சக்திபீடம்-6-ஊ/ஊம்
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-6 -
அட்சரம் ஊ/ஊம்(ஆறாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் மகோதயா/காதிபுரம்/கன்யாகுப்ஜம்/கன்னோசி/கன்னோஜ்/குஸூமாபுரம்
அட்சரதேவிகள் ஊர்த்வகேஷி/ ஊர்ஜஸ்வலாதேவி
அங்கம் வலதுசெவி
பைரவர்/இறைவன் சுந்தரானந்தர்
அங்கதேவி/இறைவி ஷேமகிரி/காளிதேவி
பீடங்கள் கன்யாகுப்ஜாயை நம
51-ல் நம் உடலில் இடது காது
ஊர் கன்னோஜ்
அருகில் கான்பூர்-80.கி.மீ
மாகாணம்/நாடு உத்தரபிரதேசம்
இது கன்யாகுப்ஜம் எனும் மகாசக்தி பீடம். கங்கை யமுனை நதிகளுக்கிடையே உள்ளது. பிரம்மன் முதலிய தேவர்கள் தீர்த்தமாக உள்ளனர்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ரக்த சிவப்பு நிறமேனி- நான்கு கரங்கள் வலது கைகளில் கத்தியும் வரமுத்திரையும், இடது கைகளில் கேடயமும் அபய முத்திரையுடன் காட்சி. புலி வாகனம்.
தியானஸ்லோகம்:
ஊகாரோர் ஜஸ்வலா தேவீ சார்தூல வர வாஹநா
ரக்தா சதுர்புஜ தத்தே கட்க கேட வரா பயாத்:
#####