சக்திபீடம்-1-அ/அம்
எண் சக்திபீடம்-1
அட்சரம் அ/அம்- (முதலாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் காமரூபம் / காமகிரி
அட்சரதேவிகள் அமிர்தா/அஜாமுகீ
அங்கம் யோனி
பைரவர்/இறைவன் உமாநந்தா
அங்கதேவி/இறைவி காமாக்யா / காமரூபினி / காமேஸ்வரி / காமா
பீடங்கள் காமரூபாயை நம- யோனி பீடம்
51-ல் நம் உடலில் தலையில்
ஊர் கௌகாத்தி
அருகில் பிராக்ஜோதிபுரம்
மாகாணம்/நாடு அஸ்ஸாம்
இது காமரூபம் / காமகிரி எனும் மகாசக்தி பீடம். கருவறையில் அம்மன் சிலையோ / விக்ரகமோ கிடையாது. அருவுருவம். ஒரு சிறிய நீர்த்தொட்டி 32 அங்குல அளவில் திரிகோண வடிவத்தில். அதன் மையத்தில் கல்லால் வடிக்கப்பட்ட யோனி அங்கம் உள்ளது. புறக்கண்களுக்கு தெரியாவண்ணம் தொட்டியில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். கருவறையில் மறைவிடமாய் உறைவிடம் கொண்டுள்ள அன்னையை நாம் அதிர்வலைகள் மூலமாக உணர்ந்து ஆனந்தப்படலாம். யோனிபீடம் என்பர்.
இங்கு அனுஷ்டிக்கப்படும் கௌமார்க்க குல சாஸ்திரம் சாக்தர்களுக்கும் ஞானிகளுக்கும் முக்தி அளிக்க வல்லது.
திருக்குளம் – புனிதநீர்- சௌபாக்ய குண்ட் உள்ளது.
கௌல / வாம மார்க்க முறைப்படி அம்மனுக்கு பூஜை வழிபாடுகள்.
உபசக்தி பீடங்கள்:
காமாக்யாவில் தேவியின் ரஜஸ் விழுந்த இடம் ‘வம்சா’ இங்குள்ளது.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ரத்த வர்ண நிறம்-வெண்ணிற ஆடை ஆட்டின் முகம் சதுர் புஜங்களில் வலது கரங்களில் வில்லும் வர முத்திரையும், இடது கரங்களில் அம்பும் அபய முத்திரையுடன் ஹம்ஸ வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் அஜாமுகி
ரக்தவர்ணா ஹம்ஸகா தவளாம் சுகரீ
சராஸநம் வரம் தக்ஷே
தத்தே வாமே சரா அபயௌ:
#####