சக்திபீடம்-16-அஹ
ஓம்நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-16
அட்சரம் அஹ(பதினாறாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் சந்திரபுரம்/ கரதோயாயுகாத்யா
அட்சரதேவிகள் அஷராதேவி/ அஜாதேவி
அங்கம் கன்னம்
பைரவர்/இறைவன் வாமனர்/க்ஷீராகண்டர்
அங்கதேவி/இறைவி அபர்ணா
பீடங்கள் சந்த்ரபுஷ்கரிண்யை நம
51-ல் நம் உடலில் கழுத்து
ஊர் யுகாத்யா
அருகில் போக்ரா-32.கி.மீ-பவானிபூர்
மாகாணம்/நாடு பங்களாதேஷ்
இது சந்திரபுரம் பீடம் அல்லது கரதோயாயுகாத்யா பீடம் எனும் மகாசக்தி பீடம். பர்ணா என்றால் இலை. இலையைக்கூட உண்ணாமல் பட்டினியாக இருந்து ஈஸ்வரனை அடைய தவம் –அபர்ணா. அம்மனுக்கு உருவமில்லை. அருவுருமாக கருங்கல் - லிங்கத்திருமேனியில் இருந்து அருள்.கரதோயா நதிக்கரையில் பூதாத்திரி கோவில்-யுகாத்யா
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி. மஞ்சள் பட்டாடை. மூன்று சிகரங்கள், மூன்று கண்கள், ஆறு கரங்களுடன், இடது கரங்களில் அங்குசம், கேடயம், அபயமுத்திரை, வல்ப்பக்கம்- சூலம், பட்டாக்கத்தி, வரமுத்திரையுடன் புலிவாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அ: காராக்யா த்வஜா தேவீ த்ரிசிரா ச த்ரிலோச நா
ரக்த பீதாம்பர க்ரூர தரக்ஷூ வரவாஹ நா
ஷட் புஜா சூல பட்டாஸி வரதா ந கராந் விதா
வாமேங்குச மஹா கேடா பயாத் தத்தே கரை க்ரமாத்:
#####