ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும்
தொடர்ந்த வினைகளே! அப்பமும் பழம் அமுதும்
செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
######
சப்த மாதா காயத்திரி மந்திரங்கள்!
(ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி,
இந்த்ராணி, பத்ரகாளி/சாமுண்டா, துர்கை, பகவதி)
######
ஸ்ரீ ப்ராஹ்மி காயத்ரீ
(தோல் நோய் நீங்கி முக எழில் பெற)
”ஓம் ப்ரஹ்ம சக்த்யை ச வித்மஹே,
பீதவர்ணாயை ச தீமஹி
தந்நோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்’
(மஞ்சள் பட்டு அணிந்த தேவியே, கஞ்சனின்
சக்தியே, நெஞ்சில் வைத்தேன், உன்னைத்
தஞ்சமடைந்தேன் ப்ராம்மி தாயே.)
######
ஸ்ரீ மஹேஸ்வரி காயத்ரீ
(மங்களங்கள் பெருக)
”ஓம் மஹேஸ்வர ஹம்சாயை ச வித்மஹே,
சூல ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’
(வெண்பட்டு அணிந்த முக்கண்ணன்தேவியே, சூலம்
கரத்தில் ஏந்திய மஹேஸ்வரி தாயே, முக்காலமும்,
தஞ்சமடைந்தேன் மஹேஸ்வரி தாயே.)
######
ஸ்ரீ கௌமாரி காயத்ரீ
(ரத்த உறவுகள் நலமுடனிருக்க)
”ஓம் சிகிவாஹனாய வித்மஹே,
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்’
(மயில் வாகனம் கொண்டவளே வடிவேலன்
துணையை பெற்றவளே, சீரான அருள்
தாராயோ கௌமாரி தாயே.)
######
ஸ்ரீ வைஷ்ணவி காயத்ரீ
(எதிர்பாரா ஆபத்துக்கள் விலக)
”ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே,
சக்தி ஹஸ்தாயை ச தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்’
(சங்கடங்கள் நீங்க, சக்கரத்தை கரத்தினில்
கொண்டு விரைந்து வருவாய், உன்னை
சரணடைந்தேன் வைஷ்ணவி தாயே.)
######
ஸ்ரீ வராஹி காயத்ரீ
(தடைகள் அகன்று ஏற்றமான வாழ்வு கிட்ட)
”ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”
(தண்டமுடன் கலப்பையை ஏந்தி சண்டையிடும்
தீவினைகளை அகற்றுவாய் சியாமளாதேவியே
பணிந்து வேண்டினேன் வராஹி தாயே.)
”ஓம் மகிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”
(எருமைக் கொடியுடையவளே உன் பெருமை
பரவி நிற்க தொழுதவர் வாழ்வில் கருமை
வினைநீங்க அருள்வாய் வராஹி தாயே.)
######
ஸ்ரீ இந்த்ராணி காயத்ரீ
(இல்லறம் சிறந்திட)
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”
(கருமைநிற இந்திரையே, வஜ்ரத்தை ஆயுதமாக
கொண்டவளே, அரு நலம்தான் உன்னருளே, பெருங்குணம்
கொண்டு காப்பாய் நிழல் தரு இந்திராணி தாயே.)
######
ஸ்ரீ பத்ரகாளி/சாமுண்டா- காயத்திரீ
(நரம்புக் குறைகள் நீங்க)
“ஓம் க்ருஷ்ண-தூம வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.
(கரு நீலப் புகை கிருஷ்ணனின் நிறத்தைக் கொண்டவளே,
சூலத்தை ஆயுதமாக ஏந்தியவளே, சாமுண்டி தாயே,
பத்ரகாளியே என்னை காத்து அருள்வாய்.)
######
ஸ்ரீ துர்கை காயத்திரீ
(மாங்கல்ய பாக்யம் நிலைத்திட)
’ஓம் காத்யாயனாய வித்மஹே,
கன்னியாகுமார்யை ச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்”
(காத்யாயன முனியின் மகளே, காத்திடுவாய்
மாங்கல்யம், கன்னிகையே மாத்திடுவாய்
மனத்துயரையே மாதாவே சரணம்.)
######
ஸ்ரீ பகவதி காயத்திரீ
(எதிர்ப்புகள் நீங்க)
‘ஓம் பூஹா சூலின்யை ச வித்மஹே
மகா துர்க்காயை தீமஹி
தன்னோ பகவதி ப்ரசோதயாத்”
(சிவனின் உக்ரவடிவான சூலினியே, சரபேஸ்வரரின்
இறக்கையில் இருப்பவளே, எதிர்களின்
தாக்குதல்களிலிருந்து காப்பாய் பகவதி தாயே!)
######