சக்திபீடம்-15-அம்
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-15
அட்சரம் அம்(பதினைந்தாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் பங்களாதேஷ்-சீதகுண்ட்மலை
அட்சரதேவிகள் அம்பிகாதேவி/ அஞ்சனாதேவி
அங்கம் வலதுகரம்
பைரவர்/இறைவன் சந்திரசேகரர்
அங்கதேவி/இறைவி பவானி
பீடங்கள் கேதாராயை நம
51-ல் நம் உடலில் நாக்குநுனி
ஊர் சீதாகுண்ட்,சிட்டகாங்
அருகில் சந்திரசேகரபர்வதம்
மாகாணம்/நாடு பங்களாதேஷ்
இது கேதாரபீடம் அல்லது சட்டல பீடம் எனும் மகாசக்தி பீடம். சர்வஸித்தி அளிக்கும் தலம். பங்களாதேஷின் சிட்டகாங்-சாந்த்பூர் ரயில் பாதையில் 37 கி.மீ தூரத்திலிருக்கும் சீதாகுண்ட் என்ற நிலையத்தில் இறங்கி சீதாகுண்ட் மலை ஏறி கோவிலை அடையலாம். இவ்வுருவம் காளியாகத் தென்படும். படர்ந்து அடர்ந்த விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்த தனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் ரத்தம் சொட்டும் அசுரனின் தலை என பயங்கரத் தோற்றத்துடன் தரையில் கிடக்கும் சிவன் மீது கால்வைத்து தரிசனம். மரண ஸ்வரூபினி. அனுதினமும் சம்ஹாரத் தொழிலை மேற்கொண்டிருப்பவள்.
உபசக்தி பீடங்கள்:
வலப்புறத்தில் சதிதேவியின் கங்கணம் விழுந்த இடம் அகத்தியர் ஆசிரமம்.
அகத்தியர் ஆசிரமம் பின்பக்கம் தேவியின் மோதிரங்கள் விழுந்தன- பீடசக்தி-இந்திராக்ஷி
பீடசக்தி-இந்திராக்ஷியின் பின்பக்கம் ரேவதி நதிக்கரையில் அம்மனின் வளையல்கள் விழுந்த இடம்-பீடசக்தி- ராஜராஜேஸ்வரி.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
கரிய நிறமேனி- ஐந்து சிரங்கள்- முதிர்ந்த, மெலிந்த தோற்றம், பருத்த வயிறு, நான்கு கரங்களுடன் புலிவாகனம், வலது கரத்தில் சூலம், அபய முத்திரை, இடது கரத்தில் பாசம், வரமுத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
அஞ்ஜனா பாஞ்ஜநா தேவீ பஞ்சாஸ்யா ஜரடா க்ருஷா
மகோதரீ மஹா வ்யாக்ர வர வாஹ நமாஸ் திதா
சதுர்புஜா சூலபாச வரா பய கரா மதா:
#####