சக்திபீடம்-4-ஈ/ஈம்
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-4,
அட்சரம் ஈ/ஈம்(நான்காவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் கோஹாப்பூர்/கோல்பூர்/கோல்கிரி/கோலாடிபட்டணம்
அட்சரதேவிகள் ஈஷிணிதேவி/ ஈஷ்வரி
அங்கம் நேத்திரம்
பைரவர்/இறைவன் க்ரோதீசர்
அங்கதேவி/இறைவி மகாலட்சுமி,/கோலாபுரேசி
பீடங்கள் பௌண்ட்ரவர்த்தனயை நம கரவீரபீடம்
51-ல் நம் உடலில் இடது கண்
ஊர் கோல்ஹாப்பூர்
அருகில் மும்பை/,பூனா
மாகாணம்/நாடு மகாராஷ்டிரா
இந்த சக்தி பீடத்தை ரௌத்ர பீடம் எனும் மகாசக்தி பீடம் என்பர்.. இவறை மகிஷாசுரமர்த்தினி மகாலக்ஷ்மி என்பர். இவள் விஷ்ணுவின் பத்தினி இல்லை. கரங்களில் கமல மலர் கிடையாது. இருபுறமும் யானைகள் இல்லை. சிரத்தில் சிவலிங்கம். சக்தியும் சிவனும் சேர்ந்த தரிசனம். சிம்ம வாகனம். இங்கு மந்திரங்களை ஜபித்தால் மந்திர சித்தி கிட்டும்.
அன்னிய படையெடுப்பினால் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்ட சிலை சாம்பாஜி மகராஜினால் கண்டுபிடிக்கப்பட்டு 20.09.1712-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அபிசேகம் செய்ததால் சிலை நலிய ஆரம்பிக்க வஞ்ரலோக் மருந்து காப்பு செய்து அபிஷேகம் இல்லாமல் பஞ்சகால பூஜை நடைபெறுகின்றது.
பிரகாரத்தில் மகாகணபதி, மகாலிங்கம், மகாகாளி, மகாசரஸ்வதி, ஸ்ரீயந்திரம் ஆகிய சன்னதிகள்.
ஐந்து கோபுரங்கள் நான்கு வாயிலகள். கிழக்கு- உஜலை, தெற்கு-காத்யாயினி, மேற்கு-ஸித்த படுகேஸ்வரர், வடக்கு-கேதாரர். வீற்றிருக்கின்றனர்.
எட்டுத்திக்குகளில் கிழக்கில்-அமரேசர், தென்கிழக்கில்-கோபேஸ்வரர், தெற்கில்-வீரபத்திரர், தென்மேற்கில்-ஸித்தேஸ்வரர், மேற்கில்-பாகேஸ்வரர், வடமேற்கில்-வடேஸ்வரர், வடக்கில் ராமேஸ்வரர் வடகிழக்கில் ஸங்கமேஸ்வரர்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பொன்னிற மேனி- வலது மேல்கரத்தில் அங்குசம், கீழ்க் கரத்தில் வரமுத்திரை- இடது மேல் கரத்தில் தர்ப்பம், கீழ் கரத்தில் அபய முத்திரை யுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ஈஸ்வரீ ஸ்வர்ண வர்ணாபா வ்ருஷாரூடா ஸிதாம்சுகா
சாரிகாம் ச வரம் தக்ஷே வாமே தத்தேம் குசாபயௌ:
#####