனையை ஏற்பவரே போற்றி
ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி- செவ்வாழை இவற்றுடன் பலவர்ண வஸ்திரம் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திற தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல் புகை பிடித்தல் குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும். உறவினர்களின் பலம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகமாகும். சகவாச தோஷம் நீங்கும். மன வளர்ச்சி அபிவிருத்தி அடையும்.
 “ஓம் ஸ்ரீசட்டைமுனி சுவாமியே போற்றி”
                                                       ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932886
All
26932886
Your IP: 34.201.122.150
2024-03-29 03:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg