சக்திபீடம்-7-ரு/ரும்
ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-7
அட்சரம் ரு/ரும்(ஏழாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் புரணாகிரி
அட்சரதேவிகள் ருத்திதாயி/ ருதுதாமாதேவி
அங்கம் மூக்கு
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/இறைவி மகாகாளி/
பீடங்கள் பூர்ணசைலாயை நம
51-ல் நம் உடலில் வலது மூக்கு மடிப்பில்
ஊர் பூர்ணகிரி
அருகில் உத்ராஞ்சல் மாநிலத்தி; நைனிடால் மாவட்டத்தில் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
மாகாணம்/நாடு உத்ராஞ்சல்
இது புரணாகிரி எனும் மகாசக்தி பீடம். யோகம் ஸித்தியைப் பெற்று பூரணமடையும் இடமாக மந்த்ராதிஷ்ட தேவதைகள் பிரத்தியேகமாகக் காட்சி அளிக்கும் இடம். உத்ராஞ்சல் மாநிலத்தில் நைனிடால் மாவட்டத்தில் நேபாள எல்லையை ஒட்டி தன்னாஸ் கிரமத்தில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து- தனக்பூர் வரை இரயில் பயணம். பின்னர் நடை பயணம். அடிவாரத்தில் தேவியின் தாமிரச் சிலை. மலை உச்சியில் அம்பாள் உருவச் சிலை இல்லை. மேடையில் இருக்கும் லிங்கமே செந்தூரம் பூசப்பட்டு அம்பாள்- பகவதி ஸ்வரூபமாக பாவிக்கப்படுகின்றது. ஊற்று நீரை வேறு எதற்கும் பயன் படுத்தக் கூடாது. உற்று நீர் உற்பத்தியாகும் இடத்தில் நம்மீது பட்ட நீர் மீண்டும் அந்த குட்டையில் விழாதாவாறு இருக்க வேண்டும். அருகில் உள்ள மரத்தில் பக்தர்கள் நேர்திக்கடனாக வெண்கல மணிகளை கட்டியுள்ளனர். நவராத்தி ஒன்பது நாட்கள் மட்டுமே இங்கு பக்தர்கள் அதிக அளவில்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ரக்த வண்ண நிறமேனி. வலப்புற கரங்களில் பசம், வரமுத்திரை, இடது கரங்களில் அங்குசம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ருதுதாமா ருகாராக்யா ரக்தவர்ணா வ்ருஷ ஸ்திதா
தக்ஷே பாசவரௌ தத்தே ததா வாமேங்கு சாபயௌ:
#####
சக்திபீடம்-7அ -ரு
எண் சக்திபீடம்-7அ
அட்சரம் ரு
அட்சரதேவிகள் ருத்திதாயி
அங்கம் மூக்கு
பைரவர்/இறைவன் த்திரியம்பக்
அங்கதேவி/இறைவி சுநந்தா
பீடங்கள்
51-ல் நம் உடலில்
ஊர் சிகார்பூர்
அருகில் சுநந்தாநதிக்கரை
மாகாணம்/நாடு பங்களாதேஷ்
ஹவுராவிலிருந்து பாரிஸால் வரை இரயில் பயணம். அங்கிருந்து ஷிகாபூர்வரை பேருந்து பயணம். சுநந்தா நதிக்கரையில் அழகான சூழலில் அமைந்துள்ளது.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
#####