Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:34

இயற்பகை நாயனாரை சோதித்த தூர்த்தர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே போற்றி!
பெருமருள் சுரக்கும் பெருமான் போற்றி!
தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!
உம்பர்கட்கரசே ஒருவ போற்றி!
பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய் போற்றி!
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

இயற்பகை நாயனாரை சோதித்த தூர்த்தர்!

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர். இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து சிவபெருமான் காமுகன் வேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். இயற்பகையாரே நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்கினும் இல்லை எனக் கூறாது வழங்கும் உம் வள்ளல் தன்மை பற்றித் தெரிந்தபின் உன்னிடம் ஒன்று வேண்டி வந்தேன் என்றார். அடியவரே என்ன தயக்கம். யாதாயிருந்தாலும் என்பக்கம் இருந்தால் அது எம்பிரான் அடியவர் உடமை. வேண்டியது கேள் என்றார். அடியவர் நீங்கள் தரலாம் என்றால் நான் கேட்கலாம் என்றவரிடம் கேளுங்கள் என்றார். ‘உன் காதல் மனைவியைத் தா’ என்றார் அடியவர். தன்னிடம் இருப்பதைக் கேட்டார் என மகிழ்வுற்று நான் தந்தேன் என்ற இயற்பகை, மனையிடம் சென்று ‘இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு கொடுத்தனம்’ என்றார். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அம்மையார் கணவன் சொல்லைக் காக்க முனைந்து தன் கணவரை வணங்கினார். அடியார் இவளை அழைத்துபோக பயமாயிருக்கின்றது ஊர் எல்லைவரை வழித்துணையாக வர இயற்பகையாரிடம் வேண்டு கோள் விடுத்தார். அவ்வறே வருகிறேன் என உடைவாளை எடுத்துக் கொண்டு துணைக்குச் சென்றார். இச்செயலை அறிந்த சுற்றத்தாரும் ஊர் மக்களும் அதை தடுக்க முடிவு கொண்டனர். தன் முடிவை சொன்ன இயற்பகையார் ஏற்றுக் கொள்ளாமல் தடுத்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியவரிடம் நீங்கள் புறப்படுங்கள் என்றார். அடியவரும் அம்மையாரும் ஒரு திசையிலும் இயற்பகையார் ஒருதிசையிலும் சென்றனர். எந்தவிதக் கவலையோ துன்பமோ இன்றிப் போகின்ற இயற்பகையாரைக் கண்ட அடியவர் வியந்து சொன்னார். ‘பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான், என அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகின்றார். இயற்பகை முனிவா நீ வா என குரல் கேட்டுத் திரும்பினார் இயற்பகையார். பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.

#####

Read 19071 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:35
Login to post comments