ஓம்நமசிவய!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
#####
வராக அவதாரம்!
தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தாலும் தேவர்களின் கௌரவம் மற்றும் இறையருளும் மேலோங்கி இருப்பதன் காரணம் முனிவர்களும் யோகிகளும் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆகுதி என்ற அவிஸ்ஸே தேவர்களின் பலத்திற்கு காரணம் என்பதை அறிந்த இரண்யாட்சன் தேவர்களுக்கு அவிஸ் கிடைக்காமல் இருக்க என்னவழி என்று யோசித்து பூமியிருந்தால்தான் யாகங்கள் நடைபெற்று தேவர்களுக்கு அவிஸ் கிடைக்கின்றது. எனவே பூமியில்லையென்றால் தேவர்களுக்கு யாகம் நடந்து அவிஸ்கிடைக்காது என்று முடிவுசெய்து பூமியை பாயாகச் சுருட்டி பாதாள உலகத்தில் பதுக்கிவிட்டான். அவிஸ்கிடைக்காமல் துன்பமுற்ற தேவர்கள் பூமியைக் காணாததால் பிரம்மனிடம் முறையிட அவர் திருமாலிடம் சென்று வணங்கி தேவர்களின் துயரத்தை தெரிவித்தார்.
வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார் திருமால் அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார்.
அப்போது திருமாலுக்கும் பூமாதேவிக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் நரகாசுரன். தன் பிள்ளைக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று சாகாவரம் கேட்டாள் பூமாதேவி. சாகாவரம் நேரிடையாக தரக்கூடாது என்பதால் தாய் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாது என வரமளித்தார். நீ விரும்பும்போது உன்னாலன்றி அவனுக்கு மரணம் வராது என்றார். வளர்ந்த நரகாசுரன் இந்த வரத்தால் அசுர பலம்பெற்று தனக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்தான். தேவர்களையும் தவம் செய்யும் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்திய நரகாசுரன் பற்றிய செய்திகளை அவர்கள் விஷ்ணுவிடம் கூறி தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டினர்.
விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் புவனேஸ்வரி
வர+அஹ=வராஹ, வர என்றால்-மூடுபவர், அஹ என்றால் எல்லை இல்லாததற்கு எல்லையை நிர்ணயத்தல். வராஹ (யக்ஞ வராஹ) என்றால் உருவமற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும் அதற்கு உறை இடுபவர் என்று பொருள். யக்ஞவராஹம்- உலகத்தை சிருஷ்டிக்க சிறந்த சக்தியை மேற்கொள்ளும் எண்ணத்துடன் கலவரம் ,குழப்பதிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி எனப்படும்.
வராக மூர்த்தியை வழிபட கார்த்திகை மாதம் துவாதசி திதி, சந்திர கிரகண நாட்கள் சிறந்தவை. இந்த விரத காலங்களில் சிரிதளவாவது அரிசியை தானம் செய்ய வேண்டும், அவ்வாறு அரிசி தானம் செய்யாதவன் மரணமடைந்து சொர்க்கத்தை அடைந்தாலும் எல்லா வசதிகளிருந்தும் அன்னம் மட்டும் அவனுக்கு கிடைக்காது. நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு திரும்பிக் கிடைக்கும்.
வராகப்பெருமாளை வழிபட்டால்-ராகு தோஷம் நீக்கும், 1.ஸ்ரீமுஷ்ணம்-பூவராகர், 2.திருவிடந்தை-ஆதிவராஹமூர்த்தி. வழிபடுவோருக்கு தாமதம் நீங்கி திருமணம் விரைவில் நடக்கும். நன்மக்கட்பேறு கிட்டும் கிரஹ பீடைகள் விலகும்.
#####