சக்திபீடம்-8-ரூ/ரூம்
ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும்
தொடர்ந்த வினைகளே! அப்பமும் பழம் அமுதும்
செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-8
அட்சரம் ரூ/ரூம்(எட்டாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் அற்புதாசலம்
அட்சரதேவிகள் ரூகாரதேவி/ ரேனுகாதேவி
அங்கம் இடதுகன்னம்
பைரவர்/இறைவன் தண்டபாணி
அங்கதேவி/இறைவி விஷ்வேசி/ராகினி
பீடங்கள் அற்புதாசலாயை நம
51-ல் நம் உடலில் இடது மூக்கு மடிப்பில்
ஊர் ராஜமுந்திரி-படித்துறை
அருகில் கோதாவரிநதிக்கரை
மாகாணம்/நாடு ஆந்திரா
இது அற்புதாசலம் எனும் மகாசக்தி பீடம். இவள் ஆசாரப் ப்ரியை. முக்தி அளிப்பவள். கோதாவரி நதிக்கரையில் கோவில் இல்லை. எனவே ராஜமுந்திரி நதிக்கரையே சக்தி பீடமாக கருதப்படுகிறது. இவள் ராகிணி /விஷ்வ மாத்ரிகா / விஷ்வேசி எனப்படுகின்றாள். பைரவர் தண்டபாணி / வத்சநாபா என அழைக்கப்படுகிறார். இவள் ஆசாரப் ப்ரியை. மங்களம், முக்தி அளிப்பவள்.விரம மார்கானுஷ்டத்தை அனுசரித்தால் சித்தி பெறலாம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்மை நிற மேனி- ஆறு முகங்கள் ஆறு கரங்கள்- வலது கரங்களில்-சூலம், பாசம், வ்ரமுத்திரை, இடது கரங்களில்- கத்தி, கதை, அபய முத்திரையுடன் காட்சி. சிம்மவாஹனம்.
தியானஸ்லோகம்:
ரூகா ராக்யா ரேணு கேயம் ஷடாஸ்யா ஷட்புஜா ஸிதா
சூலம் பாசம் வரம் தக்ஷே வமே கட்க கதா பயாத்
ததாநா ரக்த ஸிம் ஹஸ்தா க்ரூரா லோக பயங்கரீ:
#####